Skip to main content

Posts

Showing posts from July, 2020

உதிர்ந்த நாட்கள்

பேய்க் கிணற்றில் வளர்ந்து நிற்கும் பிரம்மாண்ட பங்களா பால்யகாலத்தைப் பயமுறுத்துகிறது அண்ணாச்சி கடை இடத்தில் சூப்பர் மார்க்கெட் கடனோ கருவேப்பிலை கொத்தமல்லி இனாமோ கொடுக்கப்படுவதில்லை அந்த ஏசிப் போட்ட கடையில் பத்து ரூபாய்க்கும் கார்டு மெஷின் ஸ்வைப் சில்லறைக்குப் பதிலாக ஆசை சாக்லேட்டுக்கெல்லாம் வாய்ப்பில்லை அங்கு கூரைக் கடை பாட்டியிடம் நாலணா எட்டணாவிற்கு இட்லி வாங்கிச் சாப்பிட்ட தலைமுறை பால்யத்தின் பழைய சங்கதி செட்டியார் பள்ளிக்கூடம் இன்னும் பெயர் மாற்றாமல் இருப்பதில் புரியும் சமூகத்தின் பொதுப் புத்தி கடல் உள்வாங்கி காலியான இடத்தில் மீன்கள் விற்கும் அக்காக்கள் செத்த மீனின் செதில்கள் குளத்தின் மேல் அடுத்த வீடு தெரியாமல் உயர்ந்து போன கட்டிடங்களில் மறைந்து போன பக்கத்து வீட்டு நலம் விசாரிப்புகள் வாசல் இல்லாத வீடுகளில் உறவினர்களின் வருகையை அறிவிக்க காக்கைகள் வருவதில்லை கார்ப்பரேஷன் தண்ணியும் வருவதில்லை வளர்ச்சியின் சக்கரங்களில் சொட்டு சொட்டாய் வீதியெங்கும் வழியும் பால்ய காலத்தின் பால் மணம் வீசும் குருதியைச் சகிக்க முடியவில்லை கார்த்திக் பிரகாசம்...

நானில்லை

நானில்லை வாழ்க்கையே என்னைத் தேர்ந்தெடுத்தது வழுக்கலும் பிடிமானமும் அதுவே கார்த்திக் பிரகாசம்

வாழ்வோம்

வாழ்வோம் நாம் மகிழ்ச்சியாக வாழ்வோம் அன்புணர்ந்து அகம் மகிழ்ந்து அறமுறைத்து ஆறுதலறிந்து துணை நின்று துயர் துடைத்து நம் வானில் நாம் பறவைகளாவோம் நம் இசையில் நாம் மெட்டுகளாவோம் நம் காட்டில் நாம் காற்றாவோம் நம் கடலில் நாம் முத்துகளாவோம் மூழ்கித் திளைப்போம் கார்த்திக் பிரகாசம்...

சொந்தம்

அடைத்து வைத்திருக்கும் அறையின் சாளரங்களைத் திறந்திட  யாராவது உதவிடுங்கள் ஏங்கித் தவித்திட்ட தென்றல்  என் மேனியெங்கும் படரட்டும் சிலிர்த்த உடலோடு சிநேகமாகட்டும் கரமற்றவனுக்கும் காற்றானது  சொந்தமல்லவோ கார்த்திக் பிரகாசம்...

அதே சாயல்

நான்கு நாட்களாய் காணவில்லை எங்கும் தேடியும் எவ்வித தகவலும் இல்லை ஊரடங்கின் மந்தமான ஓர் மாலைப் பொழுதில் காட்டுச் செடிகளின் புதர்களுக்கிடையில் சடலமொன்று கிடப்பதாக சனங்கள் சொல்ல மார்பிலடித்து கதறியோடினேன் கசக்கியெறிந்த பச்சை இலையாய் பத்து வயது பெண்பிள்ளை மென்னிதழ்களை முரட்டு முட்கள் கூட்டாக குத்தியிருந்தன பின்னிலிருந்து என்னைத் தள்ளி முகத்தைத் தூக்கி மடியில் தளர்த்தி ஒப்பாரி வைத்தாள் ஒருத்தி கால்கள் நடுங்க விரல்கள் விறைக்க குனிந்தேன் இந்தப் பிஞ்சின் முகத்திலும் அதே சாயல் தான் கார்த்திக் பிரகாசம்...

பொருத்தம்

எல்லா உணர்வுகளுக்கும்   பொருத்தமான வார்த்தைகள்  இருக்கவே செய்கின்றன ஆனால் அவைத்  தேடும்போது கிடைப்பதில்லை  நம்முள் செத்துவிட்ட  சில உணர்வுகளைப் போலவே கார்த்திக் பிரகாசம்...