Skip to main content

கண்கள்..

    1 கோடியே 20 லட்சம். இது அரசோ அல்லது ஏதோ ஒரு தனியார் நிறுவனமோ செய்த ஊழல் அல்ல. உயர் அதிகாரி வாங்கிய லஞ்சமும் அல்ல. இது நம் இந்திய திரு நாட்டில் உள்ள பார்வை அற்றவர்களின் எண்ணிக்கை. ஆம். 1 கோடியே 20 லட்சம்.
     இவர்களின் வாழ்க்கை  தினமும்  தொடங்குவதும் முடிவதும் இருளில் தான். இவர்களுடைய அன்றாட தேடல்களும் கேள்விகளும் கேள்விக்கான பதில்களும் இருளில் தான் புதைந்து உள்ளன. வாழ்வில் வெளிச்சத்தையே உணராதவர்கள்.இருந்தும் தன்னம்பிக்கையோடு வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள்.
      கண் எதிரே ஒருவர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது அதை கண்டுக் கொள்ளாமல் இருப்பது கூட பார்வை இல்லாததுக்கு சமம். நல்ல விதமாக அந்த ஆண்டவன் நமக்கு கண் பார்வை அளித்துள்ளான். நாம் உயிரோடு இருக்கும் வரை அதை பயன்படுத்திக் கொண்டு நம் வாழ்வு முடிந்த பிறகு மற்றவர்களுக்கு உதவுமாறு வழிவகை செய்தால் அவர்களுடைய வாழ்வும் ஒளி பெறும்.
       நம் உயிர் உட்பட இந்த உலகில் எந்த ஒரு பொருளும் விஷயமும் நமக்கு சொந்தமானவை அல்ல. ஒரு கட்டத்தில் இந்த உயிரே நம்மை விட்டு பிரிந்த பிறகு கண்களை மட்டும்  உடன் வைத்துக் கொண்டு  என்ன செய்ய போகிறோம். நாம் அளிக்கும்  கண்கள் ஒரு காலத்தில் நமது மகன் மகளுக்கோ பேரன் பேத்திகளுக்கோ அல்லது நம் உற்றார் உறவினர்களுக்கோ  கூட பயன்படலாம்.
      ஒரு ஆண்டுக்கு தேவைப்படும்  கருவிழிகளின் எண்ணிக்கை 75 ஆயிரம் முதல் 1 லட்சம். ஆனால் தற்போது கிடைக்கும் கருவிழிகளின்  எண்ணிக்கை  வெறும் 10 ஆயிரம்  மட்டுமே.  ஆதலால்  இதை உதாசின படுத்தாமல் முடிந்த வரை விரைவில் கண் தானம் செய்து  பார்வை  அற்றவர்களின் வாழ்க்கையில் புது ஒளியையும் புத்துணர்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவோம். சமூகத்திலும் (விழி)ப்புணர்ச்சியை  உண்டாக்குவோம்
      வாழும் வரை இல்லாதவர்களுக்கும், வாழ்ந்து முடித்த பிறகு இயலாதவர்களுக்கும் உதவுவோம்.

கண் தானம் செய்வோம்..

கார்த்திக் பிரகாசம்... 

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...