Skip to main content

Posts

Showing posts from May, 2025

பனிக்குல்லா

வகைமை: சிறுகதைகள்  எழுதியவர்: கவிதைக்காரன் இளங்கோ வெளியீடு: யாவரும் பதிப்பகம் ஏதேனும் இலக்கிய நிகழ்வில் கவிதைக்காரன் இளங்கோ உரையாற்றுகிறார் என்று தெரிந்தால், மறுயோசனையே இன்றி அந்நிகழ்வுக்குச் செல்ல முடிவு செய்து விடுவேன். கவிதை, நாவல், சிறுகதைகள் குறித்த அறிமுக மற்றும் விமர்சன நிகழ்வுகளின் போதான அவரது உரைகளில், அதன் மையவோட்டத்தின் ஒரு சிக்கலான சாராம்சத்தை தனித்தனி கூறுகளாகப் பிரித்து ஆய்வு செய்யும் பகுப்பாய்வானது, வாசிப்பிலும், இலக்கியத்தை அணுகும் முறைமையில் என்னளவில் பல புதிய திறப்புகளை உண்டாக்கியிருக்கின்றன. அவரது அறிமுக உரையைக் கேட்டுவிட்டு வாங்கிய புத்தகங்களும் உண்டு. உதாரணத்திற்குச் சுஜாதா செல்வராஜின் "கடலைக் களவாடுபவள்" கவிதைத் தொகுப்பு, 'ஏக்நாத்'தின் "சாத்தா" நாவல் [ சட்டென நினைவில் தோன்றியவை]. பெரும்பாலான உரைகளில் ஒருவித PSYCOLOGICAL TOUCH இருப்பதை உணர்ந்திருக்கிறேன். ஒருவேளை "உளவியல்" படித்திருக்கிறாரோ எனப் பலமுறை யோசித்திருக்கிறேன். அவரிடம் நேரடியாகக் கேட்கச் சந்தர்ப்பம் வாய்த்ததில்லை. ஆனால் "பனிக்குல்லா" சிறுகதைத் தொகுப்பை வாசி...

தழல்

வகைமை: நாவல் எழுதியவர்: கிருஷ்ணமூர்த்தி வெளியீடு: யாவரும் பதிப்பகம் கிருஷ்ணமூர்த்தியின் "புனைசுருட்டு" என்று சிறுகதையை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். "பிருஹன்னளை, அஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள்" , "பாகன்" என மூன்று நாவல்களும், "சாத்தானின் சதைத் துணுக்கு" , "காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு" என்ற இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகி இருக்கின்றன. இவருடைய நான்காவது நாவல் "தழல்". "பலவீனமானவர்களால் என்றும் மன்னிக்கவே இயலாது. மன்னிப்பது என்பது பலமுள்ளவர்களுக்கான நற்குணம்" என்ற காந்தியின் கூற்றோடு துவங்குகிறது நாவல். செய்யாத குற்றத்திற்காக ஊரார் முன்பு பெற்ற அப்பாவே தன்னை திருடன் எனப் பழி சுமத்தி அடித்துத் தண்டிக்கும் இரக்கமற்ற செயலால் மனம் உடைந்து போகிறான் சிறுவன். இத்தனைக்கும் யார் திருடன் (!) எனத் தெரிந்திருந்தும் [அவருக்கு மட்டுமே], ஒரு குற்றவுணர்ச்சியும் இல்லாமல் கடக்கும் பொறுப்பற்ற அப்பாவைக் கடுமையாக வெறுக்கத் துவங்குகிறான். தினமும் இரவில், சிறுவயதில் திருடன் என்ற பட்டத்தோடு தலைகுனிந்து நின்ற அவமானம் வெவ்வேறு விதமாகக...

