Skip to main content

Posts

நீலம்

சிறு வயதிலிருந்தே  கண்ணில் தென்படுவது காலில் உதைபடுவதென எல்லாமும் நீலம் மிகவும் பிடித்தமான நிறம் நீலம்  பிடிக்கக்  காரணமென்று நினைவடுக்கில் பதிவெங்கும் இல்லை ஆனால் இதர இத்யாதிகள் பிடிப்பதற்கு  நீலம் ஒன்றே போதுமான காரணம் ஒரேயொரு விலக்கு நீல நிறத்திற்காகக் கிருஷ்ணரைப் பிடித்திருந்தது அம்பேத்கரை  அறிந்திடும் வரையில்
சவுகரியமாக நிகழ்ந்தேறியது ஒரு மரணம்  என் கரங்களில் யுகமாய் எனக்காகவே காத்து தவித்திருந்ததை  போல
நனைந்து கொண்டே  பறக்கும் பறவை  மழையில் நீச்சல்  பழகுகிறது 
தாஜ்மகாலுக்கு முன் நின்று முத்தம் பகிரும் காதலர்களின்  படத்தைப் பார்த்தேன்  தாஜ்மகாலும் அவர்களை  பார்த்துக் கொண்டிருந்தது 
நண்பர்கள் தினத்தன்று  சந்திக்க வரவில்லையென அழுது‌‌ தீர்த்த நாள்  நினைவிருக்கிறதா?  அன்று பெய்த மழையில் இன்றுவரை நனைகிறேன் 
ஒவ்வொரு நாளும்   பழையதையெல்லாம் கழித்துவிட்டு கண்ணுக்குத் தென்படும் யாவையும்  புதியவற்றால் நிரப்பிடுவான் அவன் இல்லையேல் குறைந்தபட்சம்  இருந்த இடத்திலிருந்து மாற்றி  வேறொரு இடத்திற்குள்ளாவது   புகுத்திவிடுவான்   காலத்துக்கேற்ப  புதியதாக மறுக்கும்  அவனது சுயத்தை அம்மணமாக்கவே  இந்த ஏற்பாடு

அறிவிப்பு

இறுதிச்சடங்கு  உடல் அடக்கம்  உடல் தகனம்  வரி கிடையாது  ஏழை மக்களின் வலியறிந்த  அரசின் கரிசனம்   இனி  சாகும் நாள் குறிப்பது மட்டுமே  ஒரே வேலை  அதையும் அரசே செய்து  முடிக்கும்