Skip to main content
நியூஸ்7 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பழ.கருப்பையா அவர்களின் நேர்காணலை முகப்புத்தகத்தில் பலபேர் பரிந்துரைத்திருந்தனர். எனக்கும் பழ.கருப்பையாவின் பேச்சாற்றல் பிடிக்கும் என்பதனால் அந்த நேர்காணலைப் பார்த்தேன். பேச்சிலே தெளிவு.கலைஞர் தன்னைத் திருப்பி அழைத்த போது ஏற்பட்ட மகிழ்ச்சியை மெலிதான புன்னகையின் மூலம் அழகாக வெளிப்படுத்தி இருந்தார்.

மேலும் ஒவ்வொரு வார்த்தையிலும் அடங்கிப் போய் கிடக்கும் ஒரு சாமானியனின் கோபம் அனலாய்த் தகித்தது. அவற்றில் சில கருத்துக்கள் கீழே.

ஜெயலலிதாவை திராவிட சிசு என்று நான் கருதியது முற்றிலும் தவறானது.

ஓபிஎஸ் ஜெயிக்கிற குதிரையாக இருந்திருந்தால் அதில் சவாரி செய்ய பாஜக விரும்பாது. அவ்வாறு இல்லை என்பதனால்தான் அவரை வைத்து தற்காப்பு பயணம் செய்து கொண்டிருக்கிறது அதாவது அதிமுக'வை பிளவுபடுத்தி பாஜக வலுப்பெற முனைகிறது.

தாங்கள்தான் "மாற்று" என்று சொல்லிக் கொண்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இன்று தீபாவளி பொங்கல் பண்டிகைகளின்போது மக்களுக்கு வாழ்த்து சொல்ல மட்டுமே பயன்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சாவிலே மர்மம் என்ற ஒரு சந்தேக காரணி மட்டும் புதிதாக ஒரு கட்சியை ஆரம்பிக்க போதுமா..! அவர்கள் போதும் என்று கருதுகிறார்கள். ஏனென்றால் அதைத் தான் அவர்களுடைய தலைவி அவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். ஆக இவர்கள் மரணத்தில் மர்மம் என்று கத்துவது இவர்கள் தலைவி இவர்களுக்கு கற்றுக் கொடுத்தது

சாவிலே மர்மம் என்று தீபா தன் பெயரிலேயே கட்சித் தொடங்குகிறார். இது போதாதென்று தீபாவை முதல்வராக்குவதே தன் குறிக்கோள் என்று அவருடைய கணவர் ஒரு கட்சித் தொடங்குகிறார்.

ஜெயலலிதா திராவிடத்தை நீர்த்துப் போகச் செய்தார். இன்று அதிமுக நீர்த்து போயுள்ளது.

பொய்யர்கள் கூட தன்னிடம் உண்மை பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். திருடர்கள் கூட தங்கள் வீட்டில் திருட்டுப் போக கூடாது என்று விரும்புகின்றனர்.

நம்ம பொண்டாட்டியை கொஞ்சிட்டு திட்றதும், திட்டிட்டு கொஞ்சுற மாதிரியும்தான் தலைவர்களின் மீதான விமர்சனங்கள்.

ஆயிரம் குறைகளைக் கொண்டிருந்தாலும் காங்கிரஸ் ஒரு தன்னிகரில்லா கட்சி.. இன்று அது பலவீனமாக உள்ளது. அவ்வளவு தான்.

ஜெயலலலிதா இறந்த போதே அதிமுகவும் இறந்துவிட்டது. அது தற்போது மெரினாவில் புதைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரு கட்சித் தேவைப்படுகிறது. மாலை நேரத்தில் நான்கு பேரை வைத்துக் கொண்டு ஊடங்கங்கள் நடத்தும் விவாதங்கள் நாய்ச் சண்டையை போலிருக்கிறது. ஏதோ ஒன்றை எடுத்து செல்வது ஊடகத்தின் வேலையல்ல. அறிவானவற்றை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மக்களின் சிந்தனைத் தூண்ட வேண்டும். அலுக்கானவற்றை அல்ல.

சிறுபான்மை மக்களை அரவணைப்பது போல திமுக பிரிவினையை முன்னிறுத்திருத்தவில்லை. மாறாக அது சிறுபான்மையினருக்கு நாங்கள் இருக்கிறோம் என்று தோள் கொடுக்கிறது. அவர்களுக்கு பக்கபலமாக நிற்கிறது.

இன்னும் ஐம்பது வருடங்களுக்கு திராவிட இயக்கம் இருக்க வேண்டும். வெறுப்பு நிலைக்கொண்ட பாஜகவை தமிழகத்தில் வேரூன்ற விடக்கூடாது. அதைத் திராவிட இயக்கத்தால் மட்டுமே செய்ய முடியும். எப்படி ஒருகாலத்தில் அதிகாரத்தில் இருந்த காங்கிரஸை வீழ்த்தியதோ அதே போல பாஜகவையும் திராவிட இயக்கம் வீழ்த்தும்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...

சோர்பா என்ற கிரேக்கன்

எழுதியவர்: நீகாஸ் கசந்த்சாகீஸ் மொழிபெயர்ப்பு: கோ.கமலக்கண்ணன் வகைமை: நாவல் வெளியீடு: தமிழினி பதிப்பகம் சோர்பா எனும் நுண்மைகளின் ரசிகன் மனிதனுக்கும் உயரத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பலரும் வேண்டுகிறார்கள். சிலர் மனிதனுக்குத் தாழ்ந்த மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். ஆனால் மகிழ்ச்சியோ, மனிதனுக்குச் சமமான உயரத்தில்தான் வீற்றிருக்கிறது. -கன்ஃபூசியஸ் நவீன கிரேக்க இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளராகக் கருதப்படும், ‘நீகாஸ் கசந்த்சாகீஸ்‘ எழுதிய புகழ்பெற்ற நாவல் “சோர்பா என்ற கிரேக்கன்”. தமிழில் கோ.கமலக்கண்ணன் மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, சிறுமலையில் நிகழ்ந்த நண்பர்களுடனான இலக்கியக் கூடுகையின் போது தீவிர வாசகரும், ஆங்கில ஆசிரியருமான திரு.ராஜசேகர் அவர்கள் மூலம் “சோர்பா என்ற கிரேக்கன்”என்ற இந்நாவல் அறிமுகமானது. மொழிபெயர்ப்பு நூல்கள் மீது தமிழிலக்கிய வாசகர்களுக்குப் பொதுவான ஒவ்வாமை நிலவி வருவதாகத் தனது மொழிபெயர்ப்பாளர் உரையில் கோ.கமலக்கண்ணன் குறிப்பிட்டிருக்கிறார். என்னளவில் இக்கருத்திலிருந்து சற்று முரண்பட விழைகிறேன். எனக்குத் தமிழைத் தவ...