Skip to main content

Posts

Showing posts from August, 2025

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_30

"சத்தியவான்" கதையில், "சாவித்திரி! தவறு உன்மீதுதான். நீ செய்யத்தகாத காரியத்தைச் செய்துவிட்டாய். என்ன நலனை நம்பி செத்தவனைப் பிழைக்க வைத்தாய்?' செத்துப்போன புண்ணிய புருஷர்கள் உயிருடன் இருந்திருந்தால் உலகத்தில் இன்று தேனும் பாலும் ஓடாதா! என்று உலகத்தார் சொல்லும் வார்த்தைகளை நம்பி விட்டாயா? ஓடிப்போன முயல் பெரிய முயல் என்பது பழமொழிதானே ஒழிய, அது உண்மையாகாது. செத்தவனை அப்படியே நிம்மதியாக விட்டுவிடாமல், இப்படிப் பிழைக்க வைத்தால், அவன் எப்படி எல்லாம் மாறுவானோ யார் கண்டது? #கு_அழகிரிசாமி_சிறுகதைகள் // எமலோகத்திற்கே சென்று சண்டை போட்டு எமன் பிடுங்கிச் சென்ற தனது கணவனான சத்தியவானின் உயிரைப் போராடி மீட்டு வருகிறாள் சாவித்திரி. சாவித்திரியால் உயிர் பிழைத்த சத்தியவான், அவளைத் தெய்வமாகப் பூஜிக்கத் தயாராக இருக்கிறான். ஆனால் அவளை மனைவியாக ஏற்கவோ மறுக்கிறான். அவன் உயிர் பிரிந்த கணமே அவள் விதவையாகி விட்டாள். செத்தவன் பிழைத்தாலும், வைதவ்யம் போய்விடுமா? எனச் சத்திரியத் தர்மத்தையும், ஆசாரத்தையும் தன்னைப் போல் கடைப்பிடித்த சத்திரியன் எவனுமே இல்லை என திருப்தியுறுகிறான். ஆசாரம், சத்திரியம் ...

காலச்சுமை | ராஜ் கௌதமன்

மனித விடுதலை, மனித மாண்பு… இப்பிடியான இலட்சியங்களுக்காகத் தொடங்கப்பட்ட புரட்சிகர எத்தனிப்புகள் அதிகாரத்துக்கு வந்த பிறகு மனிதர்களையே அழித்தொழிக்கத் தொடங்கிவிட்டன. காலச்சுமை | ராஜ் கௌதமன்

காலச்சுமை | ராஜ் கௌதமன்

படித்து முன்னுக்கு வந்த ஒவ்வொரு எஸ்.ஸிக்கும் ஒவ்வொரு விதமான நெருக்கடியும் தற்காப்பு உணர்வும் இலட்சியமும் இருந்தன. அவரவர் பிறந்து வளர்ந்த குடும்பச்சூழல், படிப்பு, வசதி, நோக்கு, வாழ்க்கை பற்றிய அபிப்ராயம், அனுபவித்த சாதி் வகைப்பட்ட அழுத்தங்கள், அவமானங்கள், உறவுகள், கிடைத்த வாய்ப்புகள்… இப்படி பலதரப்பட்ட காரணங்களால் ஒவ்வொரு எஸ்.ஸியும் உருவாக்கப்பட்டு வருகிறான். புதிதாக அமைந்து வரும் வாழ்க்கை முறையில் ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறான் என்பதில் மேற்படி தீர்மானிப்புகள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி ஒவ்வொருவரிடமும் பலமாதிரி சிக்கல்களை உண்டுபண்ணுகின்றன. தான் ஒரு எஸ்.ஸி என்ற நிதர்சனம் அவனைப் பல்வேறு சமாளிப்புகளுக்கு இயல்பாகவே இட்டுச் செல்கிறது. அந்த ஒரு எதார்த்தத்தை விட்டு ஓடவோ, எதிர்கொள்ளவோ, சமரசம் செய்துகொள்ளவோ, அதனை மறைக்கவோ, மாற்றவோ, போராடவோ அன்னியபடவோ அந்த இடத்தில் ஒரு பொய்யை இட்டு நிரப்பவோ, வேறோரு முகமூடியை அணியவோ, மற்றவர்க்குரிய எதார்த்தத்தை தனது லட்சியமாக வளைக்கவோ, தனக்குச் சாதகமான பிம்பங்களை வடிவமைத்துக் கொள்ளவோ ஒவ்வொரு எஸ்.ஸியும் படாத பாடுபடுகின்றான். பொதுவாக எ...

கு_அழகிரிசாமி சிறுகதைகள்_29

"ராஜா வந்திருக்கிறார்" சிறுகதையில், "தம்பி, சொன்னாக் கேளுடா... ராஜா எழுந்து வந்து மனையில் உட்கார்ந்தான். "அது தான் நல்ல பிள்ளைக்கு அடையாளம். ஒரு பிள்ளைக்குத் தேச்சி, ஒரு பிள்ளைக்குத் தேய்க்காமல் விடலாமா.? என் பிள்ளை குட்டியும் நல்ல இருக்கணுமில்லப்பா..! என்று மற்றவர்களுக்குச் சொல்லுவதுபோலத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டே எண்ணெய் தேய்த்தாள். "தாயில்லாக் குழந்தைன்னா இந்தக் கோலம்தான். நான் மூணாம் வருசம் காய்ச்சலோட படுத்திருந்தேனே, அப்போ கண்ணை மூடியிருந்தா என் குழந்தைகளுக்கும் இதே கதித் தானே ? அதுகளும் தெருவில்தானே நிண்ணிருக்கும்" - இப்படி என்னென்னவோ மனதுக்குள் நினைத்துக்கொண்டு அவசர அவசரமாகக் குழந்தைகளைக் குளிப்பாட்டினாள்.