Skip to main content

Posts

Showing posts from July, 2014
ஆசை காதலுக்கும் கனவு வேலைக்கும் பெரிய ஒற்றுமை உள்ளது.. இரண்டு விஷயங்களுக்காகவும்  வெகு நாட்கள் காத்திருக்க வேண்டும். கடைசியில் கிடைத்ததை ஏற்றுக் கொண்டாக வேண்டும். கார்த்திக் பிரகாசம்.
காடுகளை அழித்து கட்டடங்கள் ஆக்கிவிட்டு காற்றுக்காக காத்திருக்கிறோம்.. கார்த்திக் பிரகாசம்.. 
படித்த படிப்புக்கான வேலைக்குத் தான் போவேன் என்று நானும் ஒரு காலத்தில் அடம் பிடித்துக் காத்துக் கொண்டிருந்தேன்.. எனது துறைச் சார்ந்த வேலைக்காக போராடினேன். எனது போராட்டம் மாதக் கணக்கில் வருட கணக்கில் நீண்டுக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் குடும்பத்துக்காக அப்பா வாங்கிய கடனும், அப்பா கஷ்டப்படும் நிலையைப் பார்த்து அம்மாவின் கண்களில் வழிந்த கண்ணீரும் என்னை ஏதோ ஒரு வேலைக்குச் செல்ல துரத்தியது. பிறகு ஒரு கம்பெனியில் வேலை. அப்பாக்கும் அம்மாக்கும் சந்தோஷம். இன்று வருடங்கள் உருண்டோடிவிட்டன. இருந்தாலும் மனதில் ஒரு குற்ற உணர்ச்சி கொன்று கொண்டு இருக்கிறது. கார்த்திக் பிரகாசம்..
பணம் சம்பாதிக்க பயன்படும் கருவி அல்ல கல்வி. உலகத்தை ஆள கிடைத்த ஆயுதம். கார்த்திக் பிரகாசம் ..

அப்பா -- அன்றைய இளைஞன்

அரபு நாட்டில் அடிமையாக வாழ சொத்துப்பத்துகளோடுச் சேர்த்து தன் சொந்த பந்தங்களையும் அடமானம் வைத்துச் சென்றவன் அன்றைய இளைஞன்.. கார்த்திக் பிரகாசம். ..