Skip to main content

Posts

Showing posts from January, 2014

கண்கள்..

    1 கோடியே 20 லட்சம். இது அரசோ அல்லது ஏதோ ஒரு தனியார் நிறுவனமோ செய்த ஊழல் அல்ல. உயர் அதிகாரி வாங்கிய லஞ்சமும் அல்ல. இது நம் இந்திய திரு நாட்டில் உள்ள பார்வை அற்றவர்களின் எண்ணிக்கை. ஆம். 1 கோடியே 20 லட்சம்.      இவர்களின் வாழ்க்கை  தினமும்  தொடங்குவதும் முடிவதும் இருளில் தான். இவர்களுடைய அன்றாட தேடல்களும் கேள்விகளும் கேள்விக்கான பதில்களும் இருளில் தான் புதைந்து உள்ளன. வாழ்வில் வெளிச்சத்தையே உணராதவர்கள்.இருந்தும் தன்னம்பிக்கையோடு வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள்.       கண் எதிரே ஒருவர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது அதை கண்டுக் கொள்ளாமல் இருப்பது கூட பார்வை இல்லாததுக்கு சமம். நல்ல விதமாக அந்த ஆண்டவன் நமக்கு கண் பார்வை அளித்துள்ளான். நாம் உயிரோடு இருக்கும் வரை அதை பயன்படுத்திக் கொண்டு நம் வாழ்வு முடிந்த பிறகு மற்றவர்களுக்கு உதவுமாறு வழிவகை செய்தால் அவர்களுடைய வாழ்வும் ஒளி பெறும்.        நம் உயிர் உட்பட இந்த உலகில் எந்த ஒரு பொருளும் விஷயமும் நமக்கு சொந்தமானவை அல்ல. ஒரு கட்டத்தில் இந்த உயிரே...

முதல் சே(வே)லை..

     நண்பன் ஒருவன் பிரபல கம்பெனியின்  நேர்முகத் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்தான். அதன் ஒரு பகுதியாக "மறக்க முடியாத தருணம்"  என்ற தலைப்பில் அவனுக்கு ஏற்பட்ட ஒரு தருணத்தை ஒரு பக்க அளவில் தயார் செய்து வைத்திருந்தான் நேர்முகத் தேர்வுக்காக.. அதை அவன் எனக்கும் நண்பர்களுக்கும்  விவரித்தான். ஆனால் என் மனம் அதில் லயிக்கவில்லை. நான் என்னுள் புதைத்து  வைத்திருந்த மறக்க முடியாத தருணங்களை ஒவ்வொன்றாக அசைப் போட ஆரம்பித்தது என் மனம்.      அதில் மிகவும் முக்கியமான ஒன்று. இது நம்  பல பேருடைய வாழ்கையில் அனேகமாக ஏற்பட்டிருக்கும். பட்டப் படிப்பு முடித்தவுடன் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். அதுவும் வெளி ஊருக்கு. முதன் முறையாக வீட்டை விட்டு வெளியே 350 கிமீ கடந்து சென்னைக்கு .அப்படி இப்படி என்று அலைந்து  ஒரு வேலை கிடைத்தது. மாதச் சம்பளம் 6250. பிடிக்காத வேலை என்ற போதும் மிகவும் அலைந்து கிடைத்த வேலை என்பதால் விடவும் மனமில்லை. பிடிக்காத வேலை என்பதாலோ என்னவோ முதல் மாதம் முடிய ஏதோ ஒரு வருடம் ஆனது போல் இருந்தது.     சம்பளம் ...