பள்ளி முடியும் நேரமாகிவிட்டது அந்த இரு சிறுவர்களும் உற்சாகமாயினர் மூளை சுறுசுறுப்பானது மணியோசையை எதிர்பார்த்து மும்மரமாய் காத்திருந்தனர்...!!! பள்ளிக்கூட மணியோசை கேட்டது கேட்ட நொடி மட்டும்தான் தாமதம் இருவரும் வாசலை நோக்கி வேக வேகமாய் ஓடிப்போயினர்...!!! சீருடையுடன் பள்ளியை விட்டு வெளியே வந்த மாணவர்களிடம் அவர்களுக்கு பிடித்த திண்பண்டங்களை விற்று பள்ளியை விட்டு வீடு திரும்பினர் அந்த சீருடையற்ற பள்ளி மாணவர்கள்...!!! கார்த்திக் பிரகாசம்...