Skip to main content

Posts

Showing posts from December, 2013

நான் கண்ட மனிதர்..

   வாழ்வில் மிக அவசியமான குணாதியசங்களைக் கற்றுக் கொள்ள அரிய புத்தகங்களையும் பெரிய ஞானிகளையும் அறிஞர்களையும் தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை. நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் முன்பின் தெரியாத ஒரு சாதாரண மனிதர்கள்  ஆழமான நிஜங்களை வெகு எளிதாக புகுத்தி விட்டுச் செல்வார்கள்.. அப்படி எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம்..    பட்டமளிப்பு விழாவிற்குக் கல்லூரிக்கு செல்வதற்காக  வேலைப் பார்க்கும் கம்பெனியில் விடுமுறையுடன் சேர்த்து  பல திட்டுகளையும் வாங்கிக் கொண்டு அன்று கிளம்பினேன். கல்லூரியில் படிக்கும் காலத்தில் வேண்டுமென்றே ""கட்"" அடித்து விட்டு ஊர் சுற்றுவதும் அதே கல்லூரிக்கு வருடம் கழித்து பழைய பொக்கிஷமான நினைவுகளைச் சுமந்துக் கொண்டு செல்வதும் அரிய சுகம். ஏனென்றால் அந்த கல்லூரி நாட்களுக்குப் பின்னால் கண்ணாடி முன் மட்டும் சொல்லப்பட்ட காதல், சொல்லி மறுக்கப்பட்ட காதல், இக்கட்டான சூழ்நிலையில் நண்பனின் உதவி, தன்னை பற்றி அப்பாவின் மனநிலை, கேட்கமாட்டார்கள் என்று தெரிந்தும் ஆசிரியர் சொல்லும் அறிவுரைகள் என்று மனதை விட்டு நீங்க மறுக்கும் சுகமான சுவடுகள் இருக்கும்.  ...
மழைத் துளிகளாய் இரு மனமெங்கும் பரவிக் கிடந்த நம் காதல் இன்று கிணற்றுத் தண்ணீரை அடைப்பட்டது ஏனோ..!! கார்த்திக் பிரகாசம்...
நீ கருவில் உருவாகி இவ்வுலகத்தில் காலெடுத்து வைக்க பத்து மாதங்கள் வருடக் கணக்காய்க் காத்திருந்தோம்.. உன்னை பள்ளியில் விட்டுச் சென்ற மறு நொடியில் இருந்தே நீ எப்போது  வீடு திரும்புவாய் என்று நொடிகள் நாட்களாகக் காத்திருந்தோம்.. உயர்ப் படிப்பை வெளியூரில் தான் படிப்பேன் என்றாய் அனுப்ப மனம் இல்லாவிட்டாலும் உன் விருப்பத்திற்காகச் சேர்த்து விட்டு நீ எப்போது வருவாய் என்று காலண்டரின் தேதிகளைப் பியித்துக் கொண்டுக்  காத்திருந்தோம்.. வேலைக்காக வெளிநாடு சென்ற நாள் முதல் நீ போன் செய்து எங்களுடன்  பேசும் மூன்று நிமிடத்திற்காக முப்பது மணி நேரம் காத்திருந்தோம்..  மகனே.. இப்பொழுது  கூட தினம் தினம் விடியும் போதெல்லாம் இன்று நீ கண்டிப்பாக வருவாய் என்று காத்திருக்கிறோம் முதியோர் இல்லத்தில்...!!!  கார்த்திக் பிரகாசம்..
உன்னை நேசித்து மட்டும் இருந்தால் என்றோ மறந்து இருப்பேன் ஆனால் நான் உன்னை சுவாசித்துக் கொண்டு இருக்கிறேன். மறக்க முயற்சித்தால் என் சுவாசம் நின்று விடும்... கார்த்திக் பிரகாசம்...