Skip to main content

நதிகள் இணைக்கப்பட்டால்...?

மூன்றாம் உலகப் போர் மூண்டால், அதற்கான காரணம் கண்டிப்பாக தண்ணீராகத் தான் இருக்கும் என்று ஏற்கனவே அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.. இந்த நிலையில் இந்தியாவிலுள்ள நதிகள் எல்லாம் இணைக்கப்பட்டால் கண்டிப்பாக தண்ணீர் பிரச்சனை தீரும். அதில் எந்த விதமான சந்தேகமும் இருப்பதாகத் தோன்றவில்லை.

ஆனால் நம் சமூகத்தில் நாளுக்கு நாள் பரந்த மனப்பான்மை மறைந்து குறுகிய மனப்பான்மை பரந்து விரிந்து கொண்டிருக்கிறது. தன்னை பற்றிய நினைப்பு மட்டுமே எப்பொழுதும் மேலோங்கி நிற்கிறது. ஒருவன் அடுத்த வேளை உணவுக்கே அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் போது, இங்கு ஒரு கூட்டம் அடுத்த நான்கு நாட்களுக்கான உணவைப் பத்திரப்படுத்த நினைக்கிறது.

உச்சநீதி மன்றமே தீர்ப்பளித்தும், ஒரு அரசாங்கம் தண்ணீர் திறந்து விட மறுக்கிறது. அதையும் மீறி தண்ணீர் திறந்து விடச் சொல்லும் போது பாதுகாப்பு காரணங்களுக்காக துணை ராணுவத்தை அழைக்கும் அளவுக்கு நம் நாட்டிற்குள்ளேயே மனித நேயம் செத்துக் கொண்டிருக்கிறது. சட்டத் திட்டங்கள் வலுவிழந்துக் கொண்டிருக்கின்றன.

ஆக நாளைக்கே இந்தியாவிலுள்ள நதிகளெல்லாம் இணைக்கப்பட்டாலும் அதன் உண்மையான, முழுமையான பலனென்பது, யாருக்கும் பாதகம் ஏற்படாத வகையில் அரசு வகுக்கும் சட்டத் திட்டங்களிலும், நம்மிடையே மண்டிக் கிடைக்கும் மனிதநேயம் மீண்டும் உயிர் பெரும் பட்சத்திலேயே மட்டும் தான் நாட்டிலுள்ள கடைசி குடிமகனுக்கும் அடிப்படை தேவையான நீராதாரமென்பது உறுதிப்படுத்தப்படும்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...