Skip to main content

Posts

Showing posts from May, 2020

ச்சேய்...!

ச்சேய்...! இதென்ன காந்தியைப் போற்றி கோட்சேயை கொண்டாடுவது போன்றதொரு மனநிலை கார்த்திக் பிரகாசம்...

ஆற்றாமை

கவர்ச்சியற்ற அட்டைப்படம் வசிகரமற்ற தலைப்பு பழுப்பேறிய பக்கங்கள் சலுகையிலும் விலை  போகா புத்தகம்  நான் கார்த்திக் பிரகாசம்...

பொம்மை

குழந்தை பொம்மையுடன் விளையாடுகின்றது பொம்மை ஒரு குழந்தையுடன் கார்த்திக் பிரகாசம்...

ஒரு டீ சாப்பிடலாம்

உதாசீனப்பட்டே பழக்கப்பட்ட உள்ளம் எனது வெயிலின் உக்கிரத்தைப் போல் உண்மையான அன்பும் அரவணைப்பும் கூட வேதனைனையே தருகின்றன என்னை விலைப் பேசி என்னிடமே விற்பவர்கள் புகைத்ததும் மறைந்திடும் புகையாய் புன்னகைத்துச் சென்றதும் முகமிழந்து சாம்பலாகிறேன் இருப்பினும் எல்லாவற்றையும் ஒரு துளிச் சிரிப்பில் கடக்கவே முயல்கிறேன் பரவாயில்லை... வாருங்கள் ஒரு டீ சாப்பிடலாம் கார்த்திக் பிரகாசம்...

இலவச மரணம்

சொந்த ஊருக்குக் கூட்டிச் செல்லும் பாதை மாறிடாமலிருக்க நூல் பிடித்தாற் போல் இரயில் தண்டவாளத்தையொட்டியே நடந்த அப்பாவிகள் நாங்கள் பஞ்சம் பிழைக்க வந்த பரதேசிகளை பறக்கும் விமானத்தில் அழைத்துச் செல்ல அரசாங்கமொன்றும் அடி முட்டாள் இல்லை பசியன்றி வேறறியா போக்கற்றவர்களுக்கு பேருந்து எதற்குச் சொகுசாக நடந்தே சென்றிட நிர்பந்தித்த அரசு ஏழைகளுக்கானது என்பதில் எங்களுக்கு எவ்வித அய்யமும் இல்லை எங்களுக்கும் இரயில் தண்டவாளத்திற்கும் எப்போதுமே ஏகராசி அழைத்துச் செல்ல வராத இரயில் அன்று ஏற்றிக் கொல்ல இலவசமாய் வந்தது வைரஸினால் பாதித்து இறந்தவர்களின் பொதுப்பட்டியலில் எங்களின் எண்ணிக்கையைச் சேர்க்க மாட்டார்கள் ஆனால் இறந்துவிட்டால் பசிக்காது என்றறிருந்திருந்தால் என்றோ மரித்திருப்போம் மகிழ்ச்சியாக கார்த்திக் பிரகாசம்...

நீயெல்லாம்

நீயெல்லாம் என்னத்துக்கு எழுதுற நீயெல்லாம் என்னத்துக்குப் படிக்கிற நீயெல்லாம் என்னத்துக்கு வரையிற நீயெல்லாம் என்னத்துக்குக் கேள்வி கேக்குற ஏன்னா நான் "நான்" அயோக்கியமான 'நீ' அல்ல கார்த்திக் பிரகாசம்...

முதல்துளி

'அழ வேண்டும்' போலிருக்கிறது அழுதுவிட்டால் ஆசுவாசமாய் இருக்கும் உடைந்து போன மனதை ஒட்டும் ஈரப்பசையாய் கதகதவென்று இறங்கும் உதிர்ந்து விழும் துளிகளில் தாங்கல் குறையும் நம்பிக்கை முளைக்கும் ஆறுதல் பிறக்கும் அது நம் கரங்களால் நம்மை நாமே அணைத்துக் கொள்வதை போல ஆனால் அந்த முதல்துளி அதுதான் சிரமம் கார்த்திக் பிரகாசம்...