இந்தக் காலகட்டத்தில் நீ வாழ்ந்திருந்தால்... வாழ்ந்து... இறந்திருந்தால்... நீ இறப்பதற்கு முன்பே மரணச் செய்தியை முந்தித் தருவதற்கு உன் விட்டு வாசலில் ஈக்களுக்கும் இடமில்லா அளவிற்குத் தொலைக்காட்சி படமிகள் சூழ்ந்திருக்கும் படமி வெளிச்சம் படும் போதெல்லாம் உன் நண்பர் என்று சொல்லிக் கொள்பவர்கள் கண்ணைக் கசக்குவார்கள் விளம்பர இடைவெளியின்றி இருபத்தி நான்கு மணி நேரமும் உன் இறுதி நிமிடங்கள் ஒளிபரப்பப்பட்டிருக்கும் சொற்ப ஆண்டுகளிலே அற்ப ஆயுளில் இறந்தது ஓர் சகாப்தம் என புது கவிதைகள் எழுதப்பட்டிருக்கும் நீயே மறந்து போன உன் பழைய கவிதைகள் வாசிக்கப்பட்டிருக்கும் உன்னோடு பழகியவர்கள் தம் நினைவுகளைப் பகிர்ந்திருப்பார்கள் உன் முதல் கவிதை எது என்று விவாதம் நடந்திருக்கும் அமெரிக்க அதிபர் இரங்கல் தெரிவித்திருப்பார் எல்லோருடைய அலைபேசியின் கட்செவி அஞ்சலிலும் உன் படம் பகிரப்பட்டிருக்கும் நீயும் உன் இறப்பிற்கு இறுதி வழியனுப்புதலுக்கு ஆட்கள் கூடவில்லையென வருத்தமடைய வேண்டிய அவசியமிருந்திருக்காது என்ன செய்ய உனக்கு வாய்த்தது அவ்வளவு தான் கார்த்திக் பிரகாசம்...