சட்டென ஓர் பறவையைப் போல வந்தமர்ந்தாள் கடும் புழுக்கத்தினால் மனிதத் தன்மையை இழந்தவள் போலிருந்தது அதுவரையில் அமைதியாக நின்றிருந்த மரம் நீண்ட யோசனைக்குப் பிறகு அதிதியை வரவேற்கும் இன்முக தலையசைப்புடன் காற்றைத் தருவித்து நிழலை விரித்து குளுமையைப் பரப்பி மடியில் சாய்த்துத் தாலாட்டி இழந்ததையெல்லாம் மீட்டுத் தந்தது மலர்களின் சங்கீதம் காற்றில் மிதக்க நினைவு திரும்பி நிகழுக்கு வந்தவள் வெடுக்கென ஒரு மலரைப் பறித்துவிட்டுப் புன்னகை வழியும் முகத்துடன் கிளம்பிவிட்டாள் மரத்தின் ஓலமும் மலர்களின் ஒப்பாரியும் அவள் செவிகளில் விழுந்திருக்க வாய்ப்பில்லை