Skip to main content

பகை பாவம் அச்சம் பழியென நமக்கு பெருஞ்சித்திரச் சொற்கள்

வகைமை: நாவல்
எழுதியவர்: பாவெல் சக்தி
வெளியீடு: எதிர் வெளியீடு

பாவெல் சக்தியின் முந்தைய படைப்புகளான ‘நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள்’, “தொல் பசிக் காலத்துக் குற்ற விசாரணை அறைக்குள் மூடி முத்திரையிடப்பட்ட 8 தடயக்குறிப்புகள்’, ‘தீ எரி நகர மந்திரக்கிழவனின் செக்கர் நிறத்தொரு மரணம்” ஆகியவற்றை வாசித்திருக்கிறேன். [புத்தகத்தின் தலைப்புகளே வாசிப்பதற்கான குறைந்தபட்ச ஈர்ப்பை உண்டாக்கிவிடும்]

அவருடைய இரண்டாவது நாவல் 'பகை பாவம் அச்சம் பழியென நமக்கு பெருஞ்சித்திரச் சொற்கள்'

பாவெல் சக்தியின் கதை மாந்தர்கள் பெரும்பாலும் சாமானியர்கள். நீதிமன்ற வளாகத்தில் கால் வைக்கத் தேர்ந்த அவர்களது வாழ்வின் மறுபக்கத்தை வக்கீலுக்கான அடுக்கடுக்கான கேள்விகளின் மூலம் புலனாய்வு செய்வது அவரது தனிச்சிறப்பு. சாமானியர்கள் ஒரு பக்கம் என்றால், குற்றப் பின்னணி கொண்டவர்களைக் காபந்து செய்யச் சட்டத்தை வளைக்கும் வழக்குரைஞர்களும், அவர்களுக்கு உறுதுணையாகப் பணத்தை வாங்கிக் கொண்டு வேலை செய்யும் அதிகாரிகளும் மறுபக்கம்.

பாவெல் சக்தியின் பெரும்பாலான கதைகளில் தொடக்கம் முதலே ஒருவகையான இறுக்கம் விரவியிருக்கும். கதையின் போக்கில் ஆங்காங்கே சில பகடிகள் வெளிப்பட்டாலும் அடுத்த வரியிலேயே அது இறுக்கத்தை மேலும் தீவிரப்படுத்துவதாகவே இருக்கும். இந்த நாவல் அதிலிருந்து சற்று மாறுபட்டிருக்கிறது. கதையின் போக்கானது 'பகை' , 'பாவம்' , 'அச்சம்' , 'பழி' என நான்கு அத்தியாயங்களாக விரிகிறது.

காதல் மனைவி, அன்பான குழந்தை, கனவுகள் குறித்த விசாரணை என ஜாலியாக தொடங்குகிறது நாவல். ஆனால் அது பரபரப்பான திரில்லரை நோக்கிய நகர்விற்கான அடித்தளம் என்பதை அடுத்த சில பக்கங்களிலேயே வாசகனால் விளங்கிக் கொள்ள முடியும். பணத்தால் அதிகாரத்தையும், சட்டத்தையும் தனக்கு ஏற்றார் போல் வளைத்துக் கொள்ளும் குற்றவாளிகளும், அவர்கள் புரியும் குற்றங்களின் செய் நேர்த்தியும், அதற்கு அவர்கள் கொடுக்கும் தத்துவ விளக்கங்களும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. "காதலுக்கும், கடவுளுக்கும் சம்மந்தம் இல்லை", "காதலுக்குச் சாத்தான்தான் கடவுள்", "கடவுளுக்குப் பழியின் சாயல்" போன்ற தத்துவ விசாரணைகள் வாசிப்பின் சுவாரசியத்தைக் கூட்டுகின்றன. முதல் மூன்று [பகை, பாவம், அச்சம்] அத்தியாயங்களைக் கடந்து நான்காவதான "பழி" யில் முற்றிலும் வேறொரு தளத்தை வந்தடைகிறது நாவல்.

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...