பகை பாவம் அச்சம் பழியென நமக்கு பெருஞ்சித்திரச் சொற்கள்

வகைமை: நாவல் எழுதியவர்: பாவெல் சக்தி வெளியீடு: எதிர் வெளியீடு பாவெல் சக்தியின் முந்தைய படைப்புகளான ‘நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள்’, “தொல் பசிக் காலத்துக் குற்ற விசாரணை அறைக்குள் மூடி முத்திரையிடப்பட்ட 8 தடயக்குறிப்புகள்’, ‘தீ எரி நகர மந்திரக்கிழவனின் செக்கர் நிறத்தொரு மரணம்” ஆகியவற்றை வாசித்திருக்கிறேன். [புத்தகத்தின் தலைப்புகளே வாசிப்பதற்கான குறைந்தபட்ச ஈர்ப்பை உண்டாக்கிவிடும்] அவருடைய இரண்டாவது நாவல் 'பகை பாவம் அச்சம் பழியென நமக்கு பெருஞ்சித்திரச் சொற்கள்' பாவெல் சக்தியின் கதை மாந்தர்கள் பெரும்பாலும் சாமானியர்கள். நீதிமன்ற வளாகத்தில் கால் வைக்கத் தேர்ந்த அவர்களது வாழ்வின் மறுபக்கத்தை வக்கீலுக்கான அடுக்கடுக்கான கேள்விகளின் மூலம் புலனாய்வு செய்வது அவரது தனிச்சிறப்பு. சாமானியர்கள் ஒரு பக்கம் என்றால், குற்றப் பின்னணி கொண்டவர்களைக் காபந்து செய்யச் சட்டத்தை வளைக்கும் வழக்குரைஞர்களும், அவர்களுக்கு உறுதுணையாகப் பணத்தை வாங்கிக் கொண்டு வேலை செய்யும் அதிகாரிகளும் மறுபக்கம். பாவெல் சக்தியின் பெரும்பாலான கதைகளில் தொடக்கம் முதலே ஒருவகையான இ...

இரவு

எழுதியவர்: எலீ வீசல் மொழிபெயர்ப்பு: ரவி.தி.இளங்கோவன் வகைமை: சுயசரிதை வெளியீடு: எதிர் வெளியீடு இனப்படுகொலைகள் எப்பொழுதுமே ஒரு அரசாங்கத்தாலேயே நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் அரசு நேரிடையாகச் செயல்படாமல், முறையாகப் பயிற்சிகள் அளிக்கப்பட்ட கும்பலை, வன்முறையாளர்களைப் பயன்படுத்தித் தாக்குதலை, கொலைகளை, வன்புணர்ச்சிகளை நிகழ்த்துகிறது - இனப்படுகொலை கண்காணிப்பு அமைப்பு சோபா சக்தியின் படைப்புக்களைத் தொடர்ச்சியாக வாசித்து முடித்த சிறு இடைவெளிக்குப் பிறகு வாசிக்கும் போர் மற்றும் இன அழிப்பு குறித்த நாவல் "இரவு".   நாஜி ஹிட்லர் படையின் யூத இன அழித்தொழிப்பின் ஒரு பகுதியான "ஆஸ்விட்ச்" வதை முகாமிலிருந்து தப்பிப் பிழைத்த பதினைந்து சிறுவனின் சுய சரிதை.   யூதர்களின் சொத்துகளைக் கொள்ளையடித்து, அவர்களைப் புழுவிலும் கீழான பிறவிகளாக நடத்திய நாஜிப்படை, அவர்கள் மீது கொஞ்சமும் இரக்கமற்ற குரூரமான சித்ரவதைகளை நிகழ்த்தியிருக்கிறது. வரலாற்றில் நிரந்தரமாகப் படிந்து போன ரத்த கறை.   யூதர் என்ற ஒரே காரணத்திற்காக வதைமுகாமில் அடைபட்டு, தங்களுக்கான சவக்குழிகளைத் தாங்களே தோண்டிக் கொண்ட மனிதர்களை நினைத்துப் பா...