நம்மை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் அச்சாணி. சாமானியன் முதல் சக்கரவர்த்தி வரை அனைவரையும் எந்த நிலைக்கு வேண்டுமானாலும் ஆயுத்தப்படுத்தும் ஆயுதம். பட்டினியில் இருப்பவனுக்குக் கூட பஞ்சம் இல்லாமல் கிடைக்கும் ஒரே விஷயம் "ஆசை" மட்டும் தான்.
அத்தகைய நம் ஆசையை நமக்குள் மட்டும் வைத்துக் கொண்டால் எந்த பிரச்னையும் இல்லை. அதை நாம் சம்பந்தப்பட்டவர்களிடம் திணிக்கும் போது தேவையற்ற விரக்தி வெறுப்பு மற்றும் ஏமாற்றம் தான் மிச்சம்.
இதற்கு ஒரு சிறு உதாரணம் இன்றைய "தி ஹிந்து" நாளிதழில் "ஆளுக்கொரு ஆசை" என்ற தலைப்பில் வெளியான சிறுக்கதை..
திருமணம் முடிந்த தினம் இரவு மணப்பெண்ணை அவளுடைய தோழிகள் முதலிரவுக்காக அலங்காரம் செய்து தயார்ப்படுத்திக் கொண்டிருந்தனர். மணப்பெண்ணும் முதலிரவு பற்றிய பதற்றத்துடனும் அதை விட அதிதமான ஆர்வத்துடனும் காத்திருந்தாள். ஒரு சில நிமிடங்களில் மாமியார் வந்து தன் மருமகளிடம் ""இந்த வீட்டில் குழந்தை சத்தம் கேட்டு ரொம்ப வருஷம் ஆச்சு. அதனால எண்ணி பத்து மாசத்துல என் கையில ஒரு பேரனையோ பேத்தியையோ பெத்து கொடுத்து விடு"" என்று அவளின் கன்னத்தில் கிள்ளி விட்டுச் சென்றாள். அந்த மருமகளும் கன்னங்கள் சிவந்து வெட்கத்துடன் தலைக் குனிந்திருந்தால். சிறிது நேரத்தில் அந்த பெண்ணின் அம்மா பால் சொம்பினை மகளிடம் கொடுக்க வந்தார். பால் சொம்பினை மகளின் கையில் கொடுத்து விட்டு ""இதோ பாருடி செல்லம் உனக்கே தெரியும் இந்த கல்யாணத்த முடிக்க உங்கப்பா எவளோ கடன் வாங்கி இருக்காருன்னு. அதெல்லாம் கட்டி முடிக்கவே எப்படியும் இன்னும் ரெண்டு வருஷம் ஆய்டும். அதுக்குள்ள நீ உண்டாயிட்டா அதுக்கு வேற சீரு செனத்தின்னு அந்த மனுஷன் மறுபடியும் கடன் தான் வாங்கி மாட்டிக்குவாறு. அதனால அப்பாவோட கஷ்டத்த புரிஞ்சிகிட்டு குழந்தைய ஒரு வருஷம் தள்ளி போடுடி"" என்று கூறிவிட்டு பால் சொம்பினைக் கையில் கொடுத்துச் சென்றாள். அந்தப் பெண் இருவரின் ஆசைகளையும் கேட்டுவிட்டு அந்த புதுப்பெண் தன் ஆசையை மறந்து நின்றாள்.
ஆசைப் பட அனைவருக்கும் உரிமை உள்ளது. அது நம் ஆசை அதை நாம் தான் ஆசைப்படுகிறோம். நாம் ஆசைப்பட்டது நமக்கு கிடைக்கவில்லை என்பதனாலோ அல்லது நம் ஆசை என்ற காரணத்தினாலோ அதை மற்றவர்கள் மீது திணிக்கக்கூடாது. நம்மை போல நாம் சம்பந்தப்பட்டவர்களுக்கும் அவர்களுக்கென்று தனிப்பட்ட ஆசைகள் இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும்..
கார்த்திக் பிரகாசம்...
அத்தகைய நம் ஆசையை நமக்குள் மட்டும் வைத்துக் கொண்டால் எந்த பிரச்னையும் இல்லை. அதை நாம் சம்பந்தப்பட்டவர்களிடம் திணிக்கும் போது தேவையற்ற விரக்தி வெறுப்பு மற்றும் ஏமாற்றம் தான் மிச்சம்.
இதற்கு ஒரு சிறு உதாரணம் இன்றைய "தி ஹிந்து" நாளிதழில் "ஆளுக்கொரு ஆசை" என்ற தலைப்பில் வெளியான சிறுக்கதை..
திருமணம் முடிந்த தினம் இரவு மணப்பெண்ணை அவளுடைய தோழிகள் முதலிரவுக்காக அலங்காரம் செய்து தயார்ப்படுத்திக் கொண்டிருந்தனர். மணப்பெண்ணும் முதலிரவு பற்றிய பதற்றத்துடனும் அதை விட அதிதமான ஆர்வத்துடனும் காத்திருந்தாள். ஒரு சில நிமிடங்களில் மாமியார் வந்து தன் மருமகளிடம் ""இந்த வீட்டில் குழந்தை சத்தம் கேட்டு ரொம்ப வருஷம் ஆச்சு. அதனால எண்ணி பத்து மாசத்துல என் கையில ஒரு பேரனையோ பேத்தியையோ பெத்து கொடுத்து விடு"" என்று அவளின் கன்னத்தில் கிள்ளி விட்டுச் சென்றாள். அந்த மருமகளும் கன்னங்கள் சிவந்து வெட்கத்துடன் தலைக் குனிந்திருந்தால். சிறிது நேரத்தில் அந்த பெண்ணின் அம்மா பால் சொம்பினை மகளிடம் கொடுக்க வந்தார். பால் சொம்பினை மகளின் கையில் கொடுத்து விட்டு ""இதோ பாருடி செல்லம் உனக்கே தெரியும் இந்த கல்யாணத்த முடிக்க உங்கப்பா எவளோ கடன் வாங்கி இருக்காருன்னு. அதெல்லாம் கட்டி முடிக்கவே எப்படியும் இன்னும் ரெண்டு வருஷம் ஆய்டும். அதுக்குள்ள நீ உண்டாயிட்டா அதுக்கு வேற சீரு செனத்தின்னு அந்த மனுஷன் மறுபடியும் கடன் தான் வாங்கி மாட்டிக்குவாறு. அதனால அப்பாவோட கஷ்டத்த புரிஞ்சிகிட்டு குழந்தைய ஒரு வருஷம் தள்ளி போடுடி"" என்று கூறிவிட்டு பால் சொம்பினைக் கையில் கொடுத்துச் சென்றாள். அந்தப் பெண் இருவரின் ஆசைகளையும் கேட்டுவிட்டு அந்த புதுப்பெண் தன் ஆசையை மறந்து நின்றாள்.
ஆசைப் பட அனைவருக்கும் உரிமை உள்ளது. அது நம் ஆசை அதை நாம் தான் ஆசைப்படுகிறோம். நாம் ஆசைப்பட்டது நமக்கு கிடைக்கவில்லை என்பதனாலோ அல்லது நம் ஆசை என்ற காரணத்தினாலோ அதை மற்றவர்கள் மீது திணிக்கக்கூடாது. நம்மை போல நாம் சம்பந்தப்பட்டவர்களுக்கும் அவர்களுக்கென்று தனிப்பட்ட ஆசைகள் இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும்..
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment