Skip to main content

Posts

Showing posts from March, 2017
எப்படி புரண்டு புரண்டு படுத்தும் உறக்கம் விழிகளை உரசவில்லை.  அது ஏனொ தெரியவில்லை ரயிலில் முன்பதிவு இருக்கைக் கிடைக்கும் போதெல்லாம் மட்டும் அவ்வளவு எளிதில் உறக்...
ஜன்னலோர இருக்கை சாரல் மழை செவிகளில் மெல்லிசை வருடும் பூங்காற்று கலைந்த தேகம் கலையாத காதலியின் முகம் தொலைவு கடந்தும் தொடங்கிய இடத்திலேயே நிற்கும் மனம் முடிந்த ...
நியூஸ்7 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பழ.கருப்பையா அவர்களின் நேர்காணலை முகப்புத்தகத்தில் பலபேர் பரிந்துரைத்திருந்தனர். எனக்கும் பழ.கருப்பையாவின் பேச்சாற்றல் பிடிக்கும் என்பதனால் அந்த நேர்காணலைப் பார்த்தேன். பேச்சிலே தெளிவு.கலைஞர் தன்னைத் திருப்பி அழைத்த போது ஏற்பட்ட மகிழ்ச்சியை மெலிதான புன்னகையின் மூலம் அழகாக வெளிப்படுத்தி இருந்தார். மேலும் ஒவ்வொரு வார்த்தையிலும் அடங்கிப் போய் கிடக்கும் ஒரு சாமானியனின் கோபம் அனலாய்த் தகித்தது. அவற்றில் சில கருத்துக்கள் கீழே. ஜெயலலிதாவை திராவிட சிசு என்று நான் கருதியது முற்றிலும் தவறானது. ஓபிஎஸ் ஜெயிக்கிற குதிரையாக இருந்திருந்தால் அதில் சவாரி செய்ய பாஜக விரும்பாது. அவ்வாறு இல்லை என்பதனால்தான் அவரை வைத்து தற்காப்பு பயணம் செய்து கொண்டிருக்கிறது அதாவது அதிமுக'வை பிளவுபடுத்தி பாஜக வலுப்பெற முனைகிறது. தாங்கள்தான் "மாற்று" என்று சொல்லிக் கொண்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இன்று தீபாவளி பொங்கல் பண்டிகைகளின்போது மக்களுக்கு வாழ்த்து சொல்ல மட்டுமே பயன்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சாவிலே மர்மம் என்ற ஒரு சந்தேக காரணி மட்டும் புதிதாக ஒரு கட்சியை ஆரம்பிக்க ...
கடை மூடும் நேரமான பத்து மணியைக் கடிகார முட்கள் கடந்த அடுத்த ஒரு சில நிமிடங்களில் அருகாமையில் இருக்கும் இரு டாஸ்மாக் கடைகளுக்கும்(ஒன்று காவல் நிலையத்திற்கு எதிரிலேயே உள்ளது)மையப்புள்ளியான ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி, குடித்துவிட்டு வண்டியோட்டி வருபவர்களை கண்டுபிடித்து அபராதம் வசூலிக்க ஆரம்பித்துவிடுகின்றனர் காவலர்கள். குடித்தவனைக் கண்டுபிடிப்பது ஒரு "கலை" என்றால், அதில் காவலர்கள் கலைமாமணிகள். கார்த்திக் பிரகாசம்...
யார் யாருடைய கதைகளினூடே ஓர் எழுத்தாளனின் வாழ்க்கைக் கதை எழுதப்படுகிறது...!!! கார்த்திக் பிரகாசம்...
காலையில் கண் விழித்தது முதல் இரவு கண்ணுறங்கும் வரை முழுக்க முழுக்க நண்பர்களால் சூழப்பட்டிருக்கும் இந்த வெளியூர் வாழ்க்கையில் மனதிற்கு நெருக்கமான நண்பர்கள் அமைவது வரம். அலுவலகத்தில் ஒரு நண்பர். சக சொந்த ஊர்க்காரர். அவரும் நானும் வெவ்வேறு டீம் என்பதால் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பமோ, அதிகம் பேசக்கூடிய வாய்ப்போ இதுவரையில் அமைந்தது இல்லை. ஆனால் சந்திக்கும் போதெல்லாம் நாங்கள் இருவரும் பரஸ்பரம் கேட்டுக் கொள்ளும் கேள்வி " இந்த வாரம் ஊருக்கு போறிங்களா.?" என்பது மட்டும் தான். அதைத் தவிர நாங்கள் அதிகம் பேசியதில்லை. ஆனால் அந்த ஒரு கேள்வியில் பலநாள் பழகிய சிநேகிதம் மனதைத் தொட்டு பரவசம் மூட்டும். யார் யாரோ அவ்வப்போது இந்தக் கேள்வியைக் கேட்டாலும் சக சொந்த ஊர்க்கார நண்பர் என்பதனாலேயே அவர் கேட்கும் போது கூடுதலான கிளர்ச்சியொன்று உணர்வுகளுக்குள் ரீங்காரம் செய்யும். அதற்காகவே பார்க்கும் போதெல்லாம் இருவரும் அந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்வோம். கேள்விக்குண்டான பதிலுடன் சிறு புன்னகையையிட்டு கண்களில் கைக்குலுக்கி அந்தத் தருணத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம். இந்த வாரம் ஊருக்குச் செல்கிறேன். நாளையோ நாள...

சபாஷ் திருப்பதி...!!!

பெரியளவில் பக்தி இல்லாவிட்டாலும் முதல்முறை என்பதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கியது நண்பர்களுடனான திருப்பதி பயணம். அதிகாலையில் தி.நகரில் எங்களின் ஆஸ்தான டீக்கடையின் டீயுடன் பயணத்தைத் தொடங்கினோம்.மூன்றரை மணிநேர ரயில் பயணத்திற்கு பிறகு திருப்பதியை அடைந்தோம். நண்பர்களில் ஐந்துபேர் மட்டும் படிக்கட்டில் நடந்து செல்லலாம் என்று முடிவு செய்து மீதியானர்வர்களுக்கு பேருந்து வைத்துவிட்டு நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். அலுப்பரியில் இருந்து மேலே செல்ல மொத்தம் 3550 படிக்கட்டுக்கள். ஒன்பது கிலோமீட்டர் தொலைவு. முதல் 500 படிக்கட்டுக்களை அடைந்ததும் அவசரப்பட்டு முடிவு எடுத்துவிட்டோமோ என்று சிறிய கவலை எட்டி பார்த்தது. ஆனால் அடுத்த 500 படிக்கட்டுக்களை கடந்த நேரம் கீழே இறங்கும் போதும் படிக்கட்டுக்களிலேயே இறங்கிவிடலாம் என்று முடிவு செய்துவிட்டோம். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வயது பாரபட்சம் இல்லாமல் படியேறிக் கொண்டிருந்தார்கள். அனைவர் முகத்திலும் ஏதேதோ முணுகல்களாய் வேண்டுதல்களும் கவலைகளும் ஏதொரு திருப்தியும் ஒருசேர கலந்தோடியிருப்பதை காண முடிந்தது. படியேறயேற வழியெங்கிலும் கடைகள். குடிநீர் குழாய்கள். குற...
அவை கவிதைகள் அல்ல குட்டி முத்தங்கள்...!!! கார்த்திக் பிரகாசம்...
நண்பனின் குழந்தைக்கு மூன்று வயது கூட முழுதாக முடியவில்லை. ஆனால் அவன் இப்பொழுதே ஒரு பெருங்கவலையில் ஆழ்ந்துவிட்டான். அதற்கான காரணம் போன வாரம் ஊரில் கொஞ்சம் செல்வாக்கான பள்ளிக்கு, தன் குழந்தையின் பள்ளிச் சேர்க்கைக்காக விசாரிக்க சென்றிருக்கிறான். அவர்கள் அந்த மூன்று வயது குழந்தையிடம் நேர்காணலை நடத்தி முடித்துவிட்டு தங்கள் பள்ளியின் மிகக் குறைவான கட்டணத்தைப் பற்றி விவரித்திருக்கின்றனர். கட்டணத்தைக் கேட்டுவிட்டு நண்பன் ஆடிவிட்டான். ப்ரீ.கேஜிக்கு கட்டணம் முப்பத்தைந்தாயிரமாம். மேலும் சுற்று வட்டாரத்திலேயே அந்த பள்ளியின்தான் கட்டணம் மிக குறைவாம். போகிற போக்கை பார்த்தால் பட்டப் படிப்பிற்கல்ல பள்ளிப் படிப்பிற்கே தவிடு திங்க வேண்டும் போலிருக்கிறதே என்று புலம்ப ஆரம்பித்துவிட்டான். அவனின் மனைவிக்கு இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். ஆனால் இந்தக் கட்டண விவரத்தைக் கேட்டதில் இருந்து அந்த ஆசையை அடியோடு விட்டுவிட்டாளாம். பெற்ற இந்த "குழந்தையை மட்டுமாவது ஒழுங்காகப் படிக்க வைத்தால் போதும்" என்று சலித்துக் கொள்கிறாளாம். இன்னும் "ஒருவருடம் கழித்து குழந்தையை அரசுப் பள...
உன்னை முத்தமிட்ட மழைத்துளிகளை பத்திரப்படுத்தி வை....!!! என் பாவங்களில் கொஞ்சம் கழுவிக் கொள்கிறேன்...!!! கார்த்திக் பிரகாசம்...
எந்த மக்களின் நலனுக்காகவும்,பாதுகாப்பிற்காகவும் பதினாறு ஆண்டுகள் தன் உடலை வருத்திக் கொண்டு உண்ணாவிரதம் இருந்தாரோ அந்த மக்களில் வெறும் 90 பேர் மட்டுமே இரோம் ஷர்மிளாவிற்கு வாக்களித்துள்ளனர். மக்களின் எதிர்பார்ப்புதான் என்ன..? எந்தமாதிரியான நபர் தங்களுக்கு தலைமை தாங்க வேண்டும் அவர்கள் விரும்புகின்றனர்..? தன்னலமற்று தெருவில் இறங்கி துணிந்து போராடியவரைத் தூக்கியெறிந்துவிட்டு எந்த நல்ல தலைவரை வரவேற்பதற்காக வாசல் பார்த்து நாம் காத்திருக்கிறோம்.? தோல்வி அடைந்தது இரோம் ஷர்மிளா அல்ல..! இது எந்த தலைவர் நம்மை வழிநடத்த வேண்டும் என்றறியாத நம் அறியாமையின் தோல்வி..! நம் நலனுக்காகப் போராடியவர் யார் என்று யோசித்து அறியாத இயலாமையின் தோல்வி..! மாற்றத்திற்கான புதிய வாய்ப்பு கிடைத்தும் அதைப் பயன்படுத்திக் கொள்ளும் சாமர்த்தியம் இல்லாத நம் புத்திசாலித்தன்மையின்மையின் தோல்வி..! போராடியவர்க்கு போதிய அங்கீகாரம் கொடுக்காமல் தூக்கியெறிந்த நம் கோர முகத்தின் தோல்வி..! ஆம். தோற்றது இரோம் ஷர்மிளா அல்ல. நாம் தான்...!!! கார்த்திக் பிரகாசம்...
ஒத்த நிமிட முத்த ஒத்தடம் மொத்த உடலிலும் உன்மத்த நடுக்கம்...!!! கார்த்திக் பிரகாசம்...
"சர்வதேச மகளிர் தினம்" என்பது பெண்களின் பெருமைகளைப் போற்றுவதற்காக மட்டும் உருவாக்கப்பட்டது அல்ல. பெண்களின் போராட்டக் குணங்களையும், விடாமுயற்சிகளையும், ஆணினத்திற்கு எந்த விதத்திலும் சளைத்தது அல்ல இந்த பெண் இனம் என்று உலகத்திற்கு பறைசாற்றுவதற்காகவே உண்டாக்கப்பட்டது. "மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா" என்று பெண் பிறப்பின் பெருமையை போற்றி பாடினார் "கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை". ஆனால் இன்று சமூகத்தில் "ஒரு பெண்" வாழ்வதற்கு எத்தனை பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அதிகாரத்தில் இருந்தாலும் சரி, அடித்தட்டில் இருந்தாலும் சரி "பெண்" என்று வரும் போது மட்டும் இந்த சமூகம் ஒரே நேர்க்கோட்டில் ஒன்றிணைந்து விடுகிறது. அது விஷ்ணு பிரியாவிற்கும் வினு பிரியாவிற்கும் ஒரே முடிவைத் தான் அளித்திருக்கிறது. இயற்கையில் பெண்களை விட ஆண்களைப் பலமாக படைத்தது பெண்களை பாதுக்காகத்தானே தவிர பலவந்தப்படுத்த அல்ல. பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வு அளிக்கும் ஆண் சமுதாயம் அமைந்திட வேண்டும். கண்டிப்பாக அமைத்திட வேண்டும் ஆனால் அச்சமூகத்தை கட்டமைக்க...

