Skip to main content
தந்தை தன் மகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போது,

மகள்: அப்பா நாம் எங்கே செல்கிறோம்..?
அப்பா: பள்ளிக் கூடத்திற்கு..
மகள்: பள்ளிக்கூடத்திற்கு எதற்காக செல்ல வேண்டும்..?
அப்பா: நல்ல பண்புகளைக் கற்றுக் கொள்வதற்காக....
மகள்:  நல்ல பண்புகள் என்றால் எவை..?
அப்பா: சாதி மதம் இனம் பார்க்காமல் அனைவரிடமும் அன்பு செலுத்துவது. பிறகு நன்கு படித்து அறிவை வளர்த்துக் கொள்வது..
மகள்: அப்போ சாதி முக்கியம் இல்லையா..?
அப்பா:இல்லவே இல்ல மா..
மகள்: அப்புறம் ஏன் நேத்து பக்கத்துக்கு வீட்டு மாமாவிடம் என்னை பள்ளியில் சேர்ப்பதற்கு "சாதி சான்றிதழ்" கேட்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு இருந்தீர்கள்.
அப்பா: ...........??

இது தான் இன்றைய நிலைமை.. ""சாதிகள் இல்லையடி பாப்பா"" என்று கற்பிக்கப்படும் அதே பள்ளியில் தான் "சாதி சான்றிதழ்" அவசியம் என்ற கட்டாயமும் உள்ளது. பாரதியார் பாடிய பாடல்களும் பெரியார் தோற்றுவித்த அறிவு சிந்தனைகளும் வெறும் மதிப்பெண்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நடைமுறையில் பயன்படுத்த பல்வேறு வழிகளில் தடைகள் உள்ளன.. இந்த தடைகள் நீங்கா வரை "சாதிகள் இல்லையடி பாப்பா" "யாதும் ஊரே யாவரும் கேளிர்" "அறம் செய்ய விரும்பு" போன்ற பல்வேறு ஒற்றுமையை உண்டாக்கும் கருத்துகளை அறிவிப்பு பலகைகளிலும் ஆட்டோவிலும் மட்டுமே காண முடியும்.

கார்த்திக் பிரகாசம்..



Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...