கணப்பொழுதில் இலகுவாக நடந்து முடிந்துவிடும் எத்தனையோ தருணங்களை ராஜா சந்திரசேகரின் கவிதைகள் ஆழமாகப் பேசுகின்றன. // சபிக்கப்பட்டவனின் கவிதையில் தேவனின் சொற்கள் இருந்தன "பிரான்சிஸ் கிருபா"வை நினைவுபடுத்தும் இந்த வரிகளை எளிதில் கடக்க முடியவில்லை. // வேறு வேறு அலைகளால் தன்னைத் திருத்திக் கொள்கிறது கடல் // பாறை நான் உடைபட அன்பின் பூவொன்றை மேல் வை // எல்லோரிடம் தப்பித்து வந்து என்னிடம் அகப்பட்டுக் கொண்டேன் // நம்பிக்கையின் மேல் அரும்பி இருந்த பனித்துளி உலரவே இல்லை // எழுதும் போது இடம் பெற்று திருத்தும் போதும் நீக்கப்பட்ட சொல் நான் // நாம் காதலைப் பற்றி பேசவே இல்லை நாம் பேசிய எல்லாவற்றிலும் அது இருந்தது // என்னைச் சேர்த்து கூட்டினாலும் பூஜ்யமே வருகிறது // என் பசி கூப்பிட்டு அவர் பசிக்கு ஏதாவது வாங்கித் தரச் சொன்னது // பெரு வனப் புல் நான் என்ற பெருமிதம் எனக்குண்டு - கார்த்திக் பிரகாசம்