மீசையிடம் தாடிக் கேட்டது நீயும் நானும் ஒன்றாகத் தானே பிறந்து வளர்ந்தோம் நீ வீரத்துக்கு நான் மட்டும் சோகத்துக்கா.? முறுக்கினைத் தளர்த்திவிட்டு மீசை சொன்னது வீரமும் சோகமும் மயிற்றில் இல்லை இருக்கும் இடம் தான் வேறே தவிர நாமிருவரும் மயிர்களே எப்போது வேண்டுமானாலும் உதிர்ந்துவிடும் வெறும் மயிர்களே... கார்த்திக் பிரகாசம்...