Skip to main content

காலச்சுமை | ராஜ் கௌதமன்

படித்து முன்னுக்கு வந்த ஒவ்வொரு எஸ்.ஸிக்கும் ஒவ்வொரு விதமான நெருக்கடியும் தற்காப்பு உணர்வும் இலட்சியமும் இருந்தன. அவரவர் பிறந்து வளர்ந்த குடும்பச்சூழல், படிப்பு, வசதி, நோக்கு, வாழ்க்கை பற்றிய அபிப்ராயம், அனுபவித்த சாதி் வகைப்பட்ட அழுத்தங்கள், அவமானங்கள், உறவுகள், கிடைத்த வாய்ப்புகள்… இப்படி பலதரப்பட்ட காரணங்களால் ஒவ்வொரு எஸ்.ஸியும் உருவாக்கப்பட்டு வருகிறான். புதிதாக அமைந்து வரும் வாழ்க்கை முறையில் ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறான் என்பதில் மேற்படி தீர்மானிப்புகள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி ஒவ்வொருவரிடமும் பலமாதிரி சிக்கல்களை உண்டுபண்ணுகின்றன.
தான் ஒரு எஸ்.ஸி என்ற நிதர்சனம் அவனைப் பல்வேறு சமாளிப்புகளுக்கு இயல்பாகவே இட்டுச் செல்கிறது. அந்த ஒரு எதார்த்தத்தை விட்டு ஓடவோ, எதிர்கொள்ளவோ, சமரசம் செய்துகொள்ளவோ, அதனை மறைக்கவோ, மாற்றவோ, போராடவோ அன்னியபடவோ அந்த இடத்தில் ஒரு பொய்யை இட்டு நிரப்பவோ, வேறோரு முகமூடியை அணியவோ, மற்றவர்க்குரிய எதார்த்தத்தை தனது லட்சியமாக வளைக்கவோ, தனக்குச் சாதகமான பிம்பங்களை வடிவமைத்துக் கொள்ளவோ ஒவ்வொரு எஸ்.ஸியும் படாத பாடுபடுகின்றான். பொதுவாக எஸ்.ஸி அல்லாத வேறு ஒரு நபராகவே தன்னை உறுமாற்றுவதிலேயே அவனது முழு வாழ்க்கையும் செலவாகிக் கொண்டிருக்கிறது.

முகத்துக்கு முன்போ, முதுகுக்குப் பின்னோ விமர்சிக்கப்பட்ட சிலுவைக்கு ஒதுங்கி ஓங்கி வாழணும்கிற வீம்பு ஏற்பட்டது. நல்லதுக்கோ கெட்டதுக்கோ ஒருவனை உற்சாகமாகவும் தன்னம்பிக்கையோடவும் தள்ளிச் செல்ல ஏதோ ஒரு வீம்பு அவசியம்தான்.

காலச்சுமை | ராஜ் கௌதமன்

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...