Skip to main content

யாம் சில அரிசி வேண்டினோம்

எழுதியவர்: அழகிய பெரியவன்
வகைமை: நாவல்
வெளியீடு: நீலம் பதிப்பகம்

கேள்வி கேட்டால் அதிகார அமைப்பிற்கு அறவே பிடிப்பதில்லை. அதிலும் நிரந்த வருமானமும், நிலையான வாழ்வாதாரமுமின்றி அன்றாடத்தின் பொழுது நிச்சயமற்ற பொருளாதார சூழல் ஈனும் குண்டூசி அளவிலான கரிசனத்தினால் இன்னும் உயிரோடு உலவிக் கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட பாமரன் கேட்டால்?

அவ்வாறு கேள்வி கேட்கப்படுவதை, தம் அடிப்படை கட்டமைவின் விறைப்புத் தன்மைக்கு நேர்ந்த கடும் அவமானமாகக் கருதுகின்றது அதிகார அமைப்பு.

மேலும் குறிப்பிட்ட ஒரு அமைப்பின் கிளை அதிகாரம் கேள்விக்குள்ளாகும் போது, நியாய தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டு ஒரே மரத்தின் பல கிளைகளாய் விற்றிருக்கும் இதர அதிகாரங்களும் ஒன்றிணைந்து அதிகாரத்தின் குரலாய் கூட்டுச் சேர்ந்து "உனக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா?" என்ற ஒருவிதமான அருவருப்புத் தன்மையோடு சாமானியனின் கழுத்தை நெரிக்கின்றன. இதன் மறைமுக தொனி, “நீயெல்லாம் எங்கள கேள்வி கேக்குற அளவுக்கு தெகிரியம் வந்துடுச்சா” என்பதே. பொது சமுகத்தில் அதிகாரத்திற்கென்று கட்டமைக்கப்பட்டிருக்கும் பவிசு விளைவிக்கும் எரிச்சலே, நீ எப்படி என்னைப் பார்த்து கேள்வி கேட்கலாம். என் பதவியின் மதிப்பு தெரியுமா? அதன் அதிகாரம் தெரியுமா? என கேக்குற என்று திருப்பி சாமானியனிடம் பதிலுக்கும் எழுப்பப்படும் இளக்கார கேள்விகள்.

சாமானியனுக்கு எந்நாளும் இந்த மாதிரி தைரியம் வந்துவிடக் கூடாது என்பதே எல்லாவிதமான அதிகாரத்திற்கும் முழுமூச்சான குறிக்கோள். இது பல இடங்களில் நேரடியாகவும், நாள்பட்ட நம்பகத் தன்மையை வளர்த்து நேரம் பார்த்து வஞ்சிப்பது என மறைமுகமாகவும், சமூகத்தின் பல அடுக்குகளில் அரங்கேறுகிறது

குரல்வளை நசுக்கப்படும் சாமானிய சமூகத்தின் கரத்தில் இருக்கும் சக்திவாய்ந்த ஒரே ஆயுதம் சட்டம். ஜனநாயகத்தின் மீது பற்று கொண்ட அவர்களின் ஒரே நம்பிக்கை நீதிமன்றம்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...