Skip to main content

Posts

பைத்தியக்காரனின் சிந்தனை

விடியும் வேளையில் உறங்கச் சென்றேன் விடிந்தததை அறியாமல் உறங்கிக் கிடந்தேன் உறக்கம் விரட்டி விழிக்கையில் இருள் சோர்ந்திருந்தது கடினப்பட்டு இருளை விரட்டி விரட்டி விடியும் வேளையில் உறங்கச் சென்றேன் விடிந்தததை அறியாமல் உறங்கிக் கிடந்தேன் கார்த்திக் பிரகாசம்..

பெருங்கூட்டு

கலைந்து சேர்ந்து ஒட்டி உதறி தயங்கி நின்று துரத்தி வந்து பெருங்கூட்டாய் இணைந்தே பயணிக்கின்றன மேகங்கள் கார்த்திக் பிரகாசம்...

வீடென்பது

வெட்கக் கூச்சல்களும் முத்தச் சத்தங்களும் மோக முனகல்களும் உச்சத்தின் போது சிதறிய கெட்ட வார்த்தை முணுமுணுப்புகளும் காமத் தடயங்களாய்  கரைந்திருக்கும் அதுவே எங்கள் வீடென்பது கார்த்திக் பிரகாசம்...

துளி

புகையும் தீயில்  இரத்தத் துளிகளைச்  சிந்தினேன் கொழுந்துவிட்டு எறிந்தது காதல் கார்த்திக் பிரகாசம்...

நீலநிற கை

இருபுறமும் இறுகப் பிடித்திருக்கின்றன  கைகள் தளர்த்த முடியவில்லை மேலிருந்து யாரோ நெருப்பை அள்ளி வீசுகிறார்கள் அனல் எரிக்கிறது மெழுகைப் போல் தோலுருகி உரிகிறது நிலமெங்கும் வடியும் என் நிணவாடை நாசியைத் துளைக்கிறது  கண்களும் வாயும் வெற்று குழிகளாகையில் நீண்டு வந்தது ஒரு நீலநிற கை தோலுரிந்து நிணமிழந்து நின்ற ஓர் வெற்றுக் கூட்டை பற்றியது இறுக்கிய கைகள் தளர்ந்தன உடல் முழுவதும் நீலம் பரவியது இலகுவாகி மேல் பறந்தேன்  மனிதர்களற்ற பசுமையான  அகண்ட வெளியில் பட்டாம்பூச்சிகளோடு உயிரோடு இருக்கிறேன் கார்த்திக் பிரகாசம்...