படித்த படிப்புக்கான வேலைக்குத் தான் போவேன் என்று நானும் ஒரு காலத்தில் அடம் பிடித்துக் காத்துக் கொண்டிருந்தேன்.. எனது துறைச் சார்ந்த வேலைக்காக போராடினேன். எனது போராட்டம் மாதக் கணக்கில் வருட கணக்கில் நீண்டுக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் குடும்பத்துக்காக அப்பா வாங்கிய கடனும், அப்பா கஷ்டப்படும் நிலையைப் பார்த்து அம்மாவின் கண்களில் வழிந்த கண்ணீரும் என்னை ஏதோ ஒரு வேலைக்குச் செல்ல துரத்தியது. பிறகு ஒரு கம்பெனியில் வேலை. அப்பாக்கும் அம்மாக்கும் சந்தோஷம். இன்று வருடங்கள் உருண்டோடிவிட்டன. இருந்தாலும் மனதில் ஒரு குற்ற உணர்ச்சி கொன்று கொண்டு இருக்கிறது. கார்த்திக் பிரகாசம்..