Skip to main content

சென்னை எக்ஸ்பிரஸ்...

     சென்னை வரை செல்லும் அடுத்த தொடர் வண்டி இன்னும் சற்று நேரத்தில் தடம் 4ல் வந்து சேரும்..
    முதன் முறை சென்னைக்கு கிளம்பும் ஒவ்வொருவருக்கும் இந்த அறிவிப்பை கேட்கும் போது தன்னிச்சையாக ஒரு ஆனந்த சிலிர்ப்பு உண்டாகும்.. ரயில் வரும் திசையைப் பார்த்தால், தங்களின் எதிர் காலத்திற்கான விதை குழந்தை போல் தண்டவாளத்தில் தவிழ்ந்து வருவது போல் இருக்கும்.
    அதில் பெரும்பாலனோர் நடுத்தர வர்க்கத்தில் பிறந்து நகரத்தில் வேலை பார்க்க, விதியால் சபிக்கப்பட்டவர்களாகத் தான் இருக்கும்.  "வேலைக்குப் போயி பணம் சம்பாதிக்க வேண்டும்..!!" என்ற ஒரே ஒரு காரணத்திற்காக 22 வருடங்கள் பிறந்து வளர்ந்த ஊரை விட்டுவிட்டு செல்கிறேன் என்று சொன்னால் "வானில் மிதந்து செல்லும் மேகங்கள் கூட ஒரு நிமிடம் நின்று தன் பங்கிற்கு சில கண்ணீர்த் துளிகளைத் சிந்திவிட்டு செல்லும்""..
   அப்படி அப்பா, அம்மா, அப்பத்தா மற்றும் சகோதரியையெல்லாம் பிரிந்து கிளம்பும் இளைஞனுக்கு முதலில் ஆறுதல் சொல்லி அரவணைத்துக் கொள்ளும் முதல் ஜீவன்.. தன் கனவுகளையும் நினைவுகளையும் சுமையாக கொண்டு ஏறுபவனுக்கு தன்னம்பிக்கை சொல்லி தாலாட்டு பாடும் வாடகைத் தாய்.. 5 மணி நேர பயணத்தில் 50 வருட வாழ்க்கையை கனவாக கண் முன்னே நிழலாட வைக்கும் மாய கண்ணாடி.
   பயணத்தின் போது அது கற்றுத் தரும் அனுபவ அறிவுரைகள் ஏராளமானவை. பாதையில் வளைந்து நெளிந்து செல்லும் போது, போகும் இடத்தில் மற்றவர்களுடன் வளைந்துக் கொடுத்து சென்றால் தான் வாழ்வில்  முன்னேற முடியும் என்பதை எடுத்துரைக்கும். அவ்வப்போது அது கொடுக்கும் சங்கூதுவதைப் போன்ற ஒலி, கண்டவரையெல்லாம் கண் மூடித்தனமாக நம்பி விடாதே என்று எச்சரிப்பதாய் இருக்கும். கடந்து செல்லும் நிறுத்தங்களைப் போல வாழ்வில் துயரங்களால் துவண்டு விடாமல் இலக்கை அடையும் வரை தடைகளை தாண்டி செல்ல வேண்டும் என்று தோள்களில் தட்டிக் கொடுக்கும்..
   எத்தனையோ முறை வெவ்வேறு  இடங்களுக்கு வெவ்வேறு தொடர் வண்டிகளில் சென்றிருந்தாலும்  சென்னை செல்லும் தொடர் வண்டியை மட்டும் வெறும் வண்டி என்ற அளவில் பெரும்போக்காக பார்க்க முடியவில்லை. அது பெரும்பாலான மனிதர்களின்  வாழ்க்கைக்கு வழிகாட்டியாகயும், வடிகாலாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறது...

கார்த்திக் பிரகாசம்...

   

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...