இன்னுமொரு பொழுதை கழித்துவிட்ட பெரும் நிம்மதியில் கரைகிறது இரவு அடுத்த பொழுதையும் தாட்டிவிடும் அச்சத்தில் புலர்கிறது விடியல் யாவற்றையும் இழுத்தணைத்தவாறு ஏதோவொரு நம்பிக்கை நாட்களை உருட்டிச் செல்கிறது கார்த்திக் பிரகாசம்...
உங்களுக்கும் எனக்கும் ஒரே வித்தியாசம் தான் அறிவாளித்தனத்தை நிரூபிக்க நீங்கள் பெரும் பிரயத்தனப்பட்டு கடைசியில் முட்டாளாகுகிறீர்கள் நான் எப்போதும் சந்தோசமான ஒரு முட்டாளாகவே இருக்கின்றேன்... கார்த்திக் பிரகாசம்...
முதலில் அவர்கள் என் சாதியைத் தான் விசாரித்தார்கள் அதன்பின் மாமிசம் உண்பதை உறுதியாக்கிக் கொண்டார்கள் இறுதியில் நேரடியாகவே சொன்னார்கள் முஸ்லீம்களுக்கு நாங்கள் வீடு தருவதில்லையென்று கார்த்திக் பிரகாசம்...