குப்பைகள் வெளியே சிதறிக் கிடக்க, காலியாக இருந்த குப்பைத் தொட்டிக்குப் பின்னால் அவன் ஒளிந்துக் கொண்டான்.
வீட்டு வாசலில் யாரோ இருவர் நின்று வாய்க்கு வந்தபடி கத்திக் கொண்டிருந்தனர். அசிங்கமான வார்த்தைகள். கேட்க முடியவில்லை. குரலை உற்றுக் கவனித்த போது எட்டு மாதத்திற்கு முன்பு வட்டிக்குப் பணம் கொடுத்திருந்த கேசவனும், செல்வராஜும் என்றுத் தெரிந்தது.
அவனுடைய மனைவி வாசற்படியில் படபடப்புடன் நின்றிந்தாள்.
"யம்மா.. மொதல்ல ஒம் புருஷன வெளிய வரச் சொல்லு" கேசவன் கத்தினான்.
"அவரு வீட்ல இல்லிங்க" உடைந்த குரலில் வார்த்தைகள் வந்தன.
"என்னம்மா.. எப்ப வந்துக் கேட்டாலும் இதையே சொல்ற... என்ன புருஷனும், பொண்டாட்டியுமா சேர்ந்துக்கிட்டு ட்ராமா பண்றீங்களா"
"இத பாரும்மா. வீட்டுக்குள்ள வந்து பண்ட பாத்திரத்தெல்லாம் தூக்கிட்டு போன அசிங்கமா போய்டுமேனு பாக்கறேன். ஒழுங்கு மரியாதையா அந்த நாதாரி பயல" பெரும்கோபம் கொண்டு வார்த்தைகளை விழுங்கினான் செல்வராஜ்.
அடுக்கு மாடி வீடுகளில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்த்தனர். அநேகமாக கரண்ட் இல்லை போலிருக்கிறது. பாதி மறைந்தும் மறையாமலும் கரண்ட் இல்லா பொழுதைப் போக்க கிடைத்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட மனமின்றி அவரவர் வீட்டு வாசல்களில் அக்கம்பக்கத்தினர் சுவாரசிய முகத்துடன் வீற்றிருந்தனர்.
"புள்ளமேல சத்தியமா சொல்றேன். அவரு வீட்டுக்கு வந்து முழுசா மூணு மாசம் ஆச்சுங்க." அடுத்த வார்த்தை வருவதற்குள் அழுகை வந்துவிட்டது அவளுக்கு.
"உம் புருஷன வாங்குன காச ஒழுங்கா வட்டியோட கொடுக்கச் சொல்லு.. இல்லனா நடக்கறதே வேற" கேசவன் கடுகடுத்தான்.
"அவரு வீட்டுக்கே வரதில்லைங்க" கண்ணீரினால் வார்த்தைகளின் வேகம் தடைப்பட்டது அவளுக்கு.
"அப்போ புருஷன் இல்லாத வீட்ல இருந்துகிட்டு என்ன பண்ணப்போற.. அதுக்குப் பேசாம அவன் வாங்குன காசுக்கும் வட்டிக்குமா சேத்து என்கூட வந்து படுத்துட்டுப் போ. கடனாவது கழியும்" கோபத்தில் வார்த்தைகளை எறிந்தான் செல்வராஜ்.
பொத்தி வைத்திருந்த கண்ணீர் பொலபொலவென்று கொட்டியது அவளுக்கு. குனிந்த தலை நிமிராமல் அழுதுக் கொண்டே இருந்தாள். அவமானத்தில் நெஞ்சு படபடவென்று அடித்தது. முகம் முழுவதும் உதிராத வியர்வைத் துளிகள் வியாபித்திருந்தன. விரல்களை பின்னிப் பின்னி நீட்டி மடக்கினாள்.
கண்ணீரைத் துடைத்துக் கொண்டே தலை நிமிர்ந்தாள். முகம் ஏதோ தீர்மானத்திற்கு வந்துவிட்டதைப் போல் தெளிவுற்றிருந்தது.
"சரிங்க... படுக்குறேன்" பொட்டில் அறைந்தது போல தீர்க்கமாகச் சொன்னாள்.
நிராதரவான நிலையும், இயலாமையும் அவற்றிற்கும் மேலாக உச்ச டெசிபலில் உடலில் ஓடிக் கொண்டிருந்த உணர்ச்சி வேகமும் அவளேயே அறியாமல் அதைச் சொல்ல வைத்தன.
செல்வராஜ் அதிர்ந்து போனான். அவள் அந்த பதிலைக் கூறிய பிறகுதான் ஒரு பெண்ணைப் பார்த்து எவ்வளவு கேவலமான வார்த்தைகளைக் கூறியிருக்கிறோம் என்று உரைத்தது.
திரும்ப பேசாமல் கேசவனும், செல்வராஜும் குற்றவுணர்ச்சியில் நின்றிருந்தார்கள். அவளின் முகத்தைப் பார்க்க இருவருக்குமே வெட்கமாக இருந்ததது.
சிறிது நேரத்திற்கு அந்த இடமே பேரமைதியில் மூழ்கியது போலிருந்தது.
அமைதியை செல்வராஜே உடைத்தான். ஒம் புருசன் வந்தானா நாங்க வந்தோம் கொடுத்த பணத்தக் கேட்டோம்னு சொல்லு. கேசவனும், செல்வராஜும் ஏதோ முணுமுணுத்தவாறே திரும்பி பார்க்காமல் வேட்டியை இறக்கிவிட்டுக் கொண்டு நடையைக் கட்டினர்.
அவள் அப்படியே வாசற் படியில் அமர்ந்துக் கொண்டாள்.
அதிர்ச்சியுடனும், அதே சமயம் பொழுதைப் போக்கிய திருப்தியுடனும் அக்கம்பக்கத்தினர் மெல்ல வீட்டிற்குள் நுழைந்தனர்.
கேசவனும், செல்வராஜும் போகும்வரை குப்பைத் தொட்டிக்கு வெளியே சிதறிக் கிடக்கும் குப்பைகளோடு அவனும் ஓர் குப்பையாக அங்கேயே ஒளிந்திருந்தான்.
கார்த்திக் பிரகாசம்...
வீட்டு வாசலில் யாரோ இருவர் நின்று வாய்க்கு வந்தபடி கத்திக் கொண்டிருந்தனர். அசிங்கமான வார்த்தைகள். கேட்க முடியவில்லை. குரலை உற்றுக் கவனித்த போது எட்டு மாதத்திற்கு முன்பு வட்டிக்குப் பணம் கொடுத்திருந்த கேசவனும், செல்வராஜும் என்றுத் தெரிந்தது.
அவனுடைய மனைவி வாசற்படியில் படபடப்புடன் நின்றிந்தாள்.
"யம்மா.. மொதல்ல ஒம் புருஷன வெளிய வரச் சொல்லு" கேசவன் கத்தினான்.
"அவரு வீட்ல இல்லிங்க" உடைந்த குரலில் வார்த்தைகள் வந்தன.
"என்னம்மா.. எப்ப வந்துக் கேட்டாலும் இதையே சொல்ற... என்ன புருஷனும், பொண்டாட்டியுமா சேர்ந்துக்கிட்டு ட்ராமா பண்றீங்களா"
"இத பாரும்மா. வீட்டுக்குள்ள வந்து பண்ட பாத்திரத்தெல்லாம் தூக்கிட்டு போன அசிங்கமா போய்டுமேனு பாக்கறேன். ஒழுங்கு மரியாதையா அந்த நாதாரி பயல" பெரும்கோபம் கொண்டு வார்த்தைகளை விழுங்கினான் செல்வராஜ்.
அடுக்கு மாடி வீடுகளில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்த்தனர். அநேகமாக கரண்ட் இல்லை போலிருக்கிறது. பாதி மறைந்தும் மறையாமலும் கரண்ட் இல்லா பொழுதைப் போக்க கிடைத்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட மனமின்றி அவரவர் வீட்டு வாசல்களில் அக்கம்பக்கத்தினர் சுவாரசிய முகத்துடன் வீற்றிருந்தனர்.
"புள்ளமேல சத்தியமா சொல்றேன். அவரு வீட்டுக்கு வந்து முழுசா மூணு மாசம் ஆச்சுங்க." அடுத்த வார்த்தை வருவதற்குள் அழுகை வந்துவிட்டது அவளுக்கு.
"உம் புருஷன வாங்குன காச ஒழுங்கா வட்டியோட கொடுக்கச் சொல்லு.. இல்லனா நடக்கறதே வேற" கேசவன் கடுகடுத்தான்.
"அவரு வீட்டுக்கே வரதில்லைங்க" கண்ணீரினால் வார்த்தைகளின் வேகம் தடைப்பட்டது அவளுக்கு.
"அப்போ புருஷன் இல்லாத வீட்ல இருந்துகிட்டு என்ன பண்ணப்போற.. அதுக்குப் பேசாம அவன் வாங்குன காசுக்கும் வட்டிக்குமா சேத்து என்கூட வந்து படுத்துட்டுப் போ. கடனாவது கழியும்" கோபத்தில் வார்த்தைகளை எறிந்தான் செல்வராஜ்.
பொத்தி வைத்திருந்த கண்ணீர் பொலபொலவென்று கொட்டியது அவளுக்கு. குனிந்த தலை நிமிராமல் அழுதுக் கொண்டே இருந்தாள். அவமானத்தில் நெஞ்சு படபடவென்று அடித்தது. முகம் முழுவதும் உதிராத வியர்வைத் துளிகள் வியாபித்திருந்தன. விரல்களை பின்னிப் பின்னி நீட்டி மடக்கினாள்.
கண்ணீரைத் துடைத்துக் கொண்டே தலை நிமிர்ந்தாள். முகம் ஏதோ தீர்மானத்திற்கு வந்துவிட்டதைப் போல் தெளிவுற்றிருந்தது.
"சரிங்க... படுக்குறேன்" பொட்டில் அறைந்தது போல தீர்க்கமாகச் சொன்னாள்.
நிராதரவான நிலையும், இயலாமையும் அவற்றிற்கும் மேலாக உச்ச டெசிபலில் உடலில் ஓடிக் கொண்டிருந்த உணர்ச்சி வேகமும் அவளேயே அறியாமல் அதைச் சொல்ல வைத்தன.
செல்வராஜ் அதிர்ந்து போனான். அவள் அந்த பதிலைக் கூறிய பிறகுதான் ஒரு பெண்ணைப் பார்த்து எவ்வளவு கேவலமான வார்த்தைகளைக் கூறியிருக்கிறோம் என்று உரைத்தது.
திரும்ப பேசாமல் கேசவனும், செல்வராஜும் குற்றவுணர்ச்சியில் நின்றிருந்தார்கள். அவளின் முகத்தைப் பார்க்க இருவருக்குமே வெட்கமாக இருந்ததது.
சிறிது நேரத்திற்கு அந்த இடமே பேரமைதியில் மூழ்கியது போலிருந்தது.
அமைதியை செல்வராஜே உடைத்தான். ஒம் புருசன் வந்தானா நாங்க வந்தோம் கொடுத்த பணத்தக் கேட்டோம்னு சொல்லு. கேசவனும், செல்வராஜும் ஏதோ முணுமுணுத்தவாறே திரும்பி பார்க்காமல் வேட்டியை இறக்கிவிட்டுக் கொண்டு நடையைக் கட்டினர்.
அவள் அப்படியே வாசற் படியில் அமர்ந்துக் கொண்டாள்.
அதிர்ச்சியுடனும், அதே சமயம் பொழுதைப் போக்கிய திருப்தியுடனும் அக்கம்பக்கத்தினர் மெல்ல வீட்டிற்குள் நுழைந்தனர்.
கேசவனும், செல்வராஜும் போகும்வரை குப்பைத் தொட்டிக்கு வெளியே சிதறிக் கிடக்கும் குப்பைகளோடு அவனும் ஓர் குப்பையாக அங்கேயே ஒளிந்திருந்தான்.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment