Skip to main content

Posts

Showing posts with the label சிறுமி
      நம் நாட்டில் " பிச்சை கேட்பது " பிரதானமான தொழிலாகிக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகமும் பயமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது... மக்கள் அதிகம் கூடும் இடங்களான, திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களின் வாசல்களிலும், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலும் சிலர், பொது மக்களிடம் பணம் கேட்பதும், ஒரு வேளை தர மறுத்து விட்டால் அவர்கள் பின்னாடியே சென்று கெஞ்சுவதுமாக எண்ணிக்கையில் சிலராக இருந்த இவர்கள் இன்று பலராக பலவிதமாக பெருகிக் கொண்டு வருகின்றனர்... பணத்தைத் தவிர மற்ற உதவிகள் செய்ய முன்வந்தாலும் அவர்களில் பெரும்பாலனோர் ஏற்றுக் கொள்வதில்லை.. இதில் குழந்தைகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை தான் அதிகமாக காணப்படுகிறது.. சில நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் மனதளவில் மிகவும் பாதிப்பதாக இருந்தது.. வார விடுமுறை நாளில் நண்பர்களுடன் வெளியே சென்றிருந்தேன். ஒரு வணிக வளாகத்தில் இருந்து வெளியே வரும் போது, 5 முதல் 8 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி என்னுருகில் வந்து கையை நீட்டினாள். நான் அந்த சிறுமியிடம் என்ன படிக்கிறாய்.. உன் பெற்றோர்கள் மற்றும் வீடு எங்கே என்ற...