பயணத்தைப் பற்றி எழுதும் போது தன்னிச்சையான மகிழ்ச்சி. ஏனெனில் கண்டைந்த அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வது மட்டும் அதன் நோக்கமல்ல. படிப்பவர்களை நம்மோடு அழைத்துச் சென்று நாம் உணர்ந்து அனுபவித்த இன்பங்களை அவர்களையும் அனுபவிக்க வைப்பது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பதற்கேற்ப அவர்களையும் அந்த இடத்திற்கு பயணம் மேற்கொள்ளத் தூண்டும் ஒரு முயற்சி. எல்லாவற்றிற்கும் மேலாக அவ்வபோது அந்த பயணத்தை எழுத்துக்களின் வழி நாமே மற்றொரு முறை அசைப்போட்டு பார்த்திட ஒரு வாய்ப்பு.
ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் சன்னமான வெயிலுடன் சனிக்கிழமை பொழுது புலர்ந்தது.மழையின் கொடையினால் காணாமல் போயிருந்த அருவிகள் ஆங்காங்கே தங்கள் அடையாளத்தை மீண்டும் புதுப்பித்திருந்தன. மரங்களும் பூக்களும் இலைகளும் முலாம் போட்டு பூசியது போல் பொலிவுற குலுங்கின. தவிழ்ந்து செல்லும் மேகக் கூட்டங்கள் மலைகளை ஒளித்து வைத்து விளையாடிக் கொண்டிருந்தன. மரமும் மாநகரமும் உச்சியில் ஒய்யாரமாகக் காட்சியளித்தன.இரவு தன் குளிராடையை எடுத்து உடுத்தத் தொடங்கியிருந்த நேரம் படகுச் சவாரியின் பரவசத்தோடு ஏற்காடு எங்களை வழியனுப்பியது.
அடுத்த நாள் கொல்லிமலையில். ஆயிரத்து நானூறு மீட்டர் உயரத்தில் தன்பெரும் பேரழகை மறந்தும் மறைத்தும் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது கொல்லிமலை. இயற்கையின் பாதை இலகுவானதாக இருப்பதில்லை மொத்தம் எழுபது கொண்டை ஊசி வளைவுகள். ஆனால் உச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் ஆகாய கங்கை அருவி, மலையேறி வந்த களைப்பையும், மனதில் அண்டிக் கிடக்கும் கவலை, சோகம், வலி என அத்தனையையும் கழுவி மனதைச் சுத்தம் செய்துவிடுகின்றது. உச்சிக்குச் சென்று கிட்டத்தட்ட ஆயிரம் படிக்கட்டுகள் கீழே இறங்கினால் காத்திருக்கும் அபாய பேரழகு.
யோசித்து பார்த்தால் அருவியும் மழையும் ஒன்றாக கைக்கோர்த்து கொட்டியது போன்றதொரு மாயை. மீண்டும் ஆயிரம் படிக்கட்டுகள் மேலே ஏறவேண்டும் என்றென்னும் போது அருவியிலேயே தங்கிவிட துடிக்கும் மனம்.
இரவை நடுக்கி வேதனைப்படுத்தாமல் அழகாக தழுவிக் கொண்டது குளிர். அருவி தந்த இதமும், தழுவிச் சென்ற குளிரும் உறக்கத்தை ஒவ்வொருச் சொட்டாக அனுபவிக்க வைத்தது.
இயற்கையைத் தேடிச் சென்ற பயணத்தில், இரண்டு நாட்கள் இரண்டு மலைகளின் உச்சியில். அது தந்த மகிழ்ச்சியும், அணைப்பும் ஏராளம்.
கண்களை மூடினாலும் காட்சிகள் விரியும்.
கார்த்திக் பிரகாசம்...
இயற்கையைத் தேடிச் செல்லும் அனைத்து பயணமமுமே இனிமையானது தான். காரணம் சமரசமில்லா இயற்கையின் அழகு ஒருபோதும் கண்களுக்கு தொய்வை தருவதில்லை. அதனழகை அள்ளி அள்ளி அருந்தலாம்.
கடந்த வார தொடர் விடுமுறை அப்படியொரு இனிமையான பயணத்தை அலுவலக நண்பர்களுடன் ஏற்படுத்தி தந்து உதவியது.
ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் சன்னமான வெயிலுடன் சனிக்கிழமை பொழுது புலர்ந்தது.மழையின் கொடையினால் காணாமல் போயிருந்த அருவிகள் ஆங்காங்கே தங்கள் அடையாளத்தை மீண்டும் புதுப்பித்திருந்தன. மரங்களும் பூக்களும் இலைகளும் முலாம் போட்டு பூசியது போல் பொலிவுற குலுங்கின. தவிழ்ந்து செல்லும் மேகக் கூட்டங்கள் மலைகளை ஒளித்து வைத்து விளையாடிக் கொண்டிருந்தன. மரமும் மாநகரமும் உச்சியில் ஒய்யாரமாகக் காட்சியளித்தன.இரவு தன் குளிராடையை எடுத்து உடுத்தத் தொடங்கியிருந்த நேரம் படகுச் சவாரியின் பரவசத்தோடு ஏற்காடு எங்களை வழியனுப்பியது.
அடுத்த நாள் கொல்லிமலையில். ஆயிரத்து நானூறு மீட்டர் உயரத்தில் தன்பெரும் பேரழகை மறந்தும் மறைத்தும் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது கொல்லிமலை. இயற்கையின் பாதை இலகுவானதாக இருப்பதில்லை மொத்தம் எழுபது கொண்டை ஊசி வளைவுகள். ஆனால் உச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் ஆகாய கங்கை அருவி, மலையேறி வந்த களைப்பையும், மனதில் அண்டிக் கிடக்கும் கவலை, சோகம், வலி என அத்தனையையும் கழுவி மனதைச் சுத்தம் செய்துவிடுகின்றது. உச்சிக்குச் சென்று கிட்டத்தட்ட ஆயிரம் படிக்கட்டுகள் கீழே இறங்கினால் காத்திருக்கும் அபாய பேரழகு.
யோசித்து பார்த்தால் அருவியும் மழையும் ஒன்றாக கைக்கோர்த்து கொட்டியது போன்றதொரு மாயை. மீண்டும் ஆயிரம் படிக்கட்டுகள் மேலே ஏறவேண்டும் என்றென்னும் போது அருவியிலேயே தங்கிவிட துடிக்கும் மனம்.
இரவை நடுக்கி வேதனைப்படுத்தாமல் அழகாக தழுவிக் கொண்டது குளிர். அருவி தந்த இதமும், தழுவிச் சென்ற குளிரும் உறக்கத்தை ஒவ்வொருச் சொட்டாக அனுபவிக்க வைத்தது.
இயற்கையைத் தேடிச் சென்ற பயணத்தில், இரண்டு நாட்கள் இரண்டு மலைகளின் உச்சியில். அது தந்த மகிழ்ச்சியும், அணைப்பும் ஏராளம்.
கண்களை மூடினாலும் காட்சிகள் விரியும்.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment