Skip to main content
    சென்னையில் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இடங்களில் "தியாகராய நகரும்" ஒன்று. சொல்லப்போனால் சென்னையின் மிக முக்கியமான பகுதி. காலை முதல் இரவு வரை மனித தலைகளால் நிரப்பப்பட்டு இருக்கும். உயரமான கட்டிடத்தில் இருந்து பார்த்தால் வரிசையாக தெரியும் மனித தலைகள் புதிதாக அமைக்கப்பட்ட தார்ச் சாலை போல காட்சியளிக்கும். இன்னும் பண்டிகை நாட்கள் என்றால் சொல்லவே தேவை இல்லை.அந்த இடத்தில் டீக்கடை வைத்திருப்பவன் கூட கோடிஸ்வரன் ஆகி விடுவான். அந்த அளவுக்கு மக்கள் கூட்டம் அலை மோதும்.

    துணிக் கடை,நகைக் கடை என்று மக்கள் வெள்ளமாய்த் திரண்டு இருப்பர். நகைக் கடைக்கு வெளியில் நின்று பார்த்துக் கொண்டிருப்பவன் "இவனுக்கெல்லாம்  மட்டும் எப்படி காசு கிடைக்குது" என்று பெருமூச்சு விட்டுவிட்டு செல்வான்.

    மக்கள் அவர்கள் வாங்கும் பொருள்களின் கவர்கள், திண்பண்டங்களின்
பேப்பர்கள்,கடையில் கொடுத்த விளம்பர பேப்பர்கள் மற்றும் வழியில் கொடுக்கப்பட்ட விளம்பர அட்டைகள் என அனைத்துக் குப்பைகளையும் அந்த இடத்திலேயே எரிந்து விட்டு சென்று விடுவார்கள். அப்போது ஏதும் தெரியாது.. ஏனெனில் இது மிக சாதாரணமான விஷயம்.

    ஆனால் நள்ளிரவு 12 மணிக்கு மேல் மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து ரங்கநாதன் தெரு வழியாக நடந்து வந்தால் ஒவ்வொரு கடைக்கு வெளியையும் 20 முதல் 30 நபர்கள் இருக்கின்றனர். சிறுவர் முதல் வயதான பாட்டி வரை.. அவர்கள் செய்யும் வேலை உண்மையிலேயே மனதை நெகிழ வைக்கிறது. ஒவ்வொரு கடைக்கு முன்னும் அவர்கள் மற்றவர்கள் இட்டுச் சென்ற குப்பைகளையும் கழிவுகளையும் தங்கள் கையால் அள்ளிச் சுத்தம் செய்துக் கொண்டிருக்கின்றனர். யாரோ விட்டுச் சென்ற குப்பைகளை யாரோ இவர்கள் சுத்தம் செய்துக் கொண்டிருக்கின்றனர். இதுக்கு ஒரு சூப்பர்வைசர் வேற.. அத அள்ளு இத அள்ளு என்று அதிகாரம் செய்ய. இதைப் பார்த்த அடுத்த நொடியே ஒரு குற்ற உணர்ச்சி மனதை அடைத்துக் கொண்டது. ஏனெனில் நானும் அதே சாலையில் எத்தனையோ முறை குப்பைகளை எறிந்து விட்டுச் சென்றிருக்கிறேன்.

    நாம் செய்யும் சின்ன செயல் கூட கண்ணுக்குத் தெரியாமல் யாரோ ஒருவரை கஷ்டபடுத்துகிறது. நம் கழிவுகளை குப்பைகளை மற்றொருவர் சுத்தம் செய்ய வைப்பது நாம் அவருக்கு கொடுக்கும் மிக கொடுமையான தண்டனை. அந்த தண்டனையை இனி  மற்றவருக்குக் கொடுக்காமல் குப்பைகளை அதற்கான குப்பைத் தொட்டியில் போட்டு "பொது இடத்தை அசுத்தப்படுத்த கூடாது" என்ற எண்ணமும் மனதைக் குட்டியது. உடனே கையில் வைத்திருந்த பிஸ்கட் பாக்கெட் கவரைக் குப்பை தொட்டியில் இட்டுவிட்டு மன நிம்மதியுடன் சென்றேன்..

கார்த்திக் பிரகாசம்..

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...