நட்பைப் பற்றிச் சொல்ல எத்தனையோ கவிதைகள் எத்தனையோ கதைகள் எத்தனையோ பாடல்கள் எத்தனையோ படங்கள் இருந்தாலும் நட்பைப் பற்றி பேச மனம் ஏங்கிக் கொண்டே இருக்கின்றது. பெரியப்பா மாமா சித்தப்பா சித்தி அத்தை என அனைத்து சொந்தங்களையும் உருவாக்கிக் கொடுத்த இறைவன் தோழன் தோழியை மட்டும் உறவுகளில் ஏன் படைக்கவில்லை. ஒரு வேளை எல்லா சொந்த பந்தங்களும் என்றைக்காவுது ஒரு நாள் ஏதோ ஒரு காரணத்திற்க்காக நம்மை விட்டு விலகிவிடும் என்பதனால் தான் தோழன் தோழியை மட்டும் உறவுகளில் படைக்காமல் உறவுக்காக படைத்திருப்பான் போலிருக்கிறது.. பள்ளிக் கல்வியில் தொடங்கி பாடையில் போகும் வரை உயிரோடு கலந்திருக்கும் நட்பு. பள்ளி, கல்லூரி மற்றும் வேலை செய்யும் அலுவலகம் என்று நட்பு வட்டாரங்கள் மாறினாலும் நட்பு மட்டும் மாறுவதே இல்லை. புதிய நண்பனிடம் தன் பழைய நட்பைப் பற்றி பேசுவது கூட சுகம் தான்.நண்பனைக் கலாய்த்து சிரிப்பதுண்டு ஆனால் கவலையில் கலங்கி நிற்கும் போது நண்பனின் கஷ்டமான நிலையைக் கண்டு ஒரு போதும் சிரிப்பதில்லை. தன் நண்பனின் பெற்றோரைக் கூட அம்மா அப்பா என்று அழைக்கும் பெருந்தன்மை நட்புக்கு உண்டு. ...