Skip to main content

Posts

Showing posts from June, 2025

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_20

"மீனா" என்ற சிறுகதையில், அபூர்வமான தன் இசை ஞானத்தைக் காட்ட அந்தப் பெண் அந்த ஒரு ராகத்தை ஆலாபனை செய்ததே போதும். ஆனால், இயற்கை தன் வனப்பைக் காட்ட தாமரைப்பூ ஒன்று மட்டுமே போதும் என்று திருப்தி அடைந்தது உண்டா?

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_19

"ஏமாற்றம்" என்ற சிறுகதையில், லக்ஷ்மி! உண்மையில் அன்புக்கு எதிர்காலம் என்றும் கடந்த காலம் என்றும் காலவேறுபாடுகள் கிடையாதுதான்! இங்கே, கடந்த காலத்தை நிகழ்காலமாக்குவதும் நிகழ்காலத்தை கடந்த காலமாக்குவதும் சர்வ சகஜம். எத்தனை தடவைகள் நாம், பிரிந்திருந்த நாளின் பழைய அனுபவங்களை நினைத்துப் பார்த்துப் பூரிப்பும், புளகமும் எய்தி இருக்கிறோம்? பழைய அனுபவம் நிகழ்கால சம்பவமாக அப்போது மாறிக்கொள்ளும். இதேபோல எதிர்காலத்தில், குறிப்பிட்ட நாளில் பிரிந்து செல்லவேண்டியதை நினைத்து, இரண்டு பேரும் ஓரிடத்தில் இருக்கும்போதே மனம் வருந்துவோம். இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? இந்தத் திருவிளையாடல்களின் மர்மத்தைப் புரியாமலேயே உன் பால்யப் பருவத்தின் கதைகளை இரவெல்லாம் விழித்திருந்து நாள்தோறும் கேட்பேன். அப்போது உன் பிள்ளைப் பிராயத்தில் உனக்கு ஏற்பட்ட கஷ்டங்களைக் கேட்டு வருந்துவேன். சிறு பிராயத்திலேயே நாலு பேரிடமும் நீ் ‘புத்திசாலி’ என்ற பெயர் வாங்கியதைக் கேட்டு நான் மனம் மகிழ்வேன். பிறந்ததது முதல் நீ செய்த ஒவ்வொரு செயலும் உனக்குப் பிறர் செய்த உபசரணைகளும் என்னை மதித்து எனக்காகச் செய்யும் காரியங்களாகவே தோன்றுகின்றன...

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_18

"தர்ம ராஜ்ஜியம்" என்ற சிறுகதையில், அவன் பலமுறை தன் சொந்த ஊர் ஹரிஜனக் குடியிருப்புகளில் ஊர்க்கட்டை மீறிச் சீர்திருத்தப் பிரச்சாரம் செய்ததும் உண்டு. #கு_அழகிரிசாமி_சிறுகதை18 // *யாரிடம் சீர்திருத்தப் பிரச்சாரம் செய்ய வேண்டும்? ஊரால் ஒதுக்கப்பட்ட ஹரிஜனத்திடமா? தீண்டாமை, தீட்டு எனச் சொல்லி சக மனிதர்களைப் பொதுவிலிருந்து ஒதுக்கி வைத்திருக்கும் ஊராரிடமா?* //

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_17

"விட்ட குறை" என்ற சிறுகதையில், அறிவின் எல்லை புண்ணியத்தின் எல்லை. அறிவின் எல்லை பாவத்தின் எல்லை. பாவமும், புண்ணியமும் ஒரு எல்லையில் நிற்கின்றன.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_16

"தேவையும் தெய்வமும்" என்ற சிறுகதையில், ஓர் எழுத்தாளனுக்குக் கருவிலேயே ஒட்டியிருக்கும் குணமான, சொந்தப் பத்தரிக்கை என்ற அளகாபுரி ராஜ்யத்தையும் நடத்திப் பார்க்க வேண்டுமென்ற நியாயமான ஆசை ராமகிருஷ்ண நாயுடுவைப் பிடித்த போது அவருக்குச் சரியாக வயசு இருப்பதைந்து. இரண்டொரு மாசங்களுக்குள் தாம் முதலாளியாகவும் பிரதம ஆசிரியராகவும், அமர்ந்து ஶ்ரீ ராம ஜெயம், கடவுள் வாழ்த்து முதலிய பீடிகைகளுடனர ‘கலா நேயன்’ என்ற ‘இனிய தமிழ் மாதாந்திர சஞ்சிகை’ வெளியிட்டதும், சஞ்சிகையின் எட்டாவது இதழ் வெளிவந்ததும் செட்டிமேட்டில் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச பூர்வீக ஆஸ்தியையும் பீடித்துவிட்டதும் சுமார் பதின்மூன்று வருஷங்களுக்கு முந்திய கதை.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_15

"வெந்தழலால் வேகாது" என்ற சிறுகதையில், உங்களுக்கு நெற்றிக்கண் இருக்கும் தைரியத்தில் நீங்கள் “யோசனை எதற்கு? என்று முடிவு கட்டிவிட்டது போலவே தோன்றுகிறது. உலகத்தில் உங்கள் கண்ணால் முதல் முதலில் எரிந்து சாம்பலானது உங்கள் சிந்தனா சக்திதான்”.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_14

"மளிகைக்கடை சரஸ்வதி" என்ற சிறுகதையில், ‘வெங்க’னை வெங்கடாசலம் பிள்ளை ஆக்கியது போதாது என்று கையெழுத்துப் போடும்போது வெங்கடாஜலம் பிள்ளை என்று போடத் தொடங்கினார். அந்த வடமொழு எழுத்துச் சேர்த்தது அவருக்குச் சற்று கௌரவம் கொடுத்தது போல் தோன்றியது.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_13

“சுப்பையாத் தேவரின் கனவு” என்ற சிறுகதையில், பெரிய மனிதர்கள் என்று இருப்பவர்கள் பணக்காரராயிருந்தாலும், ஏழைகளாயிருந்தாலும் கௌரவம் என்ற மேல் பூச்சு இல்லாமல் போகாது. அந்த மேல் பூச்சில்தான் அவர்கள் வீட்டு சுப, அசுப காரியங்கள் தடபுடலாக நடக்கும். இந்த விதிக்கு விலக்கானவரல்ல சுப்பையாத் தேவர். அவருடைய ஜீவனத்துக்கு வேண்டிய அளவுக்கு மட்டும் மிகவும் சுருக்கமான சொத்து சுகம் இருந்த போதிலும், அம்பலக்காரர் என்ற பெரிய மனுசன் பட்டம் இருக்கையில் கல்யாணத்தை, அதுவும் ஒரே தங்கைக்குச் செய்யும் கல்யாணத்தை, வரவு செலவு பார்த்துச் செய்தால் அவ்வளவாகச் சோபிக்காது. ஆகவே கொஞ்சம் தாராளமாகவே பணத்தை, நகை நட்டு, சாப்பாடு, மேளம் என்று பலவகைகளில் இறைத்தார்.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_12

“மனசும் கல்லும்” என்ற சிறுகதையில், அறிவு ஒரு நிமிஷத்தில் மாறலாம். உண்மை ஒரு கணத்தில் பொய்யாகிவிடலாம். ஆனால், ஆண்டுக்கணக்கில் காட்டிவந்த உணர்ச்சி அவ்வளவு எளிதில் மாறிவிடுமா? மனசை எவன்தான் கல்லாக்கியிருக்கிறான்? கல்லாக்கத்தான் முடியுமா?

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_11

“முருங்கைமர மோகினி” என்ற சிறுகதையில்… மனிதன் செத்துப்போன பிறகு அவனுடைய குணாதிசயங்களைப் பற்றிப் புகழ்ந்து பேச ஆரம்பிக்கும் மனித சமூகம், நல்ல பெருமாள் பிள்ளையினர ‘அத்தாகத்தி’யான நிலையைக் கண்டு, அந்த நிமிஷத்திலேயே அவருடைய நல்ல குணங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டது.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_10

“குழந்தையின் தியாகம்” என்ற சிறுகதையில்… அந்தப் பொல்லாத குழந்தை என்றோ இறந்திருக்கலாம். மதுரையிலோ, ரயிலிலோ இறந்திருந்தால் அதனுடைய மரணம் பயனற்றுப் போயிருக்கும்? தன் மகன் பெரிய வாலிபனாகி தன் துயரத்தை மாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டதற்குப் பதிலாகத் தன் அறியாத இளம் பிராயத்திலேயே அந்தக் குழந்தை தன் அன்னைக்குச் செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் செய்துவிட்டது. இதை விடவா பெரிய தியாகத்தைப் பின்னால் சாதித்துவிடப் போகிறது.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_09

“பித்தளை வளையல்” என்ற சிறுகதையில்… மனிதனுடைய வாழ்வை தேவையும் அவசியமும் வந்து பாதித்துத் தூண்டும்போது, அவனுடைய கற்பனையும் புத்தியும் விசாலிப்பது இயற்கைதானே! உலகத்தில் சாரமும், அர்த்தமும் இல்லாமல் பொய்க்காரியங்களை, சமூகம் தெரிந்தும் கௌரவிக்கிறது.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_08

“வள்ளியின் வாழ்க்கை”என்ற சிறுகதையில்… பனி, வெயில், பசி, தாகம் - இவற்றை உணரும் ஒரு மனித உடலை, சமூகத்தின் எந்தக் கட்டளையையும் நிறைவேற்றும்படியான யந்திரம் ஆக்கிவிட்டது மனித நாகரீகம்! ஒரே மண்ணில், ஒரே விதமாய் பிறக்கும் மனித வர்க்கத்தின் வாழ்க்கையிலே எவ்வளவு வித்தியாசம்.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_07

“வள்ளியம்மையின் அதிர்ஷ்டம்” என்ற சிறுகதையில்… ஜில்லாப்படத்தில் இடம்பெறத் தகுதியற்ற சிறு கிராமம் மணலூர். திருநெல்வேலி ஜில்லாவில், இருக்கிற இடம் தெரியாமல் சங்கரன்கோவில் ஸ்டேஷனுக்கு அரைமைல் தூரத்தில், நாகரீக வாழ்க்கைக்கு அநேக மைல்களுக்கு அப்பால் தன் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தது. ஒன்றிரண்டு சிறுகுளங்களில் பெருகிய தண்ணீரால் அவ்வூரார் கொஞ்சம் நன்செய் சாகுபடி செய்து பிழைக்கிறார்கள். ஏதாவது ஒரு வருஷம் மழை கொஞ்சம் மட்டு என்றால் அதனால் ஏற்படும் கஷ்டத்தின் எதிரொலி மணலூரில்தான் கேட்கும்.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_06

“பைரவி” என்ற சிறுகதையில்… அப்பொழுது கருநீல நிறமுள்ள பறவையொன்று பறந்து வந்து வற்றியுள்ள குளத்துநீரைத் தன் சிறகால் அடித்துவிட்டு ஒருவிதமான, மோகனமான குரலில் கூவிவிட்டுச் சென்றது. நீரோடு விளையாடி வெகு குறுகிய நேரத்தில் அது அனுபவிப்பது பேரின்பம்! அதைப் போலவே எங்கள் தோழமையின் ஓரிடத்துறையும் வாழ்க்கையின்பமும் வெகு குறுகிய காலத்திற்குத்தான் என்று இப்பொழுது தெரிகிறது.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_05

“விதவை” என்ற சிறுகதையில்… வீட்டை நெருங்கினான் ரகு, புகைவண்டிச் சக்கரங்கள் போல் அவன் கால்கள் விசையோடு ஓடின. அன்று, அந்த இரவிலே, “சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற பாட்டை, பாப்பா பாடுவது ரகுவின் காதில் விழுந்தது. அவன் அந்தப் பாட்டை மாறி மாறிப் பிரியத்தோடு பாடுவது பாரதி பாட்டு என்பதற்குத்தானா?

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_04

“வனஜம்” என்ற சிறுகதையில்… இப்பொழுது எத்தனையோ வருஷங்கள் கடந்துவிட்டன. இன்றும் செண்பகவல்லியம்மன் கோவிலுக்குப் போனால் எனக்கு அந்தப் பழைய வனஜமும், வனஜத்தின் பழைய காதலனாகிய என் பைத்தியக்கார உருவமும் நினைவுக்கு வருகிறது. என் பழைய உருவத்தைப் பார்த்து வெட்கம் தாங்காமல், “நல்ல பயலடா நீ! ஒரு சிறுமிக்கு முன்பாக பெரிய மனுஷ வேஷம் போட்டுக்கொண்டு அசட்டுத்தனமாக என்னென்னவோ பிதற்றிக்கொண்டு கூத்தாடிய நீயுமாச்சு, உன் காதலுமாச்சு... போ, போ” என்று என் ஞாபகத்தையே விரட்டித் துரத்துகிறேன். இரவு வீட்டுக்கு வந்து குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருக்கும் வனஜத்தைப் பார்த்தால் சங்கோஜமாகவே இருக்கிறது.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_03

“கவியும் காதலும்” என்ற சிறுகதையில்.. அன்று அவன் கண்ட ஜீவனுக்குப் பெண் என்ற பெயரோடு வேறொரு பெயரும் உண்டு. “இயற்கையின் உவமைப் பொருள்”

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_02

“இரவு” என்ற சிறுகதையில்… “எனக்குள்ளேயே நான் நினைத்துக் கொண்டேன்! இரவு வந்ததும், உலகத்தின் தோற்றம் மறைய, நம்முடைய முகத்தையும் பார்க்க முடியாமல் போக, பக்குவம் அடையாத உள்ளமானது வெட்கம், மானம் முதலியவற்றை உதறி, தனிமையின் துணிவோடு கெட்ட எண்ணங்களை எண்ணுகிறது. உலகம் இருண்டதும் மனிதன் துணிந்துவிடுகிறான். மேலும் அந்த வெறியின் கிளர்ச்சியில், எந்தத் தடங்கல்களும் உண்டாகி நம் கருத்தையும் வெறிப்பாய்ச்சலையும் தடுப்பதில்லை. ஆகவே, மனிதன் கற்பித்துக் கொள்வதைத் தவிர இரவுக்கு என்று ஒரு தனித்தன்மையா இருக்கிறது?…” // இரவின் தனித்தன்மையைக் குறித்த நான்கைந்து நண்பர்களின் விவாதமே கதையின் சாராம்சம். அதில் ஒருவன், தன் நெருங்கிய நண்பனது மனைவியின் நிறம், உருவம் ஆகியவற்றை முதலில் அவலட்சணங்களாகப் பதிவு செய்கிறான். பிறகு அவளோடு தனியாக இருக்க நேர்ந்த ஓர் இரவின் இருளில் எப்படி அவளுடைய கோர சொரூபமும் , ஆபாசக் கருப்பும் எந்த தடங்கலும் செய்யாமல் அவனுடைய காம வேட்கை கிளர்ந்தெழச் செய்தன என்பதை விவரிக்கிறான். அதோடு மறுநாள் காலை வெளிச்சத்தில், “தற்போது நாம் இப்படி இந்தக் காக்காய் பூஞ்சி பெண்ணைப் பார்க்கவே அருவருப்புக் கொண்டு அவ...

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_01

“உறக்கம் கொள்ளுமா?” என்ற சிறுகதையில்… “லலிதைக்குக் கடுமையாக இருக்கிறது” என்று திக்கிக்கொண்டே பொய் சொன்னான் வந்தவன். “அவள் இறந்துவிட்டாள்” என்ற உண்மையைத்தான் அவனுடைய பொய் மறைத்து வைத்தது. நான் கனவுகண்டு நம்பிக்கையோடு எதிர்பார்த்த வாழ்க்கையின் இசையைப் பாடத் தொடங்குவதற்கு முன்பே, எனக்கு ஒத்தாசையாயிருந்த வீணையின் தந்தி அறுந்துவிட்டது.

கனாத்திறமுரைத்த காதைகள்

எழுதியவர்: சித்ரன் வகைமை: சிறுகதைகள் வெளியீடு: யாவரும் பதிப்பகம் மிகை யதார்த்த வெளியைப் பரந்த மொழி வளத்துடன் அணுகியிருக்கும் சிறுகதைகள். தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகளில், காமம் ஓர் அச்சுறுத்தும் கொடிய மிருகமாகப் பின்தொடர்வதை வாசிப்பினூடே நடுக்கத்துடன் உணர முடிகிறது. கனாத்திறமுரைத்த காதைகள்” என்ற தலைப்பு கதையிலிருந்து, “உன் மனம் எளிதில் உள்நுழைய முடியா ஒரு கவசமிட்டுள்ளது. என்னால் உன்னை ஊடுருவ முடியவில்லை என்பதைச் சற்று ஆற்றாமையுடனே ஒப்புக் கொள்கிறேன். ஆனால், உன் வாதைகளை நீ கடந்தாக வேண்டுமென்றால், என்னை உனக்குள் அனுமதித்துத்தான் ஆக வேண்டும். எதற்காக உன் மனதை ஒரு பெரும்பாறையாய் வடிவமைத்திருக்கிறாய்? உன் சுயநினைவு ரகசியங்களின் பொதி மூட்டையைச் சுமந்து அலுப்புறவில்லையா? அதன் முடிச்சை நான் அவிழ்க்குந் தோறும் நீ ஏன் வேறொரு சிடுக்கை உருவாக்குகிறாய். உன் வலியைப் போக்கத்தான் முயல்கிறேன். இது இருவரின் பரஸ்பர நம்பிக்கையின் பிறகே விளையும் கூட்டுச் செயல்பாடு”