Skip to main content

Posts

Showing posts from October, 2017
காமத்தில் திருப்தியென்பது செலவிடும் நேரத்தில் இல்லை..!!! அளவிடும் காதலில் உள்ளது...!!! கார்த்திக் பிரகாசம்...
வாயக் கட்டி வயித்தக் கட்டி வரிக் கட்டி வட்டிக் கட்டியே வாழ்ந்து சாகுது பாமர பொது சனம்...!!! ஊர ஏச்சி உண்மைய மறச்சி உணர்வுகள தொலைச்சி உள்ளதெல்லாம் கொள்ளடிச்சி வாயில ப...
சென்னை வந்தது முதலான ஐந்து வருடக் காலத்தில் ஐந்து நாள்கள் தொடர்ச்சியாக பண்டிகை விடுமுறையை முழுமையாக அனுபவித்தது இந்தமுறை தான். ஆர்ப்பாட்டமில்லாத, கழுத்தை நெரிக...
போலிசாரின் உத்தரவையும் மீறி சாலையில் போராட்டத்திற்கு குவியும் மக்கள் கூட்டத்தைப் போல சூரியனின் கடும் வெயிலையும் மீறி வானில் கருமேகக் கூட்டங்கள் திரண்டுக் கொ...
உன் முத்தமொன்றே போதும் ஆனாலென்ன ஒரு முத்தம் மட்டும் போதாது...!!! கார்த்திக் பிரகாசம்...
ஒரு ஆணைத் தகுதியானவனென ஒருமுறை கருதிவிட்டால் போதும் அவன் வேண்டினாலும் விலகினாலும் விரும்பினாலும் ஒதுங்கினாலும் அடைமழையாய் அன்பைக் கொட்டித் தீர்க்கிறார்கள...
சொந்த ஊர் பிழைப்புக்காக வேறெதோ மூலையில் தூக்கியெறிந்தாலும் விடுப்பில் திரும்பி வரும் போதெல்லாம் கால் பட்டதும் மடியில் தூக்கி வைத்து கொஞ்சும் சுகமிருக்கிறேத...
இருளை அறிய கண்கள் தேவையில்லை...!!! உன்னையறிய நீயென் அருகினிலிருக்க வேண்டிய அவசியமில்லை...!!! காற்றில் மிதந்து வரும் உந்தன் வாசனைச் சொல்லிவிடும் நிந்தன்  சௌக்கியத்தை...!!! ...
இன்பத்தினும் பேரின்ப மென்பது தீபாவளிக்கு தட்கல் டிக்கெட் கிடைப்பதாம் கார்த்திக் பிரகாசம்...
என் விருப்பமும் அவள் விருப்பமும் ஒருபோதும் ஒன்றுபோல இருந்ததில்லை...!!! அதே சமயம் வேறாகவும் இருந்ததில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...
பண்டிகை வந்தாச்சு...! பார்க்கும் கடைகளிளெல்லாம் மனிதத் தலைகள்...! எல்லாவற்றையும் வாங்கத் துடிக்கும் சில முகங்கள்...! எதையுமே வாங்க முடியாத ஏக்கத்தில் சில முகங்கள்...! நின...
வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் அமைவதென்பதெல்லாம் பெருஞ்சிறப்பான விடயமல்ல. பொழுது விடிவது போல்,  இரவு மடிவது போல் அதுவும் இயற்கையான தற்செயல். யார் விரும்பினாலும், வேண்டாவிட்டாலும் அது நடந்தே தீரும். ஆனால் அந்த நண்பர்களே வாழ்க்கையாகிவிடுவது என்பது வேறு...! அது சென்னையில் வெயிலும் மழையும் ஒன்றாக மண்ணை முத்தமிடுவது போன்றதொரு அரிய செயல். எல்லாருக்கும் எளிதாக அமைந்துவிடாது. மீசைக் கூட முளைக்காத பள்ளிப் பருவத்தில் பூத்த நட்பு, பத்தாண்டுகளைக் கடந்தும் ஒரே பாதையில் ஒன்றாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பயணத்தில் இலக்கென்பது இறப்பாக மட்டும்தான் முடியும். யாருக்குத் தெரியும் அதன்பின் கூட தொடரலாம்.  நம் சந்ததியினர் நம் நட்பை வளர்த்தெடுக்கலாம். ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம். இதன்பின் சொந்தமாய் யார் வந்துச் சேர்ந்தாலும், யார் யாரோ விட்டு விலகினாலும் இந்த நட்பும் நண்பர்களும் இருக்கும்வரை இந்த வாழ்வை வஞ்சகமில்லாமல், எந்தக் குறையுமில்லாமல் கரையேற்றிவிட முடியும் என்ற நம்பிக்கை மனமெங்கும் கானல் நீராய் அல்ல கடல் நீராய் நிரம்பி வழிகிறது. கண்ணதாசன் ஒரு தீர்க்கதரிசி. பிறப்பால் வந்த சொந்தங...
பரட்டைத் தலை பிறந்த நிறத்தை மறந்திருந்த சட்டை இடுப்பை இறுக்கமாக அணைத்திருந்த கால்சராய் காலணிகளைக் கண்டு வெகுநாட்கள் ஆகியிருந்த பாதங்கள் முகம் பாவமாக இருக்கல...
எனதருமை கள்வா...! காதலா...! கவிதைப் பேசியே மடங்கொண்ட மங்கையை மயக்குகிறாயே..! எங்கு கற்றாய் இந்த வித்தையை..? தாமரைப் பூவை இதழ்களிலும் முக்கனிச் சுவையை முறியடிக்கும் பெரு...

பயணம்

பயணத்தைப் பற்றி எழுதும் போது தன்னிச்சையான மகிழ்ச்சி. ஏனெனில் கண்டைந்த அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வது மட்டும் அதன் நோக்கமல்ல. படிப்பவர்களை நம்மோடு அழைத்துச் சென்று நாம் உணர்ந்து அனுபவித்த இன்பங்களை அவர்களையும் அனுபவிக்க வைப்பது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பதற்கேற்ப அவர்களையும் அந்த இடத்திற்கு பயணம் மேற்கொள்ளத் தூண்டும் ஒரு முயற்சி. எல்லாவற்றிற்கும் மேலாக அவ்வபோது அந்த பயணத்தை எழுத்துக்களின் வழி நாமே மற்றொரு முறை அசைப்போட்டு பார்த்திட ஒரு வாய்ப்பு. இயற்கையைத் தேடிச் செல்லும் அனைத்து பயணமமுமே இனிமையானது தான். காரணம் சமரசமில்லா இயற்கையின் அழகு ஒருபோதும் கண்களுக்கு தொய்வை தருவதில்லை. அதனழகை அள்ளி அள்ளி அருந்தலாம். கடந்த வார தொடர் விடுமுறை அப்படியொரு இனிமையான பயணத்தை அலுவலக நண்பர்களுடன் ஏற்படுத்தி தந்து உதவியது. ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் சன்னமான வெயிலுடன் சனிக்கிழமை பொழுது புலர்ந்தது.மழையின் கொடையினால் காணாமல் போயிருந்த அருவிகள் ஆங்காங்கே தங்கள் அடையாளத்தை மீண்டும் புதுப்பித்திருந்தன. மரங்களும் பூக்களும் இலைகளும் முலாம் போட்டு பூசியது போல் ப...