Skip to main content

உதிர்ந்த நாட்கள்

பேய்க் கிணற்றில் வளர்ந்து நிற்கும் பிரம்மாண்ட பங்களா
பால்யகாலத்தைப் பயமுறுத்துகிறது

அண்ணாச்சி கடை இடத்தில் சூப்பர் மார்க்கெட்
கடனோ கருவேப்பிலை கொத்தமல்லி இனாமோ
கொடுக்கப்படுவதில்லை அந்த ஏசிப் போட்ட கடையில்
பத்து ரூபாய்க்கும் கார்டு மெஷின் ஸ்வைப்
சில்லறைக்குப் பதிலாக ஆசை சாக்லேட்டுக்கெல்லாம்
வாய்ப்பில்லை அங்கு

கூரைக் கடை பாட்டியிடம் நாலணா எட்டணாவிற்கு
இட்லி வாங்கிச் சாப்பிட்ட தலைமுறை
பால்யத்தின் பழைய சங்கதி

செட்டியார் பள்ளிக்கூடம் இன்னும்
பெயர் மாற்றாமல் இருப்பதில் புரியும்
சமூகத்தின் பொதுப் புத்தி

கடல் உள்வாங்கி காலியான இடத்தில்
மீன்கள் விற்கும் அக்காக்கள்
செத்த மீனின் செதில்கள்

குளத்தின் மேல்
அடுத்த வீடு தெரியாமல்
உயர்ந்து போன கட்டிடங்களில்
மறைந்து போன பக்கத்து வீட்டு
நலம் விசாரிப்புகள்

வாசல் இல்லாத வீடுகளில்
உறவினர்களின் வருகையை அறிவிக்க
காக்கைகள் வருவதில்லை
கார்ப்பரேஷன் தண்ணியும் வருவதில்லை

வளர்ச்சியின் சக்கரங்களில் சொட்டு சொட்டாய்
வீதியெங்கும் வழியும் பால்ய காலத்தின்
பால் மணம் வீசும் குருதியைச்
சகிக்க முடியவில்லை

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...