தற்காலிக பணியின் சொற்ப சம்பளத்தில் தான் உண்டு, தன் வேலையுண்டு என முடிந்தமட்டும் மனைவி பிரேமா மற்றும் குழந்தைகளோடு இல்லறத்தைச் சந்தோசமாகப் போக்கிக் கொண்டிருக்கிறான் நடராஜி. வருடத்திற்கொரு முறை அல்லது இரண்டு வருடத்திற்கொரு முறை எனச் சீரற்ற இடைவெளியில் காலங்காலமாக நடுத்தர வர்க்கத்தின் தலை மேல் தொங்கும் "வீட்டு வாடகை" எனும் வாள் மற்றுமொரு முறை கழுத்தைப் பதமாய் வெட்ட, வேறொரு வீட்டிற்குக் குடிபெயர்கிறான். எதிரே அரசியல், ரவுடியிசம், பஞ்சாயத்து போன்றவற்றில் ஈடுபடும் "ஜி.ஏ" என்ற முக்கிய புள்ளியின் வீடு. குடிபெயர்ந்த அடுத்த நாளிலிருந்தே, "ஜி.ஏ" வின் அடாவடித்தனங்களால் அச்சமும், பதற்றமும் அடையும் நடராஜி, வேறு வீட்டிற்கு மாறி உடனடியாக தலைவலியிலிருந்து விடுபட முயல்கிறான். "விருப்பமில்லை. வேற ஆளைப் பார்த்துக் கொள்ளுங்கள்" எனத் துணிந்து சொல்லும் தைரியமின்றி, எதிர்ப்பும் காட்டாமல் , மறுப்பும் சொல்லாமல் தனக்குள்ளேயே அல்லல்வுறுகிறான். ஆனால் வழக்கத்திற்கு மாறாக மனைவி பிரேமாவிற்கு வீடும், சுற்றமும் பிடித்துவிடுகிறது. ஆதலால் "ஜி.ஏ" மீதான நடராஜின் அதிருப்திய...