சுண்டல் விற்பவருக்குள் சூப்பர் ஸ்டார்...

அடித்தட்டு மக்களின் மனதில் அவ்வளவு எளிதில் யாராலும் நுழைந்துவிட முடியாது. அப்படியே நுழைந்துவிட்டாலும் அன்றாட காட்சிகளின் மனதில் நீடித்து நிற்பதொன்றும் எளிதான காரியமல்ல.அந்தக் குடுப்பனை அனைவருக்கும் கிட்டாது. குற்றால ஐந்தருவியில் ஒரு ஓரமாக ஒழுகிக் கொண்டிருந்த நீரோடையில் உடலை நனைத்துக் கொண்டிருந்த போது மிதிவண்டியை தள்ளிக் கொண்டு "சுண்டல் விற்பவர்" அங்கே குழுமியிருந்த சிறு சிறு குழுக்களிடையே அலைந்து கொண்டிருந்தார். கையில் ரஜினி காந்தின் படத்தை பச்சைக் குத்தியிருந்தார்.குளித்து முடித்தபின் மெதுவாக பேச்சு கொடுத்த போது, "எங்க இருந்து வரீங்க" என்றார். சென்னை" என்றோம். சென்னையில "பாட்ஷா படம்" ரிலீஸ் ஆயிருக்கா. படம் எப்பிடி போகுது. "எனக்கு ரஜினி'னா உசுரு. சாவறதுக்குள்ள ஒரு தடவையாவது அந்த மனுஷன பாத்துடனும். அதான் என்னோட ஆச" என்று இடைவெளியே இல்லாமல் வார்த்தைகளை உணர்ச்சிகளோடு கொட்டிவிட்டு கிளம்பினார். மூப்பானாலும், காலங்கள் கண்காணா தூரத்திற்கு சென்றாலும் அடித்தட்டு மக்களை இழுத்து வைத்திருக்கும் காந்த சக்திக்கு இன்னும் அந்த மனிதனிட...

"குமரி" பயணம்...!!!

பயணம் மனிதர்களால் நிரம்பும் போது தொலைவானது நினைவுகளால் நிரப்பப்படுகிறது.. சென்னையிலிருந்து நண்பர்களுடன் கன்னியாகுமரி பயணம் தொடங்கியதில் இருந்து பரிச்சியமில்லாத பழகாத பல முகங்கள் தங்கள் நினைவுகளைக் கண்ணாடியில் விழுந்த பிம்பத்தைப் போல எளிதாக பதித்துச் சென்றனர். தென்காசி பேருந்து நிலையத்தில் குற்றாலம் செல்வதற்கானப் பேருந்தைக் காட்டிய சாயம் போன வெள்ளை வேட்டிக்காரர். பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஐந்தருவிக்கு ஓயாமல் பேசிக் கொண்டே அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர். அங்கிருந்து காசி விசுவநாதர் கோவிலுக்கு கூட்டிச் சென்ற இன்னொரு ஆட்டோ ஓட்டுநர். அதிக நபர்களை அமரவைத்து சென்றதால் ஓட்டுநரிடம் கைப்பேசியையும் ஓட்டுநர் உரிமத்தையும் பிடுங்கி "தினக்கூலிகளிடம் மட்டும் தன் கடமையை செவ்வனே செய்யும்" தோரணைக் கொண்ட காவலர். அந்த பரிதாப நிலைமையிலும் எங்களை நல்லன்புடனும் சிரித்த முகத்துடனும் வழியனுப்பிய அந்த ஓட்டுநரை மறக்கவே முடியாது. இலவச சிற்றுண்டி தான் என்றாலும்கூட சொந்த பந்ததைக் கவனிப்பது போல் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்ட "அந்த ஹோட்டலின் கடைநிலை ஊழியர்" என்று பட்டியலும் கண்ட மனிதர்...
வசதி வரமில்லை வறுமை சாபமில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...