Skip to main content

Posts

Showing posts from July, 2013

இட ஒதுக்கீடு..

இன்றைய சூழ்நிலையில் ஒரு பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ சேர வேண்டுமென்றால் முதலில் கேட்கப்படுவது மதிப்பெண்ணோ அல்லது விரும்பும் படிப்பையோ இல்லை. முதலில் கேட்கப்படும் கேள்வி நீ எந்த வகுப்பைச் சேர்ந்தவன்.?அதாவது உயர் வகுப்பை சேர்ந்தவனா இல்ல பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவனா என்பது தான்.ஏனென்றால் ஒருவன் என்னதான் நல்ல மதிப்பெண்கள் எடுத்து இருந்தாலும் அவன் நல்ல கல்லூரியில் அவனுக்கு பிடித்த பாடப்பிரிவில் சேர வேண்டும் என்றால் அது அவன் சேர்ந்த வகுப்பை சார்ந்தே அமைகிறது.காரணம் இட ஒதுக்கீடு.      நல்ல தரமான கல்வி என்பது இட ஒதுக்கீட்டால் பெறக் கூடியது அல்ல. இன்றளவில் நல்ல மதிப்பெண்கள் இருந்தும் ஒருவனால் அவனது விருப்பத்திற்கேற்ற நியாமான தரமான கல்லூரியில் சேர முடியவில்லை காரணம் உயர் வகுப்பை சேர்ந்தவன் என்பதால். ஆனால் அதே கல்லூரியில் அவனை விட குறைவான மதிப்பெண் எடுத்த ஒரு பிற்படுத்தப்பட்ட ஒருவனுக்கு இடம் கிடைக்கிறது. இதுக்குப் பேர் தான் சம உரிமையா? உயர் வகுப்பில் பிறந்தது அவனுடைய தவறா? இங்கு ஒருவன் கஷ்டப்பட்டதற்கான அங்கீகாரம் மறுக்கப்படுகிறது. இதற்கு பதிலாக ஒவ்வொரு பிரிவினருக்கு ஒ...

விடை தேடுகிறோமா கேள்வியாகிறோமா...!

தொழில் வளமிக்க சென்னை போன்ற புறநகர் பகுதிகளில் பாரம்பரியமாக வாழ்பவர்களை விட வேலைக்காக இடம் பெயர்ந்து வந்த இளைஞர்கள் தான் அதிகம். சமுகத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்கள். தனது தாய் தந்தை கஷ்டப்பட கூடாது என்பதற்காக ஊர் விட்டு ஊர் வந்து அவர்கள் இழக்கும் சின்னச் சின்ன சந்தோசங்கள் பற்றி யாரும் நினைத்து பார்ப்பதில்லை.நினைத்து பார்க்க மற்றவர்களுக்கு நேரம் கூட இல்லை. குடும்பத்திற்காக அப்பா வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டும் சகோதரியின் திருமணத்திற்க்கு பணம் திரட்ட வேண்டும் போன்ற பல காரணங்களால் படித்து முடித்தவுடன் வேலைக்குச் சென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள நடுத்தர குடும்பத்திலிருந்து வரும் இளைஞர்கள் உடனடியாக சென்னை போன்ற பகுதிக்கு வந்து தனக்கு பிடித்த தான் ஆசைப்பட்ட வேலையைப் பற்றி யோசிக்காமல் ஏதோ ஒரு வேலையில் சேருகின்றனர். ஒவ்வொரு மாதமும் வீட்டிற்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காக அந்த இளைஞன் இழக்கும் விஷயங்கள் ஏராளமானவை... வெறும் 3 ரூபாயை மிச்சம் செய்வதற்க்காக பல மணி நேரம் White Board பேருந்துக்காக காத்திருந்து செல்லும் இளைஞர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்...

பொறியியல் இன்றைய நிலைமை..

     கடந்த சில வருடங்களாக பொறியியல் படித்தால் லட்சக் கணக்கில் சம்பளம் என்ற மாய வலையில் விழுந்து தன் பிள்ளையை எப்படியாவது பொறியாளர் ஆக்க வேண்டும் என்ற ஆசையில் தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் பொறியியல் படிக்க வைக்கின்றனர். அதற்காக பல லட்சங்களையும் செலவு செய்கின்றனர். ஆனால் பொறியியல் படித்த இன்றைய இளைஞர்களின் நிலைமை என்ன.?      படித்த படிப்பிற்கு சரியான வேலை கிடைக்காமல் நம் இளைஞர்கள் அன்றாடம் தனது சான்றிதல்களை தூக்கிக் கொண்டு சாலைகளில் திரியும் காட்சியை பார்ப்பது மிக வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதற்காக யாரை குற்றம் சொல்வது.. அறியாமையால் ஆசைபடும் பெற்றோர்களையா இல்லை புற்றீசல் போல கல்லூரிகளை நிறுவ அனுமதி தரும் அரசையா..??      பொறியியல் கல்லூரிகளை அரசு பெருக்குவதற்கான காரணம் என்னவென்று புரியவில்லை..உண்மையில் அதற்கான வேலை வாய்ப்புகள்   இருக்கின்றனவா அதற்காகதான் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறதா..! வருடந்தோறும் வெளி வரும் பொறியாளர்களின்   எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இது சமுகத்திற்கு ஏற்றது அல்ல.மாணவர்...