நாம் ஒருவருக்கு செய்த உதவியால் நமக்கு கிடைக்கும் மிக அற்புதமான பலன் என்பது என்றாவது ஒரு நாள் அவர் மீண்டும் நமக்கு உதவுவார் என்பதில் இல்லை. அது அவர்களால் நமக்கு ஏற்படும் உணர்வு சம்மந்தபட்டது. பணத்துக்கு பதில் பணம்.. உதவிக்கு பதில் உதவி என்பதில் இல்லை மகிழ்ச்சியும் மன திருப்தியும் . இதை மிக அழகாக ஒரு விளம்பர காணொளி மனதில் செலுத்திவிட்டு சென்றது. ஒருவன் தினமும் தான் செல்லும் பாதையில், அவன் காணும் முடியாதவர்களுக்கும் வேண்டுபவர்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டே செல்கிறான். வழியில் வீணாக தண்ணீர் வழிந்து கொண்டிருக்கிறது. அதை பூந்தொட்டிக்கு பயன்படுமாறு செய்கிறான். அதே போல் வயதான பாட்டிக்கு அவர் நடத்தும் தள்ளுவண்டி கடையை பள்ளத்தில் ஏற்ற உதவுகிறான். இப்படியாக செல்லும் போது ஒரு பெண் குழந்தையும் அவளுடைய தாயும் தங்கள் முன் ஒரு வாக்கியத்தை எழுதி வைத்து உதவிக் கேட்டு (நம்மூரில் பிச்சை) அமர்ந்து இருக்கின்றனர்.அதை பார்த்தவுடன் தன்னில் இருக்கும் பணத்தில் பாதியைக் குழந்தையின் கையின் கொடுத்துவிட்டு செல்கிறான். மறுநாளும் அதே இடத்தில அந்...