Skip to main content

பனிக்குல்லா

வகைமை: சிறுகதைகள் 
எழுதியவர்: கவிதைக்காரன் இளங்கோ
வெளியீடு: யாவரும் பதிப்பகம்

ஏதேனும் இலக்கிய நிகழ்வில் கவிதைக்காரன் இளங்கோ உரையாற்றுகிறார் என்று தெரிந்தால், மறுயோசனையே இன்றி அந்நிகழ்வுக்குச் செல்ல முடிவு செய்து விடுவேன். கவிதை, நாவல், சிறுகதைகள் குறித்த அறிமுக மற்றும் விமர்சன நிகழ்வுகளின் போதான அவரது உரைகளில், அதன் மையவோட்டத்தின் ஒரு சிக்கலான சாராம்சத்தை தனித்தனி கூறுகளாகப் பிரித்து ஆய்வு செய்யும் பகுப்பாய்வானது, வாசிப்பிலும், இலக்கியத்தை அணுகும் முறைமையில் என்னளவில் பல புதிய திறப்புகளை உண்டாக்கியிருக்கின்றன.

அவரது அறிமுக உரையைக் கேட்டுவிட்டு வாங்கிய புத்தகங்களும் உண்டு. உதாரணத்திற்குச் சுஜாதா செல்வராஜின் "கடலைக் களவாடுபவள்" கவிதைத் தொகுப்பு, 'ஏக்நாத்'தின் "சாத்தா" நாவல் [சட்டென நினைவில் தோன்றியவை].

பெரும்பாலான உரைகளில் ஒருவித PSYCOLOGICAL TOUCH இருப்பதை உணர்ந்திருக்கிறேன். ஒருவேளை "உளவியல்" படித்திருக்கிறாரோ எனப் பலமுறை யோசித்திருக்கிறேன். அவரிடம் நேரடியாகக் கேட்கச் சந்தர்ப்பம் வாய்த்ததில்லை. ஆனால் "பனிக்குல்லா" சிறுகதைத் தொகுப்பை வாசிக்க எடுத்ததுமே அதற்கான விடை கிடைத்தது.

என் ஊகம் தவறவில்லை. கவிதைக்காரன் இளங்கோ உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார்.

"பனிக்குல்லா" தொகுப்பில் வரும் கதாபாத்திரங்களில் ஒன்றிரண்டு தவிர மற்ற அனைவருமே பக்குவப்பட்ட முதிர்ச்சித் தன்மையோடு இருக்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு விடயம் அவர்கள் அனைவருமே பெண்கள். இத்தொகுப்பின் பலமாக அதைத்தான் கருதுகிறேன்.

அப்படியாகப் பக்குவப்பட்ட முதிர்ச்சித் தன்மை வெளிப்படும் கதைகளாக "முள்" , "வளைவு" , "தொட்டிச் செடி" போன்றவை உள்ளன.

"முள்" கதையில், "சக மனிதர்கள் தங்கள் நிஜ இயல்பை வெளிப்படுத்தும் தக்க தருணத்துக்காகக் காத்துக் கொண்டிருப்பவர்களாகவே எப்போதும் படுகிறார்கள்". "வளைவு" கதையில் "புடவையில் போய் அதை டிக்ளேர் பண்ணும்போது என்னை ரொம்ப வலிமையா உணர்ந்தேன். எனக்குன்னு ஒரு தனி ஐடென்ட்டிட்டி உருவான மாதிரி ஃபீல் இருக்கு". "தொட்டிச் செடி" என்ற கதையில், "எல்லாத்தையும் வெளிப்படையா என்கிட்டே பேசியே, என்னைத் தயார் பண்ணிட்டாரோன்னு தோணுது" போன்ற பகுதிகளைச் சொல்லலாம்.

அந்த முதிர்ச்சித் தன்மையே சில பகுதிகளில் வாசகனைக் கதையிலிருந்து அந்நியப்படுத்தி அவ்விடங்களில் கதைசொல்லி நேரடியாக வெளிப்படுவதையும் காண முடிகிறது. உதாரணமாக "தையல்", மூன்றாம் கண் , "வெயிலுக்கு இதமாய் ஒரு கோல்ட் காஃபி" போன்ற கதைகள்.

எனக்கு மிகவும் பிடித்த கதை, "முள்". முற்காலத்தில் மீன் முள்ளினால் நேரவிருந்த காலத்தின் பிழையானது சரியான நேரத்தில் தவிர்க்கப்படுகிறது. ஆனால் அந்த துரோகத்தை நினைவுக் கூறும் இடத்தில் "சாப்பிட்டு முடித்த தட்டில்.. மூன்று மீன் முட்கள் மட்டும் மிஞ்சின. அது என்னை இம்சித்தது. பரவாயில்லை. இத்தனைக் காலம் மீன் சாப்பிடுவதைப் புறந்தள்ளாமல் கவனமாக என் உணவில் உட்கொண்டு வந்திருக்கிறேன்"எனக் கதை சொல்லிச் சொல்கிறான். என்னைப் பொறுத்தவரையில் கதையின் 'கிளாசிக்கல் டச்' இது. இந்த இடத்தில் ஒருவித தனித்துவத்தைக் கதை அடைகிறது என்றும் சொல்வேன். அதன் பின்பாக "வளைவு" மற்றும் "நேற்று என்று ஒன்று இருந்தது" கதைகளைச் சொல்லலாம். இவற்றில் "முள்" , "நேற்று என்று ஒன்று இருந்தது" என்ற இரண்டு கதையின் முடிவுகளிலும் நடந்த சம்பவத்தைக் கதையாக எழுதத் தொடங்குகிறான் கதை சொல்லி.

ஓரிரு நாட்களுக்கு முன்பு "பனிக்குல்லா" சிறுகதை கல்கியில் வெளியாகி பதினோர் ஆண்டுகள் ஆகிவிட்டன என்று முகநூலில் பதிவிட்டிருந்தார் கவிதைக்காரன் இளங்கோ. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அதற்கு முந்தைய இரவுதான் "பனிக்குல்லா" சிறுகதைத் தொகுப்பை வாசிக்க எடுத்தேன். அவரிடம் பகிர்ந்து கொண்ட WE USED TO BELIEVE IN CHAOS THEORY என்று சொன்னார்.

ஆம் அண்ணா..

LIFE IS AN ETRNAL CYCLE

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...