Skip to main content

பித்து - கணேசகுமாரன்

தற்கொலையில் தொடங்கி ஒரு கொலையில் முடிகிறது நாவல்.

எதிர்பாராதவிதமாய் நிகழ்ந்திட்ட தன் சகோதரனின் தற்கொலையினால் கடும் நோய்மையில் விழும் ராமலிங்கம், தீவிர மன உளைச்சலினால் புரிந்த மற்றொரு காரியத்தால் தீவிர குற்றவுணர்ச்சிக்கு ஆளாகிறான்.

அன்யனோன்யமான உறவை அணு அணுவாகச் சிதைக்க விரும்பினால், தொடர்ச்சியாக ஒரு குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கி, அதனை நிரந்தர உணர்வாக மாற்றிவிட்டால் போதும். உறக்கத்திலும் விழித்திருக்குமது மனிதனைச் சீரழிக்கும் வேலையை சுயமாகக் கவனித்துக் கொள்ளும். அதுவும் நோய்மையை உண்டு கொழுத்திடும் குற்றவுணர்வு கொஞ்சம் கொஞ்சமாக அரித்து ராமலிங்கத்தின் சுயத்தை முழுவதுமாக சிதைக்கிறது.

எத்துக்கால் போகும் போக்கில் நடக்கிறான். ஏதோ ஒரு பாடலின் தொடக்க ஹம்மிங் போல் ஒரு குரல் அவன் காதுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. பேசுவதற்குக் கூட ஆளில்லாமல் தனக்கு தானே பேசிக் கொள்கிறான்.
வழியில் சந்திக்கும் காவி சாமியார்கள், சிவபாணம் தருகிறார்கள். அங்கும் இங்கும் திரிந்து, கடைசியில் தூரத்திலிருந்து கவர்ந்திழுக்கும் மலையை நோக்கிச் சென்று திருவண்ணாமலையை அடைகிறான்.

ராமலிங்கம் திருவண்ணாமலைக்குச் சென்றதும் கதை வேறொரு தளத்திற்குள் செல்கிறது. ஹோட்டல் முதலாளியும், தாடி சாமியாரும் ராமலிங்கத்தின் மனத்திலும், வாழ்விலும் கணிசமான மாற்றத்தை உண்டு பண்ணுகிறார்கள். வாழ்க்கை, மரணம், இன்பம், துன்பம்,பாவம் குறித்துத் தத்துவ ஞானம் அடைகிறான்.

இறுதியில் ஒரு கொலை செய்துவிட்டு, முந்தைய வாழ்வோடு தனக்கிருந்த ஒட்டுதலை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் வீதியில் இறங்கி நடந்து செல்கிறான்.

கணேசகுமாரனின் 'பெருந்திணைக்காரன்" சிறுகதைத் தொகுப்பை முன்னமே வாசித்திருக்கிறேன். நாவல் இதுதான் முதல்முறை. ஒரே அமர்வில் வாசித்து விடக்கூடிய நாவல். சிறப்பான வாசிப்பனுபவம் தருவதுடன், சுயத்தின் மீதான, வாழ்வை அதன் போக்கில் வாழுதல் குறித்தான தத்துவ விசாரணைகளையும் ஏற்படுத்துகிறது.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...