இருபுறமும் இறுகப் பிடித்திருக்கின்றன கைகள் தளர்த்த முடியவில்லை மேலிருந்து யாரோ நெருப்பை அள்ளி வீசுகிறார்கள் அனல் எரிக்கிறது மெழுகைப் போல் தோலுருகி உரிகிறது நிலமெங்கும் வடியும் என் நிணவாடை நாசியைத் துளைக்கிறது கண்களும் வாயும் வெற்று குழிகளாகையில் நீண்டு வந்தது ஒரு நீலநிற கை தோலுரிந்து நிணமிழந்து நின்ற ஓர் வெற்றுக் கூட்டை பற்றியது இறுக்கிய கைகள் தளர்ந்தன உடல் முழுவதும் நீலம் பரவியது இலகுவாகி மேல் பறந்தேன் மனிதர்களற்ற பசுமையான அகண்ட வெளியில் பட்டாம்பூச்சிகளோடு உயிரோடு இருக்கிறேன் கார்த்திக் பிரகாசம்...