Skip to main content

Posts

Showing posts from July, 2018

ஆ.!

நிர்வாணமாய் உறங்கியதுண்டா.? முடிக்கற்றையை கோதும் காற்றிடம் நட்பு பாராட்டியதுண்டா.? புது புத்தகத்தின் வாசனையில் முகம் புதைத்ததுண்டா.? யாருமில்லா மொட்டை மாடியில் சத்தமாக புலம்பியதுண்டா.? ஒரு டம்ளர் டீயில் மொத்த வாழ்க்கைக்கும் நியாயம் கண்டதுண்டா.? மழைத்துளியைக் கட்டியணைத்ததுண்டா.? தாகத்தை மாமழைத் துளிகளில் தீர்த்ததுண்டா.? கூட்டத்தில் களவுப் போக விரும்பியதுண்டா.? இளநீர் விற்கும் தாத்தா பாட்டியிடம் நலம் விசாரித்ததுண்டா.? பிச்சையெடுப்பவனின் சோகக் கதையைக் கேட்டதுண்டா.? நகர்ந்தோடும் நாட்களைத் தடுத்து நிறுத்த எண்ணியதுண்டா.? காய்ந்துலர்ந்த இலைகளின் வாழ்க்கையைக் கவனித்ததுண்டா.? கடலலையின் நுரையில் கவலைகளைக் கரைத்ததுண்டா.? கார்த்திக் பிரகாசம்...

டாக்டர் கனவு

பரீட்சை நடக்குற சமயத்துல இராத்திரி நான் தூங்கப் போறப்பவும் சரி; காலைல ஷிப்டுக்காக விடியகாத்தால மூணு மணிக்கு எந்திரிக்கறப்பவும் சரி, எப்ப பாத்தாலும் படிச்சிகிட்டேதான் கெடக்கும். "ஏம்மா...! கொஞ்ச நேரம் தூங்கேனு" சொன்னா... பரவால்லப்பா பரீட்சை முடியற வரைக்கும் தானே"ன்னு சொல்லும். இராத்திரி பகலா நேரம் காலம் பாக்காம கண்ணு முழிச்சு படிச்சிது தம்பி. ஆனா என்ன பிரயோஜனம். நம்ம தலைல என்ன எழுதிருக்குதோ அதான்ன நடக்கும். "ஏன்ணா.? மார்க்கு கொறைஞ்சு போச்சா..?" "மார்க்கெல்லாம் இருநூறுக்கு நூத்தி தொண்ணுத்தி எட்டு கட் ஆஃப் எடுத்திருச்சி தம்பி." "அப்றம் என்னண்ணா.?" "எல்லாம் நாசமாப் போன இந்த நீட்டு தான்." கடைசி நேரத்துல தமிழ்நாட்டுல எங்கையும் சென்டர் இல்ல கேரளாக்குத் தான் போகணும்னு சொன்னப்பவே புள்ள ஒரு மாதிரி ஆயிட்டா".... பின்ன... 'அப்பன் படற கஷ்டம் தெரிஞ்ச பொண்ணாச்சே தம்பி'. நான் தான் தேத்தி, ஒருநாள் லீவு போட்டுட்டு கேரளாக்குக் கூட போய்ட்டு வந்தேன். ரிசல்ட் வரவரைக்கும் வீட்ல யார்கூடையும் ஒன்னும் பேசாம வாய மூடிக்கிட்டே தான் இருந்தா. அவ பயந...

ஆயா வீடு

ஆயா இறந்து தாத்தா இருந்த போதிலும் "ஆயா வீடு" ஒருபோதும் "தாத்தா வீடு" ஆவதில்லை...!!!   கார்த்திக் பிரகாசம்...

நெற்றி முத்தம்

பெரிய ஈர்ப்பெல்லாம் எதுவுமில்லை ஏனென்றால் அவன் யாரென்றே எனக்குத் தெரியாது வீட்டில் பார்த்தார்கள் ஜாதகம் கிரகணமெல்லாம் சாதமாக இருப்பதாக எவனோ ஒருவன் கணித்துச் சொல்ல அவன் வீட்டாரிடம் சம்மதம் சொல்லிவிட்டார்கள் எனக்கோ மறுக்க ஏதும் காரணமில்லை ஏற்றுக் கொள்ளவும் விருப்பமில்லை எது நடந்தாலும் விதி விட்ட வழியென்று நான் தப்பித்துக் கொள்ள முயன்றேன் அந்த நாளும் வந்தே ஆனது முன்னே புகை மூட்டம் அதன் திறந்த மறைவில் அருகில் தாலிக் கட்ட தயாராய் அமர்ந்திருந்தான் முடிச்சுகளைப் போட்டான் புக்ககத்திற்கு வந்தேன் மனிதர்கள் முதல் பாத்ரூமில் மறைந்திருக்கும் பல்லி வரை எல்லாம் புதிது இனி எனக்கென்று ஒதுக்கப்பட்டதாய்ச் சொன்ன அந்த அறைக்குச் சென்றேன் பயமாக இருந்தது இதயத்தில் படபடப்புத் தொற்றியது சேலையும் மாலையும் கனத்தது யாரோ கதவைத் திறக்கும் சத்தம் அவன் தான் அருகில் வந்தான் இதயம் இயல்பை மீறித் துடித்தது குனிந்திருந்த எந்தன் தலையை நிமிர்த்தினான் ஆடை மறைத்திருக்கும் அந்தரங்க பாகங்கள் எதையும் அவன் தேடி அலையவில்லை நேராக நெற்றியில் தன் முதல் முத்தத்தைப் பதிய வைத்தான் பயம் விலகியிருந்தது படபடப்புக் குறைந்திருந்தது இதயம்...