கடந்த சில வருடங்களாக பொறியியல் படித்தால் லட்சக் கணக்கில் சம்பளம் என்ற
மாய வலையில் விழுந்து தன் பிள்ளையை எப்படியாவது பொறியாளர் ஆக்க வேண்டும் என்ற
ஆசையில் தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் பொறியியல் படிக்க வைக்கின்றனர். அதற்காக பல
லட்சங்களையும் செலவு செய்கின்றனர். ஆனால் பொறியியல் படித்த இன்றைய இளைஞர்களின்
நிலைமை என்ன.?
படித்த
படிப்பிற்கு சரியான வேலை கிடைக்காமல் நம் இளைஞர்கள் அன்றாடம் தனது சான்றிதல்களை
தூக்கிக் கொண்டு சாலைகளில் திரியும் காட்சியை பார்ப்பது மிக வழக்கமான
ஒன்றாகிவிட்டது. இதற்காக யாரை குற்றம் சொல்வது.. அறியாமையால் ஆசைபடும்
பெற்றோர்களையா இல்லை புற்றீசல் போல கல்லூரிகளை நிறுவ அனுமதி தரும் அரசையா..??
பொறியியல்
கல்லூரிகளை அரசு பெருக்குவதற்கான காரணம் என்னவென்று புரியவில்லை..உண்மையில்
அதற்கான வேலை வாய்ப்புகள் இருக்கின்றனவா
அதற்காகதான் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறதா..! வருடந்தோறும் வெளி
வரும் பொறியாளர்களின் எண்ணிக்கை
அதிகரித்து கொண்டே இருக்கிறது. இது சமுகத்திற்கு ஏற்றது அல்ல.மாணவர்களின் தரத்தை உயர்த்துவது
தான் நோக்கம் என்றால் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.அப்பொழுது தான்
இன்ஜினியரிங் படிப்பிற்கான தரமும் உயரும்.. ஆனால் இன்றைய சூழ்நிலையில் இன்ஜினியரிங்
மீதான மதிப்பும் நம்பிக்கையும் குறைந்துக் கொண்டே வருகிறது.
பெற்றோர்களும்
இன்ஜினியரிங் மீதான மோகத்தை பற்றி சிந்திக்க வேண்டும். இந்த படிப்பை ஒரு
பொருளாதாரம் சார்ந்த படிப்பாக பார்ப்பதை நிறுத்த வேண்டும்.. மற்ற அறிவு சார்ந்த
படிப்புகளை பற்றி இளைஞர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.மாணவர்களும் மற்ற
படிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும்..
ஒரு விவாத
நிகழ்ச்சியில் ஒரு இளைஞர் மேற்கோள் காட்டியது போல் இன்ஜினியரிங் படிப்பு என்பது
ஒரு புனல் போல ஆகிவிட்டது. நுழைவது மிக எளிது ஆனால் வெளியில் வருவதற்காக அவர்கள்
நசுக்க படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை..
Super.........
ReplyDeleteNice.. Real feel of a young guy who have deserved for it.... even though i wish u all success my friend..
ReplyDeleteThank you..
DeleteTrue feel !!! All the best, sure you will win in your race....
ReplyDelete