Skip to main content

Posts

Showing posts from June, 2020

காலத்தில் எல்லாம் சரியாகும்

இதொன்றும் எனக்குப் புதிதல்ல இருப்பினும் இதயம் கனக்கிறது பன்னீர்த் தூவி வளர்த்தெடுத்த பாதங்களில் வழிந்திடும் குருதி மனதை இம்சிக்கிறது வளர்த்து அழகுப் பார்த்த முகங்கள் அழுகின்றன என்னைக் கண்டு அஞ்சுகின்றன எத்தனையோ பாதங்கள் என்னை மிதித்திருக்கின்றன வலியறிந்ததில்லை இந்தச் சுமக்காத பாதங்களின் வலியோ அமில வீச்சாய் நெஞ்சைப் பொசுக்குகின்றன விலகியோடும் கால்களை இருத்தி வைக்க எனக்குக் கரங்கள் இல்லை ஒருவேளை இருந்தாலும் அதற்குத் திராணி இல்லை ஏனெனில் பால் சுரக்காத மார்பில் மழலையின் பசி தீராது எனக்குத் தெரியும் வாழ்வாதாரமற்று அநாதரவாய் செல்லும் என் சொந்தங்களே காலத்தில் எல்லாம் சரியாகும் அன்று மீண்டும் உங்களை அன்புடன் வரவேற்பேன் ஈன்றெடுத்த குழந்தையை மார்பிலேந்தும் தாயைப் போல உங்களை ஏந்திக் கொள்வேன் மடியில் சாய்த்து புதுயுகம் காட்டுவேன் என்றென்றைக்குமான தளர்ந்திடா தன்னம்பிக்கையுடன் இப்படிக்கு சென்னை கார்த்திக் பிரகாசம்...

வெற்றுச் சதை

குளிக்கும் போது பார்த்து விட்டான் என்பதற்காகத் தற்கொலை செய்து கொண்டவளின் உடல் நிர்வாணமாய்க் கிடக்கிறது அந்தப் பிரேத பரிசோதனைக்கூடத்தில் கார்த்திக் பிரகாசம்...

சவக் குழியில்

தொற்று வியாதியென தெருவில் விடபட்ட  வயோதிகரின்  கடைசி ஆசை உயிர்ப்போடிருக்கிறது  இன்னமும் சவக் குழியில்  கார்த்திக் பிரகாசம்... 

பக்குவம் துற

பக்குவமாயிருப்பதில் உனக்கேதும் இழப்பிருக்காது சந்தேகமில்லை  சமயங்களில்  எனக்குமே அது வசதியாகத்தான் இருக்கிறது மறுப்பதிற்கில்லை கொஞ்சம் கொஞ்சல் கொஞ்சம் குழந்தைத்தனம்  கொஞ்சம் குறும்பு இல்லாத உன் பக்குவம்  நீர் கண்டிராத விளைநிலத்தின்  வெடிப்புகளாய் வீடெங்கும்  விரவியிருக்கிறது  அதைப் பார்ப்பதற்கோ உன் பக்குவத்திற்கு  பார்வையில்லை உன் பக்குவச் சிரிப்பும்  பக்குவ ஆறுதலும்  பக்குவ அறிவுரையும்  பாசத்தைக் காட்டிலும்  பயத்தையே பயக்கின்றன  பிரச்சினையைப் பேசும் முன்பே விவாதம் வேண்டாமென மன்னிப்புக் கேட்டுவிட்டு கடந்துவிடுவாய் என்னையும் வேறு கடக்கச் சொல்வாய் சமருக்கு முன்னே  சமாதானம்  யுத்தக்களத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் என் மனதறியாமல்  நேரடியாக நீ கேட்கும் மன்னிப்புகள்  மரண ஓலங்களை  ஒத்திருக்கின்றன புண்பட்டு நிற்கும் மனதை மயிலிறகால் வருடிக்  கொடுக்காமல் பச்சை விறகால் விளாசும் உன் பக்குவத்தை கருகிய இதழ்களில் முத்தமிட்டு மார்பற்ற நெஞ்சில் தான்  தினமும் அணைக்கிறேன் பக்குவத்தைக் கழட்டி ஒருநாள...

நேற்று நாளை இன்று

பழைய குப்பைத் தொட்டியில்  பழகிய குப்பையாய்  நேற்று  மழலையின் கிறுக்கலாய் நாளை நித்திரையற்ற இரவின்  நீட்சியாய்    இன்று  எப்போதைக்குமான  வெறுமையுடன்  வெயிலில் கரைகிறது இப் பொழுது   கார்த்திக் பிரகாசம்...

முதல் அதிசயம்

பசித்தழும் வேளையிலும் அப்பாவின் முலையை தேடிடா குழந்தையின்  ஜனனம் பிரபஞ்சத்தின்  முதல் அதிசயம்  கார்த்திக் பிரகாசம்...