Skip to main content

மழை..

    இயற்கையின் அழிவில்லாச்  செல்வம். இயற்கையினால் இவ்வுலகத்திற்கு கிடைக்கப் பெற்ற கொடை. இம்மண்ணின் அழையா விருந்தாளி. சில சமயங்களில் அழைத்தாலும் வராத துரோகி. கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள் "கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிச்சிட்டுக் கொடுக்கும்" என்று.. இந்த பழமொழி எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ மழைக்கு  மிக நன்றாகவே  பொருந்தும். 
    வராத போது வரவில்லையே என்று ஏங்க வைப்பதும் வந்து விட்டால் இப்படி வருகிறதே என்று குமுற வைப்பதும் மழைக்கே உரித்தான சிறப்பம்சம். மழை வரமா சாபமா என்று சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் வைக்கும் அளவிற்கு அதனுடைய பயன்பாடுகளும் ஆக்ரோஷ தாண்டவங்களும் உள்ளன.
    ஒருபுறம் மழையினால் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் நீரில் முழ்கின மறுபுறம் கன மழையினால் ஏரிகள் குளங்கள் நிரம்பி நீர் தேக்க அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு. ஒரே  நேரத்தில் ஏற்பட்ட இரண்டு மிகப் பெரிய விளைவுகள். இதில் ஒரு இழப்பும் மிகப் பெரிய கொடையும் இருக்கின்றன.மிகப்  பெரிய  இழப்பு தான் என்றாலும் கூட அது குறுகிய கால பாதிப்பு.. பணத்தினால் ஈடு செய்ய முடிந்த இழப்பு ஆனால்  மழை மட்டுமே நீரின் ஒரே மூலாதாரம். மழை நீரைத் தேக்கி  வைப்பதனால் நாம் மட்டும் இல்லாமல் நம் பிற்கால சந்ததியனரும் பயன் பெறுவார்கள்.
     ஒரு விதத்தில் அன்பும் மழையைப் போல தான். கிடைக்காத போது ஏக்கத்தையும் கிடைக்கும் போது காயங்களையும் ஏற்படுத்தும். காயப்படுத்தாமல் வலியை உண்டாக்க மழையினாலும் அன்பினாலும் மட்டுமே முடியும். மழையினால்  ஒரு சாராருக்கு மகிழ்ச்சி மற்றொரு சாராருக்கு அது துன்பம். அதே போல அன்பினால் ஒருவருக்கு ஆனந்தம் மற்றவருக்கு வலி. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் மட்டுமல்ல அன்பும் கூட நஞ்சு தான்..         
      பன்முகம் கொண்ட மழை.இதில் ஏதேனும் ஒரு முகத்தை மட்டும் வைத்துக் கொண்டு மழை வரமா சாபமா என்று அலசுவது நாம் சுயநலவாதிகளாக இருப்பதன் பிம்பம். மழையின் அனைத்து முகங்களையும் இன்முகத்தோடு ஏற்போம். 

"""மழையினால்  பரவசப்படும் மழைக் காதலன்"""

கார்த்திக் பிரகாசம்..

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...