Skip to main content

Posts

Showing posts from March, 2024

மென்முறை - நாராயணி கண்ணகி

தற்காலிக பணியின் சொற்ப சம்பளத்தில் தான் உண்டு, தன் வேலையுண்டு என முடிந்தமட்டும் மனைவி பிரேமா மற்றும் குழந்தைகளோடு இல்லறத்தைச் சந்தோசமாகப் போக்கிக் கொண்டிருக்கிறான் நடராஜி. வருடத்திற்கொரு முறை அல்லது இரண்டு வருடத்திற்கொரு முறை எனச் சீரற்ற இடைவெளியில் காலங்காலமாக நடுத்தர வர்க்கத்தின் தலை மேல் தொங்கும் "வீட்டு வாடகை" எனும் வாள் மற்றுமொரு முறை கழுத்தைப் பதமாய் வெட்ட, வேறொரு வீட்டிற்குக் குடிபெயர்கிறான். எதிரே அரசியல், ரவுடியிசம், பஞ்சாயத்து போன்றவற்றில் ஈடுபடும் "ஜி.ஏ" என்ற முக்கிய புள்ளியின் வீடு. குடிபெயர்ந்த அடுத்த நாளிலிருந்தே, "ஜி.ஏ" வின் அடாவடித்தனங்களால் அச்சமும், பதற்றமும் அடையும் நடராஜி, வேறு வீட்டிற்கு மாறி உடனடியாக தலைவலியிலிருந்து விடுபட முயல்கிறான். "விருப்பமில்லை. வேற ஆளைப் பார்த்துக் கொள்ளுங்கள்" எனத் துணிந்து சொல்லும் தைரியமின்றி, எதிர்ப்பும் காட்டாமல் , மறுப்பும் சொல்லாமல் தனக்குள்ளேயே அல்லல்வுறுகிறான். ஆனால் வழக்கத்திற்கு மாறாக மனைவி பிரேமாவிற்கு வீடும், சுற்றமும் பிடித்துவிடுகிறது. ஆதலால் "ஜி.ஏ" மீதான நடராஜின் அதிருப்திய...

பித்து - கணேசகுமாரன்

தற்கொலையில் தொடங்கி ஒரு கொலையில் முடிகிறது நாவல். எதிர்பாராதவிதமாய் நிகழ்ந்திட்ட தன் சகோதரனின் தற்கொலையினால் கடும் நோய்மையில் விழும் ராமலிங்கம், தீவிர மன உளைச்சலினால் புரிந்த மற்றொரு காரியத்தால் தீவிர குற்றவுணர்ச்சிக்கு ஆளாகிறான். அன்யனோன்யமான உறவை அணு அணுவாகச் சிதைக்க விரும்பினால், தொடர்ச்சியாக ஒரு குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கி, அதனை நிரந்தர உணர்வாக மாற்றிவிட்டால் போதும். உறக்கத்திலும் விழித்திருக்குமது மனிதனைச் சீரழிக்கும் வேலையை சுயமாகக் கவனித்துக் கொள்ளும். அதுவும் நோய்மையை உண்டு கொழுத்திடும் குற்றவுணர்வு கொஞ்சம் கொஞ்சமாக அரித்து ராமலிங்கத்தின் சுயத்தை முழுவதுமாக சிதைக்கிறது. எத்துக்கால் போகும் போக்கில் நடக்கிறான். ஏதோ ஒரு பாடலின் தொடக்க ஹம்மிங் போல் ஒரு குரல் அவன் காதுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. பேசுவதற்குக் கூட ஆளில்லாமல் தனக்கு தானே பேசிக் கொள்கிறான். வழியில் சந்திக்கும் காவி சாமியார்கள், சிவபாணம் தருகிறார்கள். அங்கும் இங்கும் திரிந்து, கடைசியில் தூரத்திலிருந்து கவர்ந்திழுக்கும் மலையை நோக்கிச் சென்று திருவண்ணாமலையை அடைகிறான். ராமலிங்கம் திருவண்ணாமலைக்குச் சென்றதும் கதை வேற...