Skip to main content

Posts

Showing posts from September, 2018

அந்த அழகானத் தக்காளிச் சட்னி

மிஞ்சிப் போனால் அதிகபட்சமாக மூன்று தோசைகளைச் சாப்பிடலாம். அவ்வளவுக்கு தான் சட்னி இருந்தது. அது ஒரு அழகானத் தக்காளிச் சட்னி. சாப்பிட சாப்பிட நிறைந்தும் நிறையாமலும் வயிற்றைப் பார்த்துக் கொள்ளும் மாயாஜால சட்னி. நான்கைந்து தக்காளி பழங்களை நன்கு வதக்கி, தேங்காயைச் சில்லு சில்லுகளாகத் துருவி, மிளகாய் மற்றும் கல் உப்பை தூவி அம்மியில் போட்டு எல்லாவற்றையும் ஒன்றாக அரைத்து எடுத்தால், வாசம் அதற்குள் வயிற்றின் வாசலில் நின்று பசியின் கதவைத் தட்ட துவங்கியிருக்கும். பின் ரெண்டு தேக்கரண்டி எண்ணெய்யில் ஐந்து கிராம் கடுகை மிதமான வெப்பத்தில் குளிக்க வைத்து அதை அரைத்து வைத்திருக்கும் சட்னியில் கொட்டி கலக்கி முடிப்பதற்குள் மொத்தக் குடும்பமும் தட்டுடன் சாப்பிட தயாராயிருக்கும். அந்த அழகானத் தக்காளிச் சட்னிக்குத் திருஷ்டிக் கழிப்பது போல் ஆங்காங்கு எண்ணெயில் குளித்தக் கடுகுக் கூட்டம் மிதந்திருக்கும். ருசியைக் குறிக்க வேண்டிய இடத்தில் சம்மந்தமே இல்லாமல் "அழகு" எப்படி வந்தது என்று நீங்கள் கேட்கலாம். நியாயம் தான். சாதாரணமான தொட்டுக் கொள்ளும் பதார்த்தமாக மட்டும் இருந்திருந்ததால் அதன் சுவையைப் பற்றிய விவ...

சாம்பல் காடு

இருவரும் சந்தித்துக் கொண்டனர் அவ்விரு பெண்களும் முந்தைய நாள் வரை ஒருவரையொருவர் அறிந்ததில்லை வாழ்க்கையையே புரட்டிவிடும் மிகக்கொடிய நிகழ்வொன்று தனக்கு அரங்கேறும் அச்சூழ்நிலையில் அவ்வாறே பாதிக்கப்பட்ட மற்றொருவரைச் சந்திப்போமென்று இருவரிலொருவரும் கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்கள் ஆனால் அவ்விருவரும் ஒற்றைத் துன்பத்தின் வேதனையில் இன்று கைக்கோர்த்து நிற்கின்றனர் இருவருக்கும் சம்மந்தமே இல்லை வேறு வேறு மாநிலம் வெவ்வேறு மொழி இருந்தாலும் இருவருக்கும் சம்மந்தமுண்டு காதல் கண்டு கணவனைப் பெற்று எவருடைய சாதிப் பசிக்கோ அவனைக் காவுக் கொடுத்தவர்கள் பெற்றோரின் சுயசாதிக் கௌரவமென்னும் இழிவினால் தலைவிதி மாற்றப்பட்டவர்கள் சிலரின் உணர்ச்சிவசத்தால் தம் கனவினைத் தொலைத்தவர்கள் கணவனையும் காதலையும் கண்முன்னே இழந்தவர்கள் அதிலொருத்தியின் இறந்தகாலம் மற்றொருத்தியின் நிகழ்காலத்தின் முன்பிரதியாய் நின்று எதிர்காலத்திற்கான நம்பிக்கையை நல்குகிறது அன்பாய் அரவணைக்கிறது ஆறுதலாய் தோளில் சாய்த்துக் கொள்கிறது நீண்டதொரு போராட்டத்திற்கான வாளை காலம் அவர்களின் கைகளில் திணித்திருக்கின்றது அதனை அவர்கள் உணர்ந்தே இருக்கின்றார்கள் கார்...

சென்னையில் பால்துரை

மதிய நேரத்தின் மஞ்சள் வெயில் மாநகரத்தை நிறம் மாற்றிக் கொண்டிருந்தது. வெப்பத்தைக் கடிந்தும்; காறி உமிழ்ந்தும்; மற்றவர்கள் உமிழ்ந்ததை மிதித்தும் மந்தையாய்  பெருங்கூட்டமொன்று நகர வாழ்க்கையின் பரபரப்பைக் காட்டிக் கொண்டிருந்தது. காண்பவர்களின்  உடல்களிலெல்லாம் வியர்வைத் தூறல்கள். அக்கடுமையான வெயிலிலும் டீக் கடையில் கூட்டத்திற்குக்கொன்றும் குறைவில்லை. டீயை மட்டுமே குடித்து வாழும் மனித உயிர்கள் ஏராளம் போலும். டீயோடு சேர்த்து உருவத்தில் மட்டுமே வெவ்வேறாக  இருந்த போண்டாவும் பஜ்ஜியும்  போட்டிப் போட்டுக் கொண்டு காலியாயி கொண்டிருந்தன. போண்டாவையும் பஜ்ஜியையும் அவசர அவசரமாக தூக்கிக் கொண்டிருந்த கைகளின் இடைவெளியில் அவன் தெரிந்தான். எலும்புகளை இழுத்து இறுக்கிக் கட்டியிருக்கும் தோல். அவ்விறுக்கத்தில் குத்திட்டு துருத்தி நிற்கும் எழும்புகள். ஒரு எலும்புக்கும் மற்றொன்றுக்குமான இடைவெளி மழைக் காலத்து தார்ச் சாலையை போல அங்கங்கு பள்ளமாகவும், சிறுசிறு  குழிகளாகவும் இருந்தன. அவன் சட்டைப் போட்டிருக்காததால் அவை தெளிவாகக் கண்ணுக்குப் புலனாயின. இடுப்புக்கு மேல் தொடங்கி பாதிக் காலை கூட மறை...