Skip to main content

Posts

Showing posts from May, 2015
அடித்த இடத்தில் இருந்து ஆணியை அகற்றுவது எளிது...!!! ஆனால் அது விட்டுச் செல்லும் அதன் அடையாளங்களை அழிப்பது கடிது...!!! சில உறவுகளையும் அது வித்திட்டு செல்லும் பல நினைவுகள...
அனாதையானத் தெருக்களில் ஜோடி இல்லாத சோடியம் விளக்குகள் யாருடைய வருகைக்காகவோ கொட்ட கொட்ட தூக்கம் மறந்து சொட்ட சொட்ட சுயம்  மறந்து கால் வெடுக்க காலம் முழுக்க காத்துக் கொண்டிருக்கின்றன...!!! கார்த்திக் பிரகாசம்...

அலாரம்...

நீ சொல்லித்தானே செய்கிறேன்.. பிறகு ஏன்..? தினம்தினம் தலையில் கொட்டி என்னை தண்டிக்கிறாய்.. நீ சொன்னதை செய்ததற்காக என்னை குற்றவாளி ஆக்குகிறாய்..  கார்த்திக் பிரகாசம்...
இழப்பதற்கு ஏதும் இல்லாதவனிடம் கூட இரக்கக் குணம்  நிறைந்திருக்கு...!!! பெறுவதற்கு இனி பொருள் ஏதும் தேவை இல்லாதவனிடமோ இல்லை எனும் சொல்லே நிரம்பிருக்கு...!!! கார்த்திக் பிரகாசம்...
தினம்தினம் உறங்க செல்லும் முன் ஒருமுறையாவுது என் வயிற்றுக்கு ஆறுதல் சொல்லி விடுகிறேன்...!!! நாளைக்காவுது மூன்று வேளையும் எனக்காக இல்லாவிட்டாலும் உனக்காக சாப்பிட வேண்டுமென்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் என்று...!!!                                                                                                                கார்த்திக் பிரகாசம்...

வேலை...!!!

விழிகளுக்கும் விரல்களுக்கும் மட்டும் வேலை தந்து மும்முரமாக இயங்க வேண்டிய மூளை முட்டாளாகி விட்டது...!!! கார்த்திக் பிரகாசம்...
குனிந்த தலை நிமிராமல் நடக்கும் ஆண்களும் பெண்களும் பார்க்க கண்கொள்ளா  காட்சி... ஆனால் அவர்களது விழிகளில் செல்போனின் ஆட்சி... கார்த்திக் பிரகாசம்...
பெற்றெடுத்த தாய் தந்தையை அனாதையாகத் தெருக்களில் பிச்சைக்காரர்களாக்கி "சாபம்" சேர்த்துக் கொண்டிருக்கின்றனர் சில பிள்ளைகள்...!!! பிள்ளைகள் இல்லாத பல பேரை தாய் தந்தையாக்கி "புண்ணியம்" சேர்த்துக் கொண்டிருக்கின்றனர் பல பிச்சைக்காரர்கள்...!!! கார்த்திக் பிரகாசம்...
பிடித்த சில விஷயங்களுக்கும் பிடிக்காத பல விஷயங்களுக்கும் தேடினாலும் காரணங்கள் கிடைப்பதில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...

மீண்டும் ஒரு காதல்...!!!

பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு பெண்ணின் மீது ஆழமான காதல்...!!! ஏற்கனவே காதல் வயப்பட்டவன் தான். ஆனால் இவளின் மீது காதல் கொள்ளாமல் இருக்க முடியவில்லை...!!! அன்று அவளை காதலித்ததனால் அவள் என் உறவானாள்...!!! அவள் உறவானதால் இன்று இவள் என் மகளானாள்...!!! கார்த்திக் பிரகாசம்...
தன் உறவுகளைத் தொடர்ந்து அழித்துக் கொண்டே இருப்பதனால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை செய்து கொண்டிருக்கின்றன மரங்கள்.. கார்த்திக் பிரகாசம்...
அன்னை.. வாழ்வின் தொடக்கம் நீ.. வாழ்கையின் அர்த்தம் நீ.. கார்த்திக் பிரகாசம்..

அன்னை..

தன் உதிரத்தையே தன் பிள்ளைகளுக்கு உணவாக்கியவள்... தன்னலமற்ற தன்னம்பிக்கையை தொப்புள் கொடியை தொலைத்த போதே தந்தவள்... நாதியற்று போனாலும் நம்பிக்கையுற்று காத்திருக்கும் ஒரே ஜீவன்... கார்த்திக் பிரகாசம்...

சென்னை எக்ஸ்பிரஸ்...

     சென்னை வரை செல்லும் அடுத்த தொடர் வண்டி இன்னும் சற்று நேரத்தில் தடம் 4ல் வந்து சேரும்..     முதன் முறை சென்னைக்கு கிளம்பும் ஒவ்வொருவருக்கும் இந்த அறிவிப்பை கேட்கும் போது தன்னிச்சையாக ஒரு ஆனந்த சிலிர்ப்பு உண்டாகும்.. ரயில் வரும் திசையைப் பார்த்தால், தங்களின் எதிர் காலத்திற்கான விதை குழந்தை போல் தண்டவாளத்தில் தவிழ்ந்து வருவது போல் இருக்கும்.     அதில் பெரும்பாலனோர் நடுத்தர வர்க்கத்தில் பிறந்து நகரத்தில் வேலை பார்க்க, விதியால் சபிக்கப்பட்டவர்களாகத் தான் இருக்கும்.  "வேலைக்குப் போயி பணம் சம்பாதிக்க வேண்டும்..!!" என்ற ஒரே ஒரு காரணத்திற்காக 22 வருடங்கள் பிறந்து வளர்ந்த ஊரை விட்டுவிட்டு செல்கிறேன் என்று சொன்னால் "வானில் மிதந்து செல்லும் மேகங்கள் கூட ஒரு நிமிடம் நின்று தன் பங்கிற்கு சில கண்ணீர்த் துளிகளைத் சிந்திவிட்டு செல்லும்""..    அப்படி அப்பா, அம்மா, அப்பத்தா மற்றும் சகோதரியையெல்லாம் பிரிந்து கிளம்பும் இளைஞனுக்கு முதலில் ஆறுதல் சொல்லி அரவணைத்துக் கொள்ளும் முதல் ஜீவன்.. தன் கனவுகளையும் நினைவுகளையும் சுமையாக கொண்டு ஏறுபவனுக்கு தன்னம்ப...
மனிதனுக்கு பிரச்சனைகள் இல்லையென்றால் மற்றவரிடம் பேசுவதற்கு வார்த்தையும் நேரமும் கிடைப்பதில்லை... கார்த்திக் பிரகாசம்...
மகாத்மாவாக இருந்தாலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் மட்டும் தான் மரியாதை.. கார்த்திக் பிரகாசம்..
நாகரீக வாழும் பிணங்களை சுமந்து கொண்டு நகரமெங்கும் இறுதி ஊர்வலம் செல்வதைப் போல் நாலாபுறமும் சங்கூதிக் கொண்டே நகர்ந்து செல்கிறது மின்சார ரயில்... கார்த்திக் பிரகாசம்...
"சாப்பிட்டியா..?" என்று கேட்கும் உறவுகளை விட "சம்பளம் எவ்வளவு.?" என்று கேட்கும் உறவுகள் தான் அதிகம்... கார்த்திக் பிரகாசம்...