Skip to main content

Posts

Showing posts from May, 2014
தாயின் கருவறையை மிஞ்சிய கருணை இல்லம் ஒன்றுமில்லை.. கார்த்திக் பிரகாசம்...
நாளை 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.. சாதனைப் படைத்த தன் பிள்ளைகளைத் தூக்கி வைத்து கொண்டாடும் அதே பெற்றோர்கள் அவர்கள் தோல்வியுறும் போது தோள் கொடுத்து அவர்களுக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். உன்  சாதனை வேறொரு நாளுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பதை தன் பிள்ளைகளுக்கு  உணர வைக்க வேண்டும். மதிப்பெண் மட்டும் வாழ்கையை நிர்ணயப்பதில்லை என்ற உண்மையை முதலில் பெற்றோர்கள் உணர்ந்து அதை தன் பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்.. அப்பொழுது தான் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மதிப்பில்லாமல் போகும் மதிப்பெண்காக மனதில் பல கனவுகளை சுமந்து கொண்டிருக்கும் இளம் பிஞ்சுகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும்  சம்பவங்கள் இனி நிகழாமல் தடுக்க முடியும். நாளை மறுநாள் வரும் செய்தித்தாளில் குறைவான மதிப்பெண் அல்லது  தேர்வில் தோல்வி என்ற காரணத்தால் மாணவன் அல்லது மாணவி தற்கொலை என்ற செய்தி வரக்கூடாது  என்ற பயம் கலந்த எதிர்ப்பார்ப்புகளுடன்.. கார்த்திக் பிரகாசம்..
தந்தை தன் மகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போது, மகள்: அப்பா நாம் எங்கே செல்கிறோம்..? அப்பா: பள்ளிக் கூடத்திற்கு.. மகள்: பள்ளிக்கூடத்திற்கு எதற்காக செல்ல வேண்டும்..? அப்பா: நல்ல பண்புகளைக் கற்றுக் கொள்வதற்காக.... மகள்:  நல்ல பண்புகள் என்றால் எவை..? அப்பா: சாதி மதம் இனம் பார்க்காமல் அனைவரிடமும் அன்பு செலுத்துவது. பிறகு நன்கு படித்து அறிவை வளர்த்துக் கொள்வது.. மகள்: அப்போ சாதி முக்கியம் இல்லையா..? அப்பா:இல்லவே இல்ல மா.. மகள்: அப்புறம் ஏன் நேத்து பக்கத்துக்கு வீட்டு மாமாவிடம் என்னை பள்ளியில் சேர்ப்பதற்கு "சாதி சான்றிதழ்" கேட்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு இருந்தீர்கள். அப்பா: ...........?? இது தான் இன்றைய நிலைமை.. ""சாதிகள் இல்லையடி பாப்பா"" என்று கற்பிக்கப்படும் அதே பள்ளியில் தான் "சாதி சான்றிதழ்" அவசியம் என்ற கட்டாயமும் உள்ளது. பாரதியார் பாடிய பாடல்களும் பெரியார் தோற்றுவித்த அறிவு சிந்தனைகளும் வெறும் மதிப்பெண்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நடைமுறையில் பயன்படுத்த பல்வேறு வழிகளில் தடைகள் உள்ளன.. இந்த தடைகள் நீங்கா வரை ...
    சென்னையில் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இடங்களில் "தியாகராய நகரும்" ஒன்று. சொல்லப்போனால் சென்னையின் மிக முக்கியமான பகுதி. காலை முதல் இரவு வரை மனித தலைகளால் நிரப்பப்பட்டு இருக்கும். உயரமான கட்டிடத்தில் இருந்து பார்த்தால் வரிசையாக தெரியும் மனித தலைகள் புதிதாக அமைக்கப்பட்ட தார்ச் சாலை போல காட்சியளிக்கும். இன்னும் பண்டிகை நாட்கள் என்றால் சொல்லவே தேவை இல்லை.அந்த இடத்தில் டீக்கடை வைத்திருப்பவன் கூட கோடிஸ்வரன் ஆகி விடுவான். அந்த அளவுக்கு மக்கள் கூட்டம் அலை மோதும்.     துணிக் கடை,நகைக் கடை என்று மக்கள் வெள்ளமாய்த் திரண்டு இருப்பர். நகைக் கடைக்கு வெளியில் நின்று பார்த்துக் கொண்டிருப்பவன் "இவனுக்கெல்லாம்  மட்டும் எப்படி காசு கிடைக்குது" என்று பெருமூச்சு விட்டுவிட்டு செல்வான்.     மக்கள் அவர்கள் வாங்கும் பொருள்களின் கவர்கள், திண்பண்டங்களின் பேப்பர்கள்,கடையில் கொடுத்த விளம்பர பேப்பர்கள் மற்றும் வழியில் கொடுக்கப்பட்ட விளம்பர அட்டைகள் என அனைத்துக் குப்பைகளையும் அந்த இடத்திலேயே எரிந்து விட்டு சென்று விடுவார்கள். அப்போது ஏதும் தெரியாது...
நம் நாட்டில் பேச்சுலர்க்கு  வீடு கிடைப்பதும், படித்தவனுக்கு வேலைக் கிடைப்பதும் ரொம்ப கஷ்டம்.. கார்த்திக் பிரகாசம்..
முதல் நாளிலேயே 65000 பொறியியல் விண்ணப்பங்கள் விற்பனை.. நம்மலலாம் ஆயிரம் அப்துல் கலாம் வந்தாலும் திருத்தவே முடியாது.. கார்த்திக் பிரகாசம்..
இன்றைய சூழ்நிலையில் பைனான்சில் பணம் போட்டவன் நிலைமையும் பொறியியலில் பட்டம் பெற்றவன் நிலைமையும் ஏறக்குறைய ஒன்று தான்.. இருவருக்கும் மிச்சம் இருப்பது என்னவோ ஏமாற்றமும், யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மன நிலையும் மட்டுமே.. இரண்டுக்குமே காரணம் நம் மனதின் ஓரத்தில் ஒன்றி இருக்கும் பேராசை. பெரும்பாலனோர் தன் பணத்தைப் பாதுக்காக்க  மட்டும் பைனான்சில் பணம் போடுவது கிடையாது அவன் தரும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தான்.. அதே போல பொறியியலைத் தேர்வு செய்யும் அதிகப்படியானோர் அறிவை வளர்த்துக் கொள்ள  அத்துறையை விரும்புவது அல்ல அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு தான்.. அறிவை வளர்த்துக் கொள்ளப் படிக்காமல் சம்பளத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு எத்துறையைத் தேர்வு செய்து படித்தாலும் அத்துறையில் வேலையில்லாப்  பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும்.. கார்த்திக் பிரகாசம்..