Skip to main content

Posts

Showing posts from September, 2016

சூரிய உத(ப)யம்...

குளிருக்கு இதமாக இருளாடையை இழுத்து போர்த்தியிருந்த ஆகாயம் வெளிச்ச கீறல்களை சோம்பலுடன் பிரசவித்த நேரம் தன் ஒளி நாணயங்களை சிதறடித்து கொண்டே பிறந்த குழந்தை போல் சிறியவனாய் கோபமற்றவனாய் அமைதியானவனாய் மேகங்களை திறந்து மெல்ல மெல்ல வெளியே வந்தான் சூரியன் பாடித் திரிந்த பறவைகள் பரதேசம் போயின மண்ணுக்குள் குழி பறித்து உறங்கி கொண்டிருந்த நண்டுகள் நடுக்கத்துடன் நடுநிசியில் விழித்த கோபத்தில் வெளியேறின காதலித்துக் கொண்டிருந்த காக்கைகளும் கரையை கவிதையில் நனைத்துக் கொண்டிருந்த காதலர்களும் கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போயினர் அலைகள் தொட்டு நனைக்க பாதங்கள் இல்லாமல் அலைந்தன ஆனால் அவனின் வெளிச்ச கீறல்கள் இவை எதையும் பொருட்படுத்தியதாய் தெரியவில்லை மெல்ல மெல்ல மேலே வந்தான் ஆனந்தமாய் ஆடித் திரிந்த அலைகள் ஆசிரியரைக் கண்ட மாணவனை போல அடங்கி ஒடுங்கின வெளிச்சம் பட்டு வெட்கமடைந்த மணல்வெளியும் இப்பொழுது வேதனையில் வெப்பத்தை உமிழத் தொடங்கியது இருளில் இன்பமாய் இசைத்துக் கொண்டிருந்த கடற்கரை வெளிச்சத்தில் வெளிச்சத்தின் வெப்பத்தில் வெறிச்சோடி போனது...!!! கார்த்திக் பிரகாசம்...
என்னை வேண்டாம் என் காதலையாவது...??? கார்த்திக் பிரகாசம்...
ஒருவருக்கருகே ஒருவராக இருந்த நாம் இனி ஒருவருக்குள் ஒருவராய்...!!! கார்த்திக் பிரகாசம்...
பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லச் சொல்லி இறந்து போன நண்பனின் முகத்தைக் காட்டுகின்றது முகப்புத்தகம்... மறந்தும் நினைத்து விடக்கூடாதென்று கருதுமொன்றை மறக்காமல் நினைவுபடுத்திவிட்டது... கார்த்திக் பிரகாசம்...
விழப் போகும் இடத்தில் முள்ளொன்றை கண்டு குத்தி விடுமென நடுங்கினேன் ஆனால் குத்தப் போகும் முள் என் தோலை கடினப்படுத்தும் என்பதை ஒருபோதும் மறக்கவில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...

சோக மழை...!!!

காலை வேளையில் வரவேற்க யாருமில்லாததால் வாழ்த்த யாருக்கும் மனமில்லாததால் உற்சாகமிழந்து வெறுமனே சாலையை மட்டும் நனைத்துக் கொண்டிருக்கிறது தூறல் மழை...!!! கார்த்திக் பிரகாசம்...

நதிகள் இணைக்கப்பட்டால்...?

மூன்றாம் உலகப் போர் மூண்டால், அதற்கான காரணம் கண்டிப்பாக தண்ணீராகத் தான் இருக்கும் என்று ஏற்கனவே அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.. இந்த நிலையில் இந்தியாவிலுள்ள நதிகள் எல்லாம் இணைக்கப்பட்டால் கண்டிப்பாக தண்ணீர் பிரச்சனை தீரும். அதில் எந்த விதமான சந்தேகமும் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆனால் நம் சமூகத்தில் நாளுக்கு நாள் பரந்த மனப்பான்மை மறைந்து குறுகிய மனப்பான்மை பரந்து விரிந்து கொண்டிருக்கிறது. தன்னை பற்றிய நினைப்பு மட்டுமே எப்பொழுதும் மேலோங்கி நிற்கிறது. ஒருவன் அடுத்த வேளை உணவுக்கே அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் போது, இங்கு ஒரு கூட்டம் அடுத்த நான்கு நாட்களுக்கான உணவைப் பத்திரப்படுத்த நினைக்கிறது. உச்சநீதி மன்றமே தீர்ப்பளித்தும், ஒரு அரசாங்கம் தண்ணீர் திறந்து விட மறுக்கிறது. அதையும் மீறி தண்ணீர் திறந்து விடச் சொல்லும் போது பாதுகாப்பு காரணங்களுக்காக துணை ராணுவத்தை அழைக்கும் அளவுக்கு நம் நாட்டிற்குள்ளேயே மனித நேயம் செத்துக் கொண்டிருக்கிறது. சட்டத் திட்டங்கள் வலுவிழந்துக் கொண்டிருக்கின்றன. ஆக நாளைக்கே இந்தியாவிலுள்ள நதிகளெல்லாம் இணைக்கப்பட்டாலும் அதன் உண்மையான, முழுமையான பலனென்பது, யாருக்கும் பாதகம்...
புகைப்படம்...!!! உயிருக்கு உயிரான உறவுகளையும் உணர்வுகளையும் ஒற்றை நூலில் நெய்த ஆடையாக உறவுகள் பிரிந்தாலுமே  உணர்வுகள் குழையாமல் உயிர்ப்புடன் உடுத்தியிருக்கும் உயிரற்ற உன்னதம்...!!! கார்த்திக் பிரகாசம்...
மின்மினி...!! விளக்கில்லா வீட்டிலும் விலையில்லா மின்சாரம்...!!! கார்த்திக் பிரகாசம்...