Skip to main content

Posts

Showing posts from August, 2024

பிரபஞ்சத்தின் மூத்த மொழி காதல்

சவுக்குமர நிழல் - ஜெயந்த் காய்கிணி தமிழில்: நஞ்சுண்டன் தொகுப்பு: சிவபிரசாத் மறைந்த கவிஞர், மொழிபெயர்ப்பாளர் நஞ்சுண்டன் அவர்களின் மொழிபெயர்ப்பில் சிவபிரசாத் தொகுத்துள்ள “பால் மீசை” தொகுப்பில் இடம் பெற்றுள்ளது கன்னட கவிஞரும், எழுத்தாளருமான 'ஜெயந்த் காய்கிணி' எழுதிய "சவுக்குமர நிழல்" என்னும் சிறுகதை. ஒரு மாதத்திற்கு முன்பு, இன்ன காரணம் என்றதறியாமல் கைதாகி சிறையிலிருக்கும் தன் கணவனை வேறு சிறைக்கு மாற்றுகிறார்கள் என்ற தகவலறிந்து அதிகாலையிலேயே எழுந்து அவனுக்கு மிகவும் பிடித்த அரிசி பாயசத்தோடு அவனது நினைவுகளையும் வேகாத வெயிலில் சுமந்து கொண்டு கால்கடுக்கக் கிளம்புகிறாள் மனைவி நாகம்மா. மலைக்கு அந்தப்பக்கமுள்ள சாலை வழியாகத்தான் காவல்துறை வாகனம் எப்படியும் சிறைக்குச் சென்றாக வேண்டும். கண்ணுக்கெட்டிய தொலைவின் எல்லையில் கானலில் நெளியும் சாலையில் ஒரு கண்ணைத் தைத்துக் கொண்டே நடக்கிறாள். ஊரார் பலரும் அவ்வழியாகக் கடந்து செல்கின்றனர். கேட்பவர்களிடம் ஏதேனுமொரு பொய்யை அங்கிருத்தலுக்கான காரணமாகக் கூறுகிறாள். நற்மனிதரான வாத்தியார் ஒருவர் வருகிறார். அவரிடம் மட்டும் உண்மையை உடைக்கிறாள். “உன்...

மூத்த அகதி - வாசு முருகவேல்

நான் ஏன் பதட்டமாகிறேன்? நான் ஏன் பலகீனமாக உணர்கிறேன்? நான் ஏன் ஒதுங்கிக் கொள்கிறேன்? இப்படி எழும் அத்தனைக் கேள்விகளுக்கும் ஒரேயொரு பதில்தான் இருக்கிறது. ‘என் பெயர் அகதி’ என்பதுதான் அந்தப் பதில். முன்னுரையில் வாசு முருகவேல் மேற்குறிப்பிட்டுள்ள இவ்வரிகளே நாவலின் அடிநாதம். எந்த இடத்திலும் துவக்கைகளின் சப்தம் இல்லை. எத்தரப்பை முன்வைத்தும் போர்க் குறித்தான நியாய தர்க்கங்களோ, எதிர்ப்புகளோ முன்வைக்கப்படவில்லை. மாறாக இந்நாவல் அறிமுகப்படுத்தும் களம் வேறொன்று. போர் குடித்த மரணங்களைக் காட்டிலும், போர்ச்சூழலினால் சொந்த மண்ணையும், நாட்டையும் இழந்து வெவ்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்த / இடம்பெயர்ந்திட முயற்சிக்கும் அகதியாய் ஆக்கப்பட்டவர்களுக்கு இச்சமூகம் கைமாறாகத் தந்திடும் இரக்கமும், கருணையுமற்ற வாழ்க்கையின் கொடுமையைப் பட்டவர்த்தனமாகப் பதிவு செய்கிறது நாவல். பேசும் மொழி புரிந்திடாத, கலாச்சாரம் அறியாத அந்நிய நாடாய் இருந்தால்கூட பரவாயில்லை என மனதை ஆற்றுப்படுத்த முயலலாம். ஆனால் காலங்காலமாக எம் இரத்தம், எம் சகோதர சகோதரிகள், எம் தொப்புள் கொடி உறவுகள் என மார்புயர்த்தி முழங்குமொரு நாட்டில் தொடுக்கப்படும் அந...