நண்பன் ஒருவன் பிரபல கம்பெனியின் நேர்முகத் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்தான். அதன் ஒரு பகுதியாக "மறக்க முடியாத தருணம்" என்ற தலைப்பில் அவனுக்கு ஏற்பட்ட ஒரு தருணத்தை ஒரு பக்க அளவில் தயார் செய்து வைத்திருந்தான் நேர்முகத் தேர்வுக்காக.. அதை அவன் எனக்கும் நண்பர்களுக்கும் விவரித்தான். ஆனால் என் மனம் அதில் லயிக்கவில்லை. நான் என்னுள் புதைத்து வைத்திருந்த மறக்க முடியாத தருணங்களை ஒவ்வொன்றாக அசைப் போட ஆரம்பித்தது என் மனம்.
அதில் மிகவும் முக்கியமான ஒன்று. இது நம் பல பேருடைய வாழ்கையில் அனேகமாக ஏற்பட்டிருக்கும். பட்டப் படிப்பு முடித்தவுடன் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். அதுவும் வெளி ஊருக்கு. முதன் முறையாக வீட்டை விட்டு வெளியே 350 கிமீ கடந்து சென்னைக்கு .அப்படி இப்படி என்று அலைந்து ஒரு வேலை கிடைத்தது. மாதச் சம்பளம் 6250. பிடிக்காத வேலை என்ற போதும் மிகவும் அலைந்து கிடைத்த வேலை என்பதால் விடவும் மனமில்லை. பிடிக்காத வேலை என்பதாலோ என்னவோ முதல் மாதம் முடிய ஏதோ ஒரு வருடம் ஆனது போல் இருந்தது.
சம்பளம் 10 ஆம் தேதி கொடுத்தார்கள். அந்த கணம் நான் ஏதோ வாழ்கையில் பெரிதாக சாதித்தாக ஒரு உணர்வு.. ஆனால் அந்த உணர்வு வெகு நேரம் நீடிக்கவில்லை. தங்கி இருந்த விடுதியை அடைந்த சில மணி நேரத்தில் வாடகை மெஸ் பில் மற்றும் பஸ் பாஸ் என்று அனைத்தும் போக மீதம் கையில் இருந்தது வெறும் 600 ரூபாய். என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே டீக்கடைக்கு செல்லும் வழியில் ஒரு கடையில் வித விதமாக சேலைகளை விற்பனைக்குத் தொங்க விட்டிருந்தனர்.. சேலையைப் பார்த்தவுடன் என் அம்மாவின் நினைவு என்னை முழுவதும் ஆக்கிரமித்தது. அந்த நினைவுகளை மறக்க தோன்றாமல் உடனடியாக கடைக்குள் சென்று என் கையில் இருந்த பணத்திற்கு ஏற்றவாறு எனக்கு பிடித்த சேலையை எடுத்துவிட்டு வெளியே வந்தேன்.
அந்த வார கடைசியில் அம்மாக்காக வாங்கிய சேலையை எடுத்துக் கொண்டு ஊருக்கு ஒரு விதமான வெளிபடுத்த முடியாத சந்தோசத்துடன் சென்றேன். ஆசை ஆசையாய் வீட்டிற்குச் சென்று என் அம்மாவிடம் அந்த சேலையைக் காட்டினேன். அம்மா மிக சாதாரணமாக எனக்கு எதுக்கு டா சேலை என்கிட்ட சேலையா இல்ல என்று சட்டென்று சொல்லிவிட்டு சமையலறைக்குள் சென்று விட்டார். அது வரையில் இருந்த அத்தனை சந்தோசமும் கானல் நீர் போல நொடி பொழுதில் காணாமல் போனது. வருத்ததுடன் ஏதோ பேருக்கு சாப்பிட்டுவிட்டு உறங்கினேன்.
அன்றும் வழக்கம் போல நான் தான் கடைசியாக தூங்கி எழுந்தேன். எழுந்த போது தான் அந்த அதிர்ச்சி கலந்த ஆனந்தம் கிடைத்தது. அம்மா வீட்டின் பால்கனியில் நின்றுக் கொண்டு எதிர் வீட்டு அக்கா பக்கத்துக்கு வீட்டு அம்மா மற்றும் கீழே இருக்கும் பாட்டி என்று அனைவரிடமும் என் மகன் எனக்காக சென்னையில் இருந்து அவன் காசுல எனக்கு சேலை வாங்கிட்டு வந்துருகான் என்று மிக பெருமையாக சந்தோசமாக சொல்லிக் கொண்டு இருந்தார். இன்னும் தூங்குவது போல் நடித்துக் கொண்டு அம்மா சொல்லும் அத்தனையும் கேட்டுக் கொண்டிருக்கையில் என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. வாழ்க்கையில் முதன் முதலாக நான் சந்தோசமாக அழுத தருணம் என் வாழ்வில் மறக்க முடியாத தருணம். இனி எத்தனையோ இது போன்ற தருணங்கள் ஏற்பட்டாலும், அம்மாவிற்கு நான் சம்பாதித்த பணத்தில் எடுத்து தந்த சேலை போல இருக்காது.
நான் எதையோ யோசித்துக் கொண்டிருப்பதைக் கண்டுக் கொண்ட என் நண்பன் என்னை தட்ட நான் சுதாரித்துக் கொண்டு ஓரத்தில் கசிந்துக் கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்து விட்டு ஆமா மச்சி நீ சொன்னது கரெக்ட் என்று சமாளித்து விட்டு என் நினைவுக்கு பிரியாவிடைக் கொடுத்துவிட்டு உறங்க சென்றேன்..
கார்த்திக் பிரகாசம்...
அதில் மிகவும் முக்கியமான ஒன்று. இது நம் பல பேருடைய வாழ்கையில் அனேகமாக ஏற்பட்டிருக்கும். பட்டப் படிப்பு முடித்தவுடன் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். அதுவும் வெளி ஊருக்கு. முதன் முறையாக வீட்டை விட்டு வெளியே 350 கிமீ கடந்து சென்னைக்கு .அப்படி இப்படி என்று அலைந்து ஒரு வேலை கிடைத்தது. மாதச் சம்பளம் 6250. பிடிக்காத வேலை என்ற போதும் மிகவும் அலைந்து கிடைத்த வேலை என்பதால் விடவும் மனமில்லை. பிடிக்காத வேலை என்பதாலோ என்னவோ முதல் மாதம் முடிய ஏதோ ஒரு வருடம் ஆனது போல் இருந்தது.
சம்பளம் 10 ஆம் தேதி கொடுத்தார்கள். அந்த கணம் நான் ஏதோ வாழ்கையில் பெரிதாக சாதித்தாக ஒரு உணர்வு.. ஆனால் அந்த உணர்வு வெகு நேரம் நீடிக்கவில்லை. தங்கி இருந்த விடுதியை அடைந்த சில மணி நேரத்தில் வாடகை மெஸ் பில் மற்றும் பஸ் பாஸ் என்று அனைத்தும் போக மீதம் கையில் இருந்தது வெறும் 600 ரூபாய். என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே டீக்கடைக்கு செல்லும் வழியில் ஒரு கடையில் வித விதமாக சேலைகளை விற்பனைக்குத் தொங்க விட்டிருந்தனர்.. சேலையைப் பார்த்தவுடன் என் அம்மாவின் நினைவு என்னை முழுவதும் ஆக்கிரமித்தது. அந்த நினைவுகளை மறக்க தோன்றாமல் உடனடியாக கடைக்குள் சென்று என் கையில் இருந்த பணத்திற்கு ஏற்றவாறு எனக்கு பிடித்த சேலையை எடுத்துவிட்டு வெளியே வந்தேன்.
அந்த வார கடைசியில் அம்மாக்காக வாங்கிய சேலையை எடுத்துக் கொண்டு ஊருக்கு ஒரு விதமான வெளிபடுத்த முடியாத சந்தோசத்துடன் சென்றேன். ஆசை ஆசையாய் வீட்டிற்குச் சென்று என் அம்மாவிடம் அந்த சேலையைக் காட்டினேன். அம்மா மிக சாதாரணமாக எனக்கு எதுக்கு டா சேலை என்கிட்ட சேலையா இல்ல என்று சட்டென்று சொல்லிவிட்டு சமையலறைக்குள் சென்று விட்டார். அது வரையில் இருந்த அத்தனை சந்தோசமும் கானல் நீர் போல நொடி பொழுதில் காணாமல் போனது. வருத்ததுடன் ஏதோ பேருக்கு சாப்பிட்டுவிட்டு உறங்கினேன்.
அன்றும் வழக்கம் போல நான் தான் கடைசியாக தூங்கி எழுந்தேன். எழுந்த போது தான் அந்த அதிர்ச்சி கலந்த ஆனந்தம் கிடைத்தது. அம்மா வீட்டின் பால்கனியில் நின்றுக் கொண்டு எதிர் வீட்டு அக்கா பக்கத்துக்கு வீட்டு அம்மா மற்றும் கீழே இருக்கும் பாட்டி என்று அனைவரிடமும் என் மகன் எனக்காக சென்னையில் இருந்து அவன் காசுல எனக்கு சேலை வாங்கிட்டு வந்துருகான் என்று மிக பெருமையாக சந்தோசமாக சொல்லிக் கொண்டு இருந்தார். இன்னும் தூங்குவது போல் நடித்துக் கொண்டு அம்மா சொல்லும் அத்தனையும் கேட்டுக் கொண்டிருக்கையில் என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. வாழ்க்கையில் முதன் முதலாக நான் சந்தோசமாக அழுத தருணம் என் வாழ்வில் மறக்க முடியாத தருணம். இனி எத்தனையோ இது போன்ற தருணங்கள் ஏற்பட்டாலும், அம்மாவிற்கு நான் சம்பாதித்த பணத்தில் எடுத்து தந்த சேலை போல இருக்காது.
நான் எதையோ யோசித்துக் கொண்டிருப்பதைக் கண்டுக் கொண்ட என் நண்பன் என்னை தட்ட நான் சுதாரித்துக் கொண்டு ஓரத்தில் கசிந்துக் கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்து விட்டு ஆமா மச்சி நீ சொன்னது கரெக்ட் என்று சமாளித்து விட்டு என் நினைவுக்கு பிரியாவிடைக் கொடுத்துவிட்டு உறங்க சென்றேன்..
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment