Skip to main content

பணம்


    என்ன செய்கிறோம் எதற்காக செய்கிறோம் என்பதை மறக்க வைக்கும் போதை.சொந்த பந்தங்களையும் உறவு முறைகளையும் தூக்கி ஏறிய துணிய வைக்கும் சகுனி. பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனை ஆட்டி வைக்கும் மந்திரம். வாழ்வதற்கு பணம் வேண்டும் என்ற காலம் போய் வாழ்வதே பணத்திற்குத் தான் என்ற காலம் வந்துவிட்டது.

   சமீபத்தில் படித்த ஒரு நிகழ்வு பணத்தின் மீதான கோபத்தை இன்னும்  அதிகபடுத்தியது.

    நடுத்தர வயதுள்ள ஒரு நபர் கையில் ஆறு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனை தூக்கிக் கொண்டு பேருந்தில் ஏறினார். மிகுந்த தடுமாற்றத்துடன் ஏறிய அவரை நோக்கி பேருந்து நடத்துனர் டிக்கெட் டிக்கெட் என்று கத்திக் கொண்டே வந்தார். ஆனால் அந்த நபர் எந்த ஒரு அசைவும் இல்லாமல் எதுவும் பதில் அளிக்காமல் இருந்தார். இது அந்த பேருந்து நடத்துனரை எரிச்சல் அடைய செய்தது.கோபத்துடன் "யோவ் டிக்கெட் என்றார்". நினைவு திரும்பிய அவர் தன் சட்டைப்பையில் ஒளிந்துருந்த ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார்.

    யாருடனும் எதும் பேசாமல் அமைதியாக வந்து கொண்டிருந்த அவர் ஒரு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்றார். அவரை பின் தொடர்ந்தால் அவர் சென்ற இடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் எதிரில் தெரிந்தது "சுடுகாடு". அங்கு அவர் தன் தோளில் தாங்கி இருந்த சிறுவனை தரையில் இட்டு கதறி அழுதார். அந்த சிறுவன் அவரின் மகன்.

    தன் மகனின் இறுதி சடங்கிற்குக் கூட கையில் பணம் இல்லாமல் அனைவரும் செல்லும் பேருந்தில் யாருக்கும் தெரியாமல் மனதில் பயத்துடனும் தன் மகனை இழந்த வேதனையுடனும் அவருடைய அந்த நொடிகள் எப்படி சென்றிருக்கும் என்று நினைக்கும் போதே கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.. அந்த அளவுக்கு பணம் அவரிடம் கஞ்சமாக இருந்துள்ளது என்று என்னும் போது பணத்தின் மீதான கோபம் இன்னும் ஆக்கிரமிக்கிறது மனதை...

கார்த்திக் பிரகாசம்.. 

Comments

  1. மனது மிகுந்த வேதனை அடைகிறது ....... உண்மைதான் பணம் என்ற ஒன்று மனிதனை தன்னிலை மறக்க செய்கிறது .... எனக்கு என்ன சொலுவது என்று தெரியவில்லை ... சிறுவனகு ஆழ்ந்த அனுதாபங்கள் ....